Skip to main content

புகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

புகைபிடிப்பதை நிறுத்துவதற்காக ஐ.ஐ.டி கரக்பூர் புதிதாக ஆப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. புகைபிடிப்பவர்கள் எப்போதெல்லாம் புகைபிடிக்க முற்படுகிறார்களோ அப்போதெல்லாம் இந்த ஆப் அவர்களுக்கு, புகைபிடிப்பதால் அவர்களின் ஆயுள் எவ்வளவு குறைபும், என்ன மாதிரியான உடல்நிலை குறைவு ஏற்படும் போன்ற எச்சரிக்கை செய்திகளை அனுப்பும். 

 

s

 

 

மொபைல் மூலமாக உபயோகிக்கக்கூடிய இந்த ஆப், முதலில் புகைபிடிப்பவரின் தரவுகளை சேகரித்துக்கொண்டு அதன் அடிப்படையில் அவர் பிடிக்கும் சிகிரெட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவரின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப் உபயோகப்படுத்துபவர் புகைபிடிக்க முற்பட்டால் அவரின் வீட்டிற்கோ, நண்பர்களுக்கோ அல்லது மருத்துவருக்கோ அவர் புகைக்கிறார் எனும் செய்தி போகும். அதனால், அவர் எளிதில் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறி பணம் பறிப்பு; சைபர் கிரைம் பேரைச் சொல்லி ஏமாற்றிய கும்பல்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Extortion of money on the pretense of watching a films; A gang that cheated on cybercrime people

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் தன்பாலின ஈர்ப்பாளர்களைக் குறிவைத்து ஆசை வார்த்தை காட்டி, மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஆபாசப் படம் பார்ப்பதாக மிரட்டி ஒருவரிடம் இளைஞர் கும்பல் பணம் பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் லாலா ராய் என்ற நபரிடம், நாங்கள் சைபர் கிரைம்மில் இருந்து பேசுகிறோம். உங்களை கண்காணித்ததில் நீங்கள் மொபைல் போனில் ஆபாச படம் பார்க்கிறீர்கள். அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சிலர் மொபைல் போனில் பேசியதோடு நேரில் சென்று 41,640 ரூபாயை பறித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையில் புகாரளித்த நிலையில், கோவை வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தன்பாலின ஈர்ப்பாளர்களே குறி; அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Gangs targeting youngsters

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதேபோன்ற சம்பவம் ஆலங்குளத்தில் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இதேபோல தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் ஆசை காட்டி ஆப் மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அழகான ஆண்களை அறிமுகப்படுத்துவதாக பிரபல செல்போன் ஆப் மூலம் பழகி பின் நேரில் வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.