Skip to main content

இனிமேல் நம் நாடு அவ்வளவுதான் …

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

பயம் என்பது நமது உயிர் மாதிரி. கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். உயிர் உடம்பைவிட்டுப் போகிறவரை அது கூடவே இருந்து கொண்டிருக்கும். பயத்திற்கு முக்கிய காரணம் பாதுகாப்பின்மைதான். பிறரால் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அச்சத்தை உள்ளுக்குள் விதைக்கிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதின்மூன்று முதல் பதினைந்து வயதுள்ளவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பயம் எப்போது, எப்படி, எதற்காக, ஏன் வந்தது என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பயம் வருவதற்கு சில வகையான காரணங்களே முக்கியமாக விளங்குகிறது என்று தெரியவந்தது. இறப்பு, தனிமை, முயற்சியில் தோல்வி, வன்முறை, போர், எதிர்காலம் பற்றிய கவலை போன்றவை பயத்திற்கான முக்கிய காரணங்களாகத் தெரியவந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவிதமான பாதுகாப்பின்மையே பயத்திற்குக் காரணமாக விளங்குகிறது என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டது. பொதுவாக பயம் ஒரு எல்லையைத் தாண்டுகிறபோது அங்கே அறிவு செயலிழந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் அது பாதுகாப்பு அரணாக இல்லாமல் அடிமைத் தளைக்குள் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

world war image

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளில் பணமின்மை, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என்று அந்த தேசம் மிகவும் சிரமத் திசையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ‘இனிமேல் நம் நாடு அவ்வளவுதான்’ என்று பலரும் தலையில் கையை வைத்துக் கொண்டு மூலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இனிமேல் அமெரிக்காவை எந்தக் கொம்பனாலும் காப்பாற்றவே முடியாது என்ற அவநம்பிக்கை தாராளமாக பெருகி வழிந்தது. அப்போது அந்நாட்டின் அதிபராக இருந்தவர் ஹோவர். இவர் மிகப் பெரிய பொருளாதார வல்லுநர் வேறு. இவராலேயே அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியாமல் போனதால் மக்கள்  நம்பிக்கை இழந்து போயினர்.இதுபோன்ற ஒரு இக்கட்டான சமயத்தில் அமெரிக்க அதிபராக ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பதவியேற்றார். ஹோவராலேயே முடியாததை இவர் சாதித்துவிடுவாரா என்று பலரும் ஐயம் கொண்டனர். ரூஸ்வெல்ட் பதவியேற்றதும் முதன்முதலாகத் தனது மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது, ‘நாம் அனைவரும் பயப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே. அது என்ன தெரியுமா? பயம். அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையற்ற பயம்தான் நம்மை முன்னேற விடாமல் கீழே இழுத்துக் கொண்டே இருக்கிறது’ என்றார்.

இவ்வாறு மக்களை உசுப்பேற்றிய அவர், தன்னையும் மாற்றிக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் தாக்கங்களையும் சமாளித்து அமெரிக்காவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றார். மிகப் பெரிய வல்லரசு நாடாக அமெரிக்காவைத் திகழச் செய்தார். இன்றும் அமெரிக்கா அப்படியே திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் பயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. அதனை எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். பயம் வந்தால் முதலில் பரபரப்பின்றி நிதானமாக அதற்கான காரணம் என்னவென்பதை யோசியுங்கள். அது உண்மையானதா, கற்பனையானதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பயத்திற்கான காரணம் உண்மையானதாக இருந்தால் அதனை ஒதுக்கித் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக்கூடாது. அது ஆபத்தைத் தோற்றுவித்துவிடும். எனினும், அதற்காகப் பயத்தில் மூழ்கி அமிழ்ந்துவிடக்கூடாது. பயத்திலேயே செயலிழந்து போவதும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. பயப்படுகிற அளவிற்கான காரணம் என்பதைக் கவனமாக கண்டறிந்து அதனை அறிவுபூர்வமாக அணுகி தீர்த்து வைக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் பயத்திற்கான காரணம் வெறும் கற்பனையாக இருந்தால் அதனை உடனடியாகப் புறக்கணிக்க வேண்டும். உங்கள் மனதில் அதிக நேரம் தங்கி இருக்க அனுமதிக்கவே கூடாது. அவ்வாறு அதனை சிறிது நேரம் உள்ளுக்குள் அமர்ந்திருக்க செய்தால் அது பின்னர் உண்மை என்றே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும். அப்புறம் பயம் உங்களை விட்டு எந்நிலையிலும் விலகவே விலகாது. தோல்வியைக் கண்டு பயம் எழுகிறது என்றால் அதனையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். எந்தவொரு வெற்றியும் தோல்வி இல்லாமல் கிடைத்ததே இல்லை என்ற உண்மையை மனதிற்குள் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.