Skip to main content

தொப்பையை குறைப்பதற்கான வழிகள் - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

 Ways to reduce belly fat - explained by Siddha doctor Arun

 

தொப்பையைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்

 

தொப்பை விழுந்த பிறகு தான் தங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரும் நிலையில் இன்று பலர் இருக்கின்றனர். இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே தொப்பை இருக்கிறது. பொதுவாக நம்முடைய உழைப்பு என்பது இப்போது குறைந்துவிட்டது. படியில் கூட ஏறாமல் லிப்டைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். எந்தவிதமான உடற்பயிற்சியையும் இன்று நாம் மேற்கொள்வதில்லை. பள்ளிகளிலும் விளையாட்டு பீரியட் என்பதே இப்போது இல்லை. 

 

உணவு இப்போது அனைவருக்கும் தேவையான அளவு கிடைக்கிறது. பட்டினி என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இப்போது நாம் நிறைய சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் தின்பண்டங்கள் கூட ஆரோக்கியமானவையாக இருந்தன. இப்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகளையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். அனைவரின் வீடுகளுக்குள்ளும் இதுபோன்ற உணவுகள் இப்போது வந்துவிட்டன. உழைப்பு குறைந்ததால் உடல் பருமன் அதிகமாகிவிட்டது. தொப்பையும் வந்துவிட்டது.

 

வயிறு சுத்தமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பேதி மருந்து கொடுத்து அவ்வப்போது வயிற்றை சுத்தம் செய்யும் முறை அப்போது இருந்தது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று பேதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டிலேயே உள்ள சிறந்த மருந்து என்றால் அது விளக்கெண்ணெய் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துக்கொள்ளலாம். மலத்தை இலகுவாக்கக் கூடிய தன்மை இதற்கு இருக்கிறது. உணவிலேயே இதை நாம் பயன்படுத்த முடியும். 

 

அதிக அலைச்சலில் இருப்பவர்கள், உடல் சூடு அதிகம் இருப்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தேவைக்கேற்ப விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். சுடுதண்ணி அல்லது பாலில் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். இதன்மூலம் நீர் நீராக பேதி வெளியேறும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதுவே நின்றுவிடும். இதன் மூலம் உடல் சூடு குறையும். குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படும். குடல் சுத்தமாகும். தேவையற்ற வாயுக்கள் நீங்கும். இதன் மூலம் தொப்பையும் நிச்சயம் குறையும்.
 

 

 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.