Skip to main content

வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் எளிய மருந்து - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

 Simple Remedy for Stomach Ulcer - Explained by Ayurvedic  Doctor  Suganthan 

 

வயிற்றுப் புண், உடல் வலி ஆகியவற்றுக்கான சிறந்த மருந்து குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.

 

பிரண்டை என்பதில் பல வகைகள் இருக்கின்றன. இதற்கு வஜ்ரவல்லி என்கிற இன்னொரு பெயரும் இருக்கிறது. பல்வேறு பாக்டீரியாக்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடிய சக்தி பிரண்டைக்கு இருக்கிறது என்பது கொரோனா காலத்தில் கண்டறியப்பட்டது. நேரமின்மை காரணமாக நாம் பிரண்டையை அதிகம் பயன்படுத்துவதில்லை. அந்தக் காலத்தில் பிரண்டைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உணவில் பல்வேறு வகைகளில் பிரண்டை பயன்படுத்தப்பட்டு வந்தது. 

 

பிரண்டையை அதிகம் பயன்படுத்தியதால் அந்தக் காலத்தில் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்தனர். இப்போது அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவதில்லை. பிரண்டையை நாம் அதிகம் பயன்படுத்தினால் மருத்துவரே நமக்குத் தேவையில்லை. கொரோனா காலத்தில் பிரண்டையை அதிகம் சாப்பிட்டவர்கள் விரைவில் குணமடைந்தனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது விரைவில் உருவாக்குகிறது. பெண்கள் பிரண்டையை அரைத்து சாப்பிடும்போது மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பிரண்டை சாப்பிடலாம்.

 

பிரண்டையை பொடியாகச் செய்து, சாதத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பிரண்டை உப்பு பல இடங்களில் கிடைக்கிறது. அதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கேஸ் பிரச்சனைகள் தீரும். பிரண்டையின் தோல்களைக் களைந்து, மோரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அது மிகப்பெரிய மருந்தாக இருக்கும். வயிற்றுப் புண் அதிகமாக இருப்பவர்கள், வாய் துர்நாற்றம் அதிகம் இருப்பவர்கள் பிரண்டை சாப்பிடுவது நல்லது. கல்லீரலுக்கு பிரண்டை மிகவும் நல்லது. 

 

பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். பலவீனமாக உணரும் குழந்தைகளுக்கு பிரண்டை கொடுத்தால் அவர்களுடைய பலம் அதிகரிக்கும். எலும்பு முறிவு கூட இதன் மூலம் சரியாகும். இதில் அனைத்து விதமான வைட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன. பிரண்டையை நெய்யோடு சேர்த்து சாப்பிடும்போது வயிற்றில் இருக்கும் புண் ஆறும். பிரண்டையை நல்லெண்ணையோடு சேர்த்து சாப்பிடும்போது வயிறு மற்றும் வாயில் இருக்கும் புண் ஆறும். கேன்சர் நோயாளிகளுக்கும் பிரண்டையை நாம் வழங்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் பிரண்டை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

 

 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.