யோகா என்ற சொல்லின் அர்த்தம் இணைதல் சேர்தல் ஒருமுகப்படுதல். ஓன்று சேர்க்கப்படும் ஆற்றலை எப்படி பயன் படுத்துவது என்று யோகா நமக்கு சொல்லி தருகிறது. உடல் பயிற்சி வேறு யோகா வேறு. வெளிப்புற உடலமைப்பை அழகு படுத்தாமல் உடலுக்கு உள் உள்ள உறுப்புகளின் பலத்தை செழுமைப் படுத்துவதே யோகா. மனத் தூய்மையும் முன்னிலை படுத்தப்படுகிறது. முறையாக தேர்ந்த பயிற்சியாளர் இல்லாமல் செய்தால் ஆபத்தான பின் விளைவுகள் வரும்.
பயிற்சிக்கு முன் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்:
அதிகாலை நான்கு மணிக்கு முன்பே எழுந்து மென்மையுடன் தளர்வான நடைப் பயிற்சி மேற் கொள்ள வேண்டும். உடல் சுத்தம் செய்யும் சில கடமைகளை முடித்து பயிற்சிகள் ஆரம்பிக்கலாம். 5 ல் இருந்து 7 மணிக்குள் பயிற்சி முடிக்கப் பட வேண்டும். பயிற்சி செய்யும் இடம் மிக சுத்தமாக காற்றோட்டமாக இருக்க வேண்டும். வெறும் தரையில் செய்யக் கூடாது. துணி விரித்து கொள்ளலாம். வெறும் வயிறோடு தான் பயிற்சி செய்ய வேண்டும். இயன்ற வரை மாலை இரவு வேலைகளில் பயிற்சி செய்யாமல் இருப்பது நலம். நேரம் கிடைக்க வில்லையெனில் உணவு முடிந்து 6 மணி நேரம் கழித்தே பயிற்சி செய்ய வேண்டும்.
மற்ற உடல் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் ''ஒருநாள் யோகா மறுநாள் மற்ற பயிற்சிகள் என மாறி மாறி'' செய்யலாம். உடலில் ஏதாவது பாதிப்புகள் உள்ளவர்கள் யோகா பயிற்சி யாளரிடம் தனது உடல் பிரச்சினைகளைப் பற்றி முன்னரே கூறி விட்டால் நல்லது. மனதை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். பேசக் கூடாது, பயிற்சியில் உடல் பாகங்களை மடக்கி நிமிர்த்தி வளைக்கும் போது மூச்சு வெளி விட வேண்டும். உடல் பாகங்களை தளர விடும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். ஆசனப் பயிற்சிகள் ஆரம்பிக்கும் போது பத்மாசனம் ஆரம்பித்து மூச்சு சுத்தம் செய்ய வேண்டும். பயிற்சி முடிக்கும் போது சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.
யோகா எப்போது செய்ய வேண்டும்... எப்படிச் செய்ய வேண்டும்?
Next Story
யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!
கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.
அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
“நீரிழிவு நோயைத் தடுக்க யோகா அவசியம்” - பா.ஜ.க. அமைச்சர்
உலகம் முழுக்க இன்று (நவ. 14ம் தேதி) உலக நீரிழிவு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தன்று மக்களுக்கு நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நீரிழிவு நோய் வந்தால் என்ன மாதிரியான சிக்கல்களை நாம் எதிர் கொள்வோம், அது நம் உடல் நலத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜி. கிஷான் ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள பர்கத்புரா பகுதியில் நீரிழிவு நோய் மையத்தை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று உலக நீரிழிவு நோய் தினம். நாம் நீரிழிவு நோயைக் கண்டு அச்சமடைய வேண்டாம். நாம், நமது உணவு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதேபோல், தினசரியான நமது நடவடிக்கைகள், உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோயை தள்ளி வைக்கலாம்.
ஐதராபாத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். இன்சூலின் எடுப்போர் நீரிழிவு நோயை முறியடிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போனில் மூழ்கியிருக்கின்றனர். அனைவரும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம், நீரிழிவு நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம்” எனப் பேசினார்.