Skip to main content

பெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா? வழியெல்லாம் வாழ்வோம் #14 

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
vv 14 title



விட்டமின்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதன் நடுவே பெண்களின் மனோவியல் பற்றிய சில குறிப்புகளையும், ஏன் பெண்களின் மனோவியலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இந்தப் பகுதியில் காண்போம். சத்துக்குறைபாடுகளும் ஹார்மோன் மாற்றங்களும் உடல்நிலையை மட்டுமன்றி உணர்வு நிலையையும் எவ்வெவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பதை அலசலாம். உயிரினங்கள் யாவற்றுக்கும் உடல்நலமும் மனநலமும் நேர்விகித தொடர்புடையது என்கிறது அறிவியல். குறிப்பாக பெண்களிடம் தோன்றும் மனோநிலை மாறுபாடுகள் எளிதாய் உற்றுநோக்கும் வண்ணம் இருப்பதன் காரணம் அவர்கள் உடல் ரீதியில் உள்ளாகும் பாதிப்புகளும், சத்துக் குறைபாடுகளும் தான்.

விட்டமின் D3 போன்றே பெண்களுக்கு அதிகமாய்த் தேவைப்படும் இன்னொரு உயிர்சத்து விட்டமின் B12. மேலும் இந்த இரண்டு உயிர்ச்சத்துக்களும்தான் உடல்நலம் மனநலம் இரண்டையும் வெகுவாய் பாதிக்கின்றன. எனவே விட்டமின் B12 குறைபாடு பற்றி அறிவோம்.

 

 


மிடில் கிளாஸ் குறைபாடு:

சமீபத்தில் மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருந்தவர்களிடம், இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 இந்தியர்களில் 8 பேர் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் என்று தெரியவந்தது.மேலும் இந்தியாவில் 60 முதல் 70% மக்களுக்கு வைட்டமின் பி12 குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும் இக்குறைபாடு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களே என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால்தான் B12 குறைவை மிடில் கிளாஸ் குறைபாடு என்று கூறுகின்றனர்.

ஏன் வேண்டும் B12?

விட்டமின் B12 நரம்பு மண்டலத்தின் திசுக்கள் சரியாய் செயல்பட அத்தியாவசியத்தேவையாய் உள்ளது. மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாய் செயல்படவும் விட்டமின் B12 தேவை. ஆரோக்கியமான மனநிலைக்கு போதிய அளவு விட்டமின் B12 அவசியம். ஏனென்றால், மனநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் Monoamine எனப்படும் "ஒற்றை அமீன்கள்" எனப்படும் நரம்பியல் கடத்திகளை உருவாக்க விட்டமின் B12 கட்டாயம் தேவை. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் விட்டமின் B12 தேவை. பொதுவாக அனைவருக்கும் விட்டமின் B12 அவசியமென்றாலும், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் பெண்களுக்கு மற்றவர்களுக்குத் தேவைப்படும் அளவான 2.4 mcg ஐ விட அதிக அளவில் (முறையே 2.6 mcg, 2.8 mcg) தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நம்மூர் பெண்கள் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் முறையான சரிவிகித மற்றும் கலப்பு உணவை உட்கொள்வதில்லை. அதனால் அப்போது ஏற்படும் குறைபாடு அதன் பிறகும் நீடிக்கிறது.
  pregnant lady



விட்டமின்  B12ம் மரபியலும்:

விட்டமின் B12 செல்களுக்குள் ஊடுருவ FUT2 போன்ற சில மரபணுக்கள் அவசியமாகின்றன. அத்தகைய மரபணுக்களின் மாற்றம் ஆற்றும் மரபணுக்கூட்டமைப்பின் மாறுதல்களாலும் [Gene and Genome Wide Assosiation (GWA)] விட்டமின் B12 சரியாகச் செல்களை சென்று சேர இயலாத நிலை உருவாகிறது. எனவே தொடர்ந்து மனஅழுத்தம் நினைவாற்றல் குறைவு உள்ளவர்கள் FUT2- என்கிற ஒரு வகையான மரபணு சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீரிழிவு நோய் கொண்ட பெண்களின் விட்டமின் B12 குறைபாடு:

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு உயிர்சத்துக்கள் ரத்தத்தில், செல்களுக்குள் சேரும் அளவு மிகக்குறைவாகவே இருக்கும். எனவே அவர்களுக்குத் தேவையான B12 விட்டமின் குறைபாடு அடைவதும் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஓர் ஆய்வு முடிவில், Metformin எனப்படும் நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் மருந்து, B12 ன் செரிமாணத்தைக் குறைப்பதால், அது உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் மெட்பார்மின் போன்ற மருந்துகளை பெருமளவில் உபயோகிப்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். எனவே விட்டமின் செரிமானத்தை சரியாக்கி, குறைபாடுகளைத் தவிர்க்க உடற்பயிற்சி சிறப்பான முறையாகும். உடற்பயிற்சி மூலமாக இன்சுலின் சுரப்பை சரியாகவும், கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இயலும்.

விட்டமின் D3யும் மனநலமும்:

சென்ற பாகத்தில் விட்டமின் D3 பற்றி பார்த்தோம். விட்டமின் D3 மறைமுகமாக மனநலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. வைட்டமின் D3 குறைபாடு கால்சியம் உறிஞ்சுவதை (Calcium absorption) தடுக்கிறது. வைட்டமின் B12 வயிற்றுக்குள் செல்வதற்கு கால்சியம் அவசியம். நம்  உணவில் வைட்டமின் B12 போதுமான அளவு இருந்தாலும், வைட்டமின் D3 குறைபாடு இருப்பின், நாம் வைட்டமின் B12 குறைபாட்டையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த B12 குறைபாடு ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகளோடு, மன நலத்தையும் பாதிக்கும் வேலையையும் செய்கிறது.

 

 


பெண்களுக்கு அதிகமாய் அவசியமாகும் உயிர்ச்சத்துக்கள் பற்றி பார்த்தோம். இந்த சத்துக்கள் குறைந்தால், உடற்பயிற்சி சார்ந்து மருந்தில்லா முறையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை வரும் வாரங்களில் காண்போம். அதே போல் இயற்கை வழி உணவியல் முறைகள் மூலமாகவும் தேவையான உயிர்சத்துகளைப் பெரும் முறைகள் பற்றியும் வரும் வாரங்களில் பேசலாம்.


முந்தைய பகுதி:

இளம் பெண்களுக்கு முகப்பரு வரவைக்கும்... மாதவிடாய் காலத்தில் உடல்வலி உண்டாக்கும்... எது அது? வழியெல்லாம் வாழ்வோம் #13
 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:

 

 


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 


சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21
 

 

 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 

 



சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21