Skip to main content

செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதும் ஒரு வகை நோய் தான் - மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 Obsessive-compulsive disorder (OCD)

 

நமது மனநலம் குறித்த பல்வேறு விஷயங்களை நம்மோடு மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா பகிர்ந்து கொள்கிறார்.

 

எண்ண சுழற்சி வியாதி பலருக்கும் இருக்கிறது. சிலர் ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். சிறிய வேலைக்கும் கூட அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். மிகவும் மெதுவாகவே இயங்குவார்கள். தவறு நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் எடுத்துக்கொள்ளும் நேரம் தான் இது. சிலருக்கு பல்வேறு தவறான நம்பிக்கைகளின் மூலம் இந்த நோய் ஏற்படும். மற்றவர்களின் பார்வைக்கு அவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவர்களால் தங்களை மாற்றிக்கொள்ள முடியாது. 

 

இப்படியான பிரச்சனையோடு ஒருவர் நம்மிடம் வந்தார். தன்னுடைய அலுவலகத்திலும் வீட்டிலும் தான் செய்யும் வேலைகள் மிகவும் தாமதமாவதாக அவர் கூறினார். நம்மிலேயே பலருக்கு வீட்டின் பூட்டை திரும்பத் திரும்ப ஆட்டிப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. சிலர் குளிக்கும்போது நீண்ட நேரம் குளித்துக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் சிலர் வீட்டை சுத்தம் செய்யும்போது நீண்ட நேரத்திற்கு சுத்தம் செய்வார்கள். சிலருக்கு இந்த சுபாவம் குறைந்த அளவில் இருக்கும். சிலருக்கு இது ஒரு வியாதியாகவே மாறிவிடும். அதனால் அவர்களுக்கு வேலை பாதிக்கப்படும், தூக்கம் வராது.

 

சிறுவயதில் ஏற்படும் அதிர்ச்சியான விஷயங்கள், மூளை பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த நோய் ஏற்படலாம். ஒரு வேலையை அதிக நேரம் செய்யாமல் இருந்தாலும் பதற்றமில்லாமல் இருக்க முடியும் என்பதை அவர்கள் நம்பும் வகையில் நாங்கள் சிகிச்சைகள் தருவோம். சிபிடி சிகிச்சையையும் நாங்கள் பயன்படுத்துவோம். இதன் மூலம் இந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவுக்கு காரணம் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Dr RadhikaMurugesan | Relationships | Marriage |

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணத்தை மீறிய உறவின் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார்.

கள்ளக் காதலை முதலில் திருமணத்தை தாண்டிய உறவு என்று சொல்வது சரியாக இருக்கும். கள்ளக் காதலுக்காக கணவனையும் மனைவியும் கொல்லப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது இப்பொழுது தான் அதிகமாக செய்திகளில் வெளியே வருகிறது. சமூகத்தில் விவாகரத்தை இயல்பாக பார்ப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் கணவன், குழந்தைகள் தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பதால் அந்த ஒரு நொடியில் ஏற்படும் கட்டுப்பாட்டை மீறின கிளர்ச்சியால் இப்படி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை சமூகத்தோடு பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.  எல்லாரும் இதுபோல செய்வதில்லை. வேறொரு உறவு இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி அல்லது கணவனை, குழந்தைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்துவார்கள். இதிலிருந்து எப்படி வெளியே வர முடியுமோ அதற்கான வழிகளை செய்து தானே தெளிவாக விலகி விடுவர். ஆனால் எங்கு ஒரு கசப்பான திருமண உறவு இருக்கிறதோ அங்கு தான் இதுபோன்று கொல்லும் அளவிற்கு மனநிலையில் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று செய்பவர்கள் நிலையான மனநிலையிலும் இருக்கமாட்டார். ஒருவித மனநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.

