Skip to main content

‘பித்தப்பை கல்லை சரி செய்ய...’ - ‘சித்த முத்திரை’ மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
| Mudra | Dr Salai Jaya kalpana |

டையாபிட்டிக், பிபி, பித்தப்பை கல் போன்ற பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

டையாபிட்டிக் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லாமல் முத்திரைகள் மூலமாகவே சரியான முறையில் தொடர்ந்து செய்தார்கள் என்றால் நிச்சயமாக இதற்கு தீர்வு காண முடியும். அடுத்து பி.பி.யை பொறுத்தவரையில் முறை கூட தேவையில்லை, மூன்று முத்திரைகள் மட்டுமே செய்தல் போதுமானது. பொதுவாக இந்த மூன்று முத்திரைகளையும் செய்ய வைத்து, பி.பி. அளவின் அந்த நபருக்கு எந்த முத்திரையில் குறைகிறதோ, அதையே அவர்கள் உடலுக்கு ஒத்து வரும் முத்திரை என்று கண்டுபிடித்து அதை முறையாக செய்யலாம். 

இதில் பி.பி. மட்டுமல்லாது, கூடவே இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய முத்திரையில் நன்றாக கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியும். இதய முத்திரை என்பது ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டைவிரல் நுனியுடன் மிச்சமுள்ள மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும். 15 வருடம் தொடர்ந்து பி.பி.யினால் சரி ஆகாதவர்கள், இந்த முத்திரையை ஒரு மூன்று மாதம் நாங்கள் செய்ய வைப்போம். முதல் மாதம் இரு வேளை மாத்திரைகளை ஒரு வேலையாக குறைத்து, இரண்டாவது மாதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று கொடுத்து அப்படியே படிப்படியாக குறைக்க செய்வோம்.

| Mudra | Dr Salai Jaya kalpana |

அடுத்து வியான முத்திரையும் செய்து வரவேண்டும். வியாபித்தல் என்று பொருள். இதை தமிழில் பரவுகால் என்று பெயர். ஒரு சிலருக்கு எந்த உணவு எடுத்துக்கொண்டாலும், அது உடல் எடுத்து கொள்ளாது. உடலில் அதனதன் செல்களுக்கு சரியான உணவின் சக்தி போய் சென்றடைய இந்த முத்திரை உதவி செய்யும். வியானன் என்பது உடலில் இயங்கும் பத்து வாயுக்களுள் ஒன்று. உடல் முழுக்க வியாபித்து பரவும்படி இந்த முத்திரை உதவி செய்கிறது. இது நிணநீர் மண்டலத்தையம் சரி செய்யும். அதாவது சளி பிடிக்கும் போது தொண்டையிலும், காதிலும், கழுத்திலும் நெறி கட்டிக்கொள்ளும். மேலும் தோளில் அடிபடும்போது அக்குள் பகுதியில் நெறி கட்டிக்கொள்ளும். இதனால் நிணநீர் மண்டலத்தின் முடிச்சுகளில் நீர் கட்டிக் கொள்ளும். வயதாக வயதாக இது ஏற்படலாம். கழுத்தில் தசை சுருங்கி தொங்குதல், கண்களுக்கு கீழே பாக்கெட் போல வீங்கி இருப்பது போன்ற வயோதிக மாற்றத்திற்கு வியான முத்திரை செய்து நன்றாக குணப்படுத்தலாம்.

தசை வாயுக்களில் 5 வாயுக்கள் பிரதானமானது. அதாவது பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் ஆகும். பிராணன் என்பது சக்தியை கொடுப்பது, அபானன் என்பது உடலில் கழிவுகளை வெளியேற்றுவது. உதானன் என்பது உடலில் சத்துக்கள், நிