Skip to main content

பள்ளி மாணவர்களுக்குக் கூட ஹார்ட் அட்டாக் வர இதுதான் காரணம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

 This is the reason why even school children get heart attacks

 

பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழப்பதைப் பார்க்க முடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது இதன் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.சுரேஷ் ராவ் அவர்களை ‘நக்கீரன் நலம்’ யூடியூப் சார்பாக சந்தித்தோம். அவரிடம் மேற்குறிப்பிட்டவை பற்றிய கேள்விகளை முன் வைத்தபோது அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு.

 

இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டாக் வர முதற்காரணம் வாழ்வியல் முறை பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம்தான். உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பாக ஃபாஸ்ட் புட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும், சர்க்கரை அளவு அதிகரிக்கும். இப்ப கிடைக்கிற பல வகையான உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

 

அடுத்தபடியாக பொலியூசன். அதாவது மாசு நிறைந்த வாழ்விடம், உங்களுக்குள் ஏற்படுத்துகிற சுவாசப் பிரச்சனைகள் மற்றும் புகை பிடித்தல் பழக்கமுள்ளவர்களும் சுவாசிப்பதில் ஏற்படுகிற சிக்கலுக்கு உள்ளாகி இதயம் பாதிப்புக்குள்ளாக வேண்டியது வரும்.  

 

முன்பெல்லாம் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தது. நேரத்திற்கு எழுந்தோம். நேரத்திற்கு தூங்கினோம். மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. மிகுந்த மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருக்கிற வாழ்க்கை முறை மற்றும் வேகமாக வேலைக்கு ஓடுறோம், சாப்பிட்றோம். இதெல்லாம் ஹார்ட் அட்டாக் சிறு வயதிலேயே வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

 

 

Next Story

உற்சாகமாய் பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tragedy happened to the student when she went to school at karnataka

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனா. இவருக்குத் திருமணமாகி சுமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சிருஷ்டி (13) என்ற மகள் இருந்தார். சிருஷ்டி, தரடஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது பள்ளிக்குத் தினமும் நடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சிருஷ்டி நேற்று (20-12-23) காலை வழக்கம்போல் தனது பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிருஷ்டிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவரை, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சின்ன வயதில் ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன ? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Dr Arunachalam - Heartattack - Health care

 

இளம் வயதிலேயே சிலர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறக்கும் சூழலை சமீப காலமாக பார்க்கிறோம். இதற்கு என்னதான் காரணம் என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் முன் வைத்தோம். அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு..

 

கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் சமீபத்தில் அதிக அளவில் ஹார்ட் அட்டாக் வருவதாக சொல்லப்படுவது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. பெரும் ஆய்வில் கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். கொரோனா பெரிய பாதிப்பை நம்மிடையே ஏற்படுத்திச் சென்றது என்பது உண்மை தான். உறவுகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணர முடிகிறது.

 

இதய நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் பெரிய தொடர்பு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது தூக்கத்தினை தொலைத்த சமுதாயமாக இருக்கிறோம். இரவுகளின் அதிக நேரம் கண் விழிக்கிறோம். அதற்கு பல காரணிகள் நம்மிடையே இருக்கிறது. இரவு நேர வேலை வாய்ப்புகள், இரவு நேர சினிமா, இரவு நேர கொண்டாட்டங்கள் என்று தூக்கத்தினை தொலைக்கிறோம். 

 

கொரோனா காலத்தில் சரியாக தூங்காமல் எல்லாரும் இரவு தூங்க நேரமாகிறது. பெரியோர்களிடமிருந்து இந்த பழக்கம் சிறியவர்களையும் தொற்றிக் கொண்டது. மீண்டும் பகலில் தூங்காமல் இரவு மட்டுமே தூங்கி, குடும்பத்தோடு இந்த பழக்கத்தை கொண்டு வந்தால் சரி செய்ய முடியும். இல்லையென்றால் குழந்தைகள் தூக்கமின்மையால் உடலும் மனமும் கெட்டுப் போகும். இது அவர்களுக்கு இதய நோயை நோக்கித்தான் நகர்த்திச் செல்லும்.

 

தூக்கமின்மையினால் மட்டுமே தான் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பிக்கிறது. தூக்கமின்மை சரியான உணவு உண்ணாமையை கொண்டு வரும், அது இதய நோய் சிக்கலாகத்தான் மாறும், அதனால் அட்டாக் வரத்தான் செய்யும். எனவே நன்றாக தூங்கி நன்றாக உணவு உண்டு ஆரோக்கிய வாழ்வு முறையைப் பின்பற்றி ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.