Skip to main content

கரோனா காலகட்டத்தில் ஃபேஷனில் மூழ்கிய நவீன மக்கள்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

shakira

 

 

உலகமே கரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் இந்த சுழலில், சில வேடிக்கையான, விதித்திரமான, சுவாரஸ்யமாக  நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் கரோனா என்கின்ற கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மக்கள் பலர் தங்களது வீட்டில் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.

 

வெளிநாட்டில் பணிபுரிய சென்றோர் தங்களது வேலைகளை இழந்து சொந்த நாடு திரும்பினர். உள்நாடுகளின் பணிபுரிவோர் தங்களது வேலைகளை வீட்டிலேயே பணிபுரியும் சூழ்நிலை அமைந்தது. இந்த சூழலில், வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரத்தினை இணையத்தில் செலவிடுகின்றனர். அவ்வப்போது, சமூக வலைதளங்களில் கூட பெரும்பாலான வீடுகளில் பெண்கள் ஆண்களின் முடியை வெட்டுவது போன்ற ஏராளமான வீடியோக்கள் வைரலாகின.

 

அவற்றுள் பெருவாரியான மக்கள் சமூக வலைதளங்களில், அழகு குறிப்புகளை தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு கூகுளில் மக்கள் தேடிய தலைப்புகளின் மூலம் இது தெளிவாகத் புரிந்து கொள்ள முடிந்தது. இது தொடர்பாக ஃபேஷன்ஸ்டா காமில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் போலவே  இந்த 2020 ஆண்டும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளில் பேஷன்-அழகு-ஷாப்பிங் தொடர்பான  தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளன.

 

அழகு குறிப்புகளில் அதிகம் தேடப்பட்டவையாக, வீட்டில் முடி வெட்டுவது எப்படி, குறிப்பாக வீட்டில் ஆண்களின் முடியை வெட்டுவது எப்படி, முகப்பரு போன்றவற்றை எவ்வாறு அகற்றுவது, முகக் கவசம் எங்கு வாங்குவது, வீட்டில் உங்கள் தலைமுடிக்கு எப்படி வண்ணம் பூசுவது, கைகளை எப்படி கழுவ வேண்டும். சானிடைசர் (sanitizer) எங்கு வாங்குவது தொடர்பான தேடல்கள் முதலிடத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

 

மேலும், தோல் பராமரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் இருந்தன, குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் அமிலம் பற்றி பல கேள்விகள் இருந்தன.

 

இவற்றினுள் ஒரு பகுதி மக்கள் பிரபல ஆடைகளை இணையத்தில் தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக காணப்பட்டனர். அவற்றினுள், மிக சிறப்பு வாய்ந்த மெலனியா டிரம்ப் ஆடை (Melania Trump outfit), ஹாரி ஸ்டைல்ஸ் ஆடைகள் (Harry Styles outfits), ஷகிரா சூப்பர் பவுல் ஆடை (shakira Super Bowl outfit),நோவா சைரஸ் ஆடை (Noah Cyrus outfit),மரியா டெய்லர் ஆடை (Maria Taylor outfit),லில் நாஸ் எக்ஸ் கிராமி ஆடை ( Lil Nas X Grammy outfit),பில்லி எலிஷ் கிராமி ஆடை ( Billie Eilish Grammy outfit), பாடகி லிசோ கூடைப்பந்து விளையாட்டு ஆடை (Lizzo basketball game outfit), ஜெனிபர் லோபஸ் சூப்பர் பவுல் ஆடை, டிராவிஸ் ஸ்காட் நாட்மேன் (Travis Scott Natman outfit) ஆடை போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

 

இன்னும், சிலர் பேஷன் தொடர்பான கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருத்திருந்தனர். இண்டி ஸ்டைல் (Indie style), அர்பன்  ஸ்டைல் (Urban style), ஸ்ட்ரீட் வியர் ஸ்டைல் (Streetwear style), 90s கிட்ஸ் ஸ்டைல் (80s style clothing), 2k கிட்ஸ் ஸ்டைல் (Y2K style), ரெட்ரோ ஸ்டைல் (Retro style), போஹோ ஸ்டைல் (Boho style) போன்றவை அதிக அளவில் தேடப்பட்டவை.

 


 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.