தனக்கென்று ஒரு மதிப்பில்லை, திருமணம் வேலை செய்யவில்லை அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லை என்ற விரக்தியில் கிடைத்திருக்கும் வேறொரு உறவை ஒரு அழகான தப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிலை வருவதற்கு முன்னர் எவ்வளவோ நடந்திருக்கும். ஆனால் வெளியே செய்தியாக வரும்போது அது தெரிவதில்லை. ஒருவர் மட்டுமே குற்றவாளியாக பார்க்கிறோம். தற்போது பெரும்பாலும் பெண்களே அதிகமாக இதில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய சமூகம் மோனோகெமி என்ற உறவுமுறை சார்ந்தது. இது இனச் சேர்க்கையை சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்தே இருக்கிறது. ஆனால் நிறைய ஆய்வுகளில் மனிதனின் இயற்கையான உள்ளுணர்விற்கு போலிகாமி என்ற உறவுமுறை தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆரோக்கியமான உறவில் கூட இதுபோன்ற ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் திருமண உறவை முன்னிலைப்படுத்துவார்கள். சர்வதேச அளவில் கூட இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவுக்கென்றே செயலி கூட இருக்கிறது. அதை 2 மில்லியன் இந்திய பயனாளிகள் பயன்படுத்துவதில், 60 சதவிகிதம் அதை பெண்களே உபயோகம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஐந்து சதிவிகிதம் மட்டுமே காதல் திருமணம் நடக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய சமூக மாற்றத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியாத உறவில் நிலைத்து இருப்பது என்பது சாத்தியம் குறைவாக இருக்கிறது. ஈர்ப்பும் குறைகிறது. திருமணம் ஆகி வெறும் தாய் மற்றும் ஒருவருக்கு மனைவி அடையாளம் தவிர ஒன்றுமில்லாமல் தனக்கான தேவைகள் எதுவும் அந்த திருமணத்தில் நிறைவேறாத போதும் தன்னுடைய சுயமதிப்பை இழக்கும் போது தான் தனக்கென்று தேவையை நோக்கி செல்லும்படி ஆகிறது. மேலும் அதற்கான வழிகளை இன்றைய இணைய வசதிகள் சுலபப்படுத்தி விடுகின்றன.

ஆண்களை விட பெண்களே இதுபோன்ற விஷயத்தில் தள்ளப்பட காரணம், அவர்களின் உணர்வுகளை அதிகமாக பொருட்படுத்தாததுதான்.  ஆண்களை விட மன அழுத்தம் பெண்களுக்கு இருமடங்கு இருக்கும். உதாரணமாக உடல்நிலை சரி இல்லை என்று வெளியே சொன்னாலும் கூட அவர்கள் பலவீனமானவர்கள் என்று உதாசீனப்படுத்துவது என்பது நடக்கிறது. இதனால் தான் எங்கு நம் எமோஷனல் தேவைகள் பூர்த்தி ஆகிறதோ அங்கே அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதுதான் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவைப்பது மற்றும் குடும்பத்தை கொல்ல வைக்கும்  அளவுக்கு எல்லை தாண்டிய முடிவுகளை எடுக்க வைக்கிறது.

Next Story

திருமணத்தை மீறிய உறவு வலி மிகுந்ததாக மாறுவது ஏன்?  - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Extra marital Affair painful - Dr Radhika Murugesan  

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணம் மீறிய உறவு குறித்து விளக்குகிறார்.

பெண் வழி சமூகத்தை விட ஆண் வழி சமூகத்தில் தான் திருமணம் மீறிய உறவில் அதிகமாக இருக்கிறார்கள். சீனாவில் கூட குறிப்பிட்ட ஒரு ஊரில் ஆண் தான் தனக்கு பிடித்த பெண்ணுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள். திருமணம் என்கிற சடங்கு அங்கு இல்லை. பிடிக்கவில்லை என்று பிரிந்தாலும் அவர்களது குழந்தைகளை அந்த பெண்ணே வளர்ப்பாள். இப்படி தாய், பாட்டி என்று பொறுப்பை அவர்கள் எடுப்பதினால் அங்கே பாலியல் வன்புணர்வு கிடையாது. மேலும் அங்கு பெண்களுக்கு அதிகாரம் மேலோங்கி இருக்கும்.  

