Skip to main content

இயற்பியலர் ஸ்டீபன் ஹாக்கிங்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளரும், அதிக அளவில் விற்ற நூல்களின் ஆசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங்! தனது சக்கர நாற்காலியில் இருந்தபடி அண்டத்தில் உலா சென்றவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு, பொதுமக்களின் சிந்தையை ஸ்டீபன் ஹாக்கிங் அளவுக்குக் கொள்ளை கொண்ட, உலகெங்கும் கோடானு கோடி மக்களால் நேசிக்கப்பட்ட வேறொருஅறிவியலாளரை நம்மால் காண முடியாது என்கிறார்கோட்பாட்டு இயற்பியலாளர் மிஷியோ காக்கு.

இந்தப் புகழை காலத்தின் சுருக்கமான வரலாறு:

பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை (A Brief History of Time) ) என்ற 1988-இல் வெளியான நூலின் மூலம் ஹாக்கிங் பெற்றார். இதுவரை ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நூல் விற்றிருக்கிறது.அறிவியலைப் பொறுத்தவரை விநோதமானஒரு கண்டுபிடிப்புக்காக ஹாக்கிங் என்றென்றும் நினைவுகூறப்படுவார்.

stephen hawking

முதல் மைல்கல்

நவீன இயற்பியலின் திருப்புமுனை எங்கு நிகழ்ந்தது தெரியுமா? 1973 இறுதியில் ஹாக்கிங்கின் மூளையின் சுவர்களில் நிகழ்ந்தது! அணுவுலகின் உள்ளே ஆட்சிசெய்யும் குவாண்டம் கோட்பாட்டைக் கருந்துளைகளுக்கு ஹாக்கிங் பொருத்திப் பார்க்க முயன்றபோது அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது. நீண்ட நெடிய நேரம் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு கணக்குகள் போட்டுப்பார்த்த பிறகு, ஹாக்கிங் கண்டுபிடித்த ஒரு விஷயம் அவரையே குழப்பத்தில் ஆழ்த்தியது. கருந்துளைகள் உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை என்று அவர் கண்டறிந்தார். அவற்றிலிருந்தும் ஒருகட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசிய ஆரம்பித்து இறுதியில், வெகு நீண்ட யுகங்களுக்குப் பிறகு, கருந்துளை வெடித்து மறைந்துவிடும் என்று ஹாக்கிங் கண்டறிந்தார்.ஒளி உட்பட எதுவுமே தப்பிக்க முடியாது என்று கருதப்பட்ட கருந்துளைக்குள்ளிலிருந்து அணுத்துகள்கள் தப்பிக்கின்றன என்பதை ஹாக்கிங் உட்பட யாருமே முதலில் நம்பவில்லை.உண்மையில், நான் இந்த விஷயத்தைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. தற்செயலாகத்தான் இதை நான் கண்டறிந்தேன் என்று ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.

தனது கணிப்பை நேச்சர் இதழில் கருந்துளை வெடிப்புகள்? என்ற தலைப்பில் 1974-இல் கட்டுரையாக எழுதினார் ஹாக்கிங். இயற்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த ஒற்றைக் கோட்பாட்டை நோக்கிய, அதாவது ஒன்றுக்கொன்று முரண்படும் சார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் முயற்சியை நோக்கிய பயணத்தில் முதல் மைல்கல் என்று அறிவியலாளர்களால் இந்தக் கட்டுரை புகழப்படுகிறது.ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அழிவுசக்திகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்த கருந்துளைகளுக்கு படைப்பு சக்திகள் என்ற அடையாளத்தை, அல்லது மறுசுழற்சி யாளர்கள் என்ற அடையாளத்தை ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு வழங்கியது.கருந்துளைக்குள் யாராவது குதித்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். குதித்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். கருந்துளைக்குள் குதித்தவரின் உடலைக் கட்டமைத் திருந்த அணுக்களும் திரும்பி வராது. ஆனால், அவருடைய நிறையின் ஆற்றல் திரும்பக் கிடைக்கும். இது ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என்று 1978-இல் ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.


- ஆங்கிலத்தில் : டெனிஸ் ஓவர்பை
- தமிழில் : ஆசை

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.