Skip to main content

என்ன செய்தால் குடற்புண் சரியாகும்…..

Published on 05/02/2019 | Edited on 09/02/2019

 மனிதர்கள் ஒவ்வொருவரும்  தனித்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் ,வாழ்க்கை முறை ,சமூகப் பங்கீடு ,முரண்பாடுகள் ,உணவு அருந்தும் பாங்கு ,இவை அனைத்தும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது .அப்படி இருப்பவர்களில் பெரும்பலான ஆண்கள் மற்றும் பெண்கள் குடற்புண்ணால் பாதிக்கப் படுகின்றனர் . அப்படி யாருக்கெல்லாம் குடற்புண் வரலாம் என்று பார்க்கலாம் . குடற்புண்ணால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெற்றோர் களின் சந்ததிகளுக்கும் குடற்புண் வரலாம். தொழில் சார்ந்த நிலையில் அடிக்கடி வெளியூர் பிரயாணம் மேற்கொள்பவர்கள், வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் , அடிக்கடி பட்டினி கிடப்பவர்கள், மூளை சார்ந்த வேலையில் ஈடுபட்டிருப்போர்களுக்குக் கண்டிப்பாகக் குடற்புண் வரலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள், கோபப்படுபவர் கள், ஏமாற்றம், கவலை மன அழுத்தம் போன்ற காரணிகளுக்கு உட்படுபவர்களுக்கு வயிற்றில் அதிக அளவில் அமிலச்சுரப்பு  உண்டாகி குடற்புண் வரலாம். டீ, காபி, மசாலா உணவுகள், புகையிலை, போதைத்தரும் பானங்கள், ஸ்டீராய்டுகள் கலந்த மருந்துகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள் வோருக்கும் குடற்புண் வரலாம் மற்றும் உணவினை நேரம் தவறி சாப்பிடுதல், அவசரமாக உணவருந்துதல் இவைகளாலும் குடற்புண் உண்டாகலாம்.  

ulcer

 
இப்படி வரக்கூடிய குடற்புண் நோயை எப்படி குணமாக்க முடியும் என்று பார்க்கலாம் .உணவினை ஒரே தடவையில் வயிறுபுடைக்க உண்பதைவிட சிறுசிறு அளவில் அடிக்கடி தேவைக்கேற்ப உண்ணலாம். உணவினை நன்கு, மென்று, ருசித்து, பதட்டமின்றி சாப்பிடுங்கள்.எளிதில் ஜீரணிக்கக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். காபி, டீ, கோக், மது, புகை, போதைத் தரும் பானங்கள் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். அதிக காரமான  உணவுகளை எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள் .அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், முழு தானிய உணவுகளை கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.ஆஸ்பிரின்  போன்ற குடலைப் புண்ணாக்கும் நவீன மருந்துகளை தவிர்த்துவிடுங்கள்.
 

கொழுப்பு நிறைந்த உணவுகள், இறைச்சிகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் . எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை முடிந்து அளவு குறைத்து கொள்வது நல்லது ஆகும் . எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரிக்  அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் .மிளகாய், ஊறுகாய் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள் .சிலருக்கு உணவை விட  டீ, காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பார்கள் அவர்கள் ஸ்ட்ராங்காகக் குடிப்பதை விட்டு விட்டால் ரொம்ப நல்லது .இந்த மாதிரியான சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் .இது மாதிரியான மேலும் சில மருத்துவக் குறிப்புகளுக்கு கை மருத்துவம் புத்தகம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.