ஆனால் இங்கிருக்கும் சமூகத்தினால் ஒரு பெண் தனக்கு ஏற்படும் சமூக அழுத்தத்தின் காரணமாக தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் முடிவை அவள் மாற்றிக்கொள்ளும்படி இருக்கிறது. இதுவே தொடர்ச்சியாக தன்னை சமூகம் செல்லாததாக ஆக்கும்போது, இங்கிருந்து அவள் வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கும்படி இருக்கிறது. இயல்பாக காதல் தோல்வி என்று வரும்போது இளம் வயதுக்காரர்களிடம் காட்டும் பரிவு கூட திருமணத்திற்கு பின் வைத்திருக்கும் உறவில் தோல்வி வரும்போது காட்டுவதில்லை. ஆனால் நிஜத்தில் அதுதான் கூடுதல் வலியை கொடுக்கும். இவர்கள் பெரும்பாலும் திருமணம் ஆன உறவையும் விடாமல், புதிய உறவையும் விடாமல் தொடரவே நினைப்பார்கள். வீட்டிற்கு தெரியும் பட்சத்தில் மட்டுமே துண்டிக்க முனைவார்கள். அந்த சூழ்நிலையிலிருந்து அவர்களை தீவிர சிகிச்சை மூலமே கொண்டு வரவேண்டி இருக்கும். அப்படி வந்த பின்னும் அவர்களால் அந்த உறவை தொடர்வது என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. 

விவாகரத்து ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையான உறவை அவர்கள் தொடர இது இன்னும் சிரமமாக இருக்கும்.  மறுபுறம், தன்னுடய பார்ட்னர் இன்னொரு உறவில் இருக்கிறார் என்று தெரிய வரும்போது அது அவர்களுக்கு வேறு விதமான மன பாதிப்பை கொடுக்கும். ஒரு திருமண உறவில் காதல் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் மரியாதையும், நம்பிக்கையும் எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் ஒருமுறை சந்தேகம் என்று வந்துவிட்டது என்றால் அது உறவை தாண்டி அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும். இதுவே ஓபன் ரிலேஷன்ஷிப்பாக இருந்தால் கூட, தன் பார்ட்னர் இன்னொரு உறவில் இருக்கிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அடுத்து இன்செக்யூரிட்டி என்று வரும்போது தான் விரும்பும் ஆள் தன்னிடம் மட்டுமே அன்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். அதுவே எல்லை மீறிப் போகும்போது தான் தன்னை மீறி ஒருவனையோ ஒருத்தியையோ பார்த்து விடுவாளா என்று போகும்போது தான் இன்செக்யூரிட்டியில் அளவுக்கதிகமான பொசசிவ்னஸ் என்றாகிறது. 

ஆரம்பத்தில் அவர்கள் உறவுக்கு இது எக்ஸ்ட்ரா த்ரில்லிங்காக இருந்தாலும் அதுவே எல்லை தாண்டி போகும்போது பொறாமையை தாண்டி சந்தேகம் என்று மாறி ஆரோக்கியமற்ற உறவாகிறது. இதிலிருந்து வெளியே வர முதலில் தன்னுடைய துணையுடன் நேர்மையாக இருப்பதை விட தனக்கு முதலில் செல்ப் வேல்யூ கொடுக்க வேண்டும். நான் என் பார்ட்னருக்கு துரோகம் செய்துவிட்டேன் என்ற காரணத்தினால் மட்டும் மணமுறிவு வாங்காமல், என்னால் இருக்கும் இந்த உறவில் கமிட்மெண்ட்டோடு தொடர முடியவில்லை என்று மணமுறிவு வாங்குவது நன்று. அதற்கு பின் வரும் புது உறவு தன்னுடைய குழந்தைகளை, நம்முடைய மன ஆரோக்கியத்தை, சமூகம் என்று அத்தனையும் விட இந்த உறவு அவசியமா என்று மதிப்பீட்டு பார்க்கவேண்டும். மேலும் தங்கள் துணையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, எப்படி இதை கையாளலாம் என்று விவாதித்தலே தீர்வாக அமையும்.