Skip to main content

மிக்ஸி இருக்கா... 20 நிமிடத்தில் பருப்பு உருண்டை குழம்பு தயார்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

பணம், புகழ், சொத்து சுகம் உள்ளிட்ட அனைத்தும் மனிதர்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இயல்பாக வரும். இது சுப்பன், குப்பன் முதல் அம்பானி, அதானி வரை அனைவருக்கும் பொருந்தும். அந்த வகையில் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நல்ல சமையலை சாப்பிடும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கும் போது 'போதும்' என்ற வார்த்தையை நம்மால் இயல்பாகவே கேட்க முடியும். இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவு கூட நான் சாப்பிடுவேனா? என்று தெரியாது என்று ஒருவரை சொல்லக் வைக்ககூடிய தன்னை நல்ல சமையலுக்கு உண்டு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் படம் போல அனைவருக்கும் எப்போதுமே பிடித்த 'பருப்பு உருண்டை' குழம்பு செய்யும் முறையினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

துவரம்பருப்பு - 100 கிராம்

கடலைப்பருப்பு - 300 கிராம்
 
பாசிப்பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

சின்ன வெங்காயம்  - 200 கிராம்

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம்

இஞ்சி - ஒரு துண்டு

தேங்காய் துருவல் - 100 கிராம்

மல்லித் தழை - தேவையான அளவு

கறிவேப்பில - சிறிதளவு

எலுமிச்சம்பழச் சாறு -  2 ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி, பருப்புகளை ஒன்றார கழுவி நன்றாக ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்க் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

ஆவியில் வெந்த அந்த உருண்டைகளை குழம்பில் போட்டு சிறிது நேரத்திற்குள் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். அதிக சூடு இருந்தால் பருப்பு உருண்டை கரைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதனை காரச் சட்னியுடன் சேர்ந்து சாப்பிட்டால் நாக்கில் எச்சில் ஊறும் என்றால் அதில் ஆச்சரியம் இல்லை.  மேல உள்ள அளவிற்கு பொருட்களை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 பேருக்கு அந்த குழம்பு போதுமானதாக இருக்கும்.

Next Story

எண்ணெய், எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்தது  மத்திய அரசு!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

union government imposes restrictions on oil and oilseeds stocks

 

வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை எண்ணெய், எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சில்லறை விற்பனையாளர்கள் 100 குவிண்டால் வரை எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த விற்பனையாளர்கள் 2,000 குவிண்டால் வரை எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம். 

 

அதேபோல், சமையல் எண்ணெய்யை சில்லறை விற்பனையாளர்கள் 30 குவிண்டால் வரையும், மொத்த விற்பனையாளர்கள் 500 குவிண்டால் வரையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தினசரி உற்பத்தி அடிப்படையில் 90 நாள் உற்பத்தியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

'பேக்கிங்' செய்யாமல் எண்ணெய் விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

cooking oil high court madurai bench

'பேக்கிங்' செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய்களை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 'உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கவர்களில் அடைக்கப்படாமல் சில்லரையாக விற்பனைச் செய்யப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதால் கல்லீரல், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறன. சட்டப்படி எண்ணெய்யை சில்லரையாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். 

 

இந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தபோது, '2011- ஆம் ஆண்டு சட்டத்தின் படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது? எண்ணெய் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன? கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் தரம் குறித்து எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன? எண்ணெய்யை கவர்களில் அடைக்காமல் சில்லரையாக விற்பனை செய்வது ஏன்?' என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சமையல் எண்ணெய்களை 'பேக்கிங்' செய்யாமல் சில்லரை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.