Skip to main content

“பீஃப் சாப்பிடுவதால் என்ன பயன்” – விளக்குகிறார் சித்த மருத்துவர் ஷர்மிகா

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

 “What is the benefit of eating beef” – explains Siddha doctor Sharmika

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பீஃப் உணவு பற்றி கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கத்தினை  பின்வருமாறு  காணலாம்.

 

“பீஃப் சாப்பிடுவதால் நம் உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படப்போவதில்லை. மாட்டை சாமியாக பார்ப்பதால் தான் கெடுதல் என்று சொல்லுகின்றனர். அதனை அளவாக எடுத்துக் கொள்ளும் போது எந்தவிதக் கெடுதலும் இல்லை. எப்போதாவது ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். பீஃப் சாப்பிடுவதால் மட்டும் ஊட்டச்சத்து குறைபாடு எதுவும் ஏற்படுவதில்லை. அதில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது.  

 

வங்காள தேசத்தில் மிகவும் பணக்காரர்களும் இருக்கிறார்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இருவருக்குமான உணவாக அங்கு மாட்டுக்கறி உணவு அதிக புழக்கமாக இருக்கும். அவர்களுக்கு நார்மலாக உணவு கிடைப்பதில்லை. அதனால் தான் மாட்டுக்கறி எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நியூட்ரிசன் அளவு என்பது அவர்களுக்கு ஓரளவுக்கு சரி செய்யப்படுகிறது. ஆனால், ஆட்டுக்கறியை முதன்மையாகவும் அதிகமாகவும் மாட்டுக்கறியை இரண்டாம் பட்சமாக குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.  

 

மாட்டுக்கறி சாப்பிட்டால் மாடு மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஏனெனில், அதில் எனர்ஜி அதிகம். மாட்டை  சாமியாக பார்ப்பதால் தான் அதனை உண்ணக் கூடாது என்கிறார்கள். வெளிநாடுகளில் அப்படி பார்ப்பதில்லை. அங்கெல்லாம் அதிகம் மாட்டுக்கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.” இவ்வாறு தெரிவித்தார்.

 


 

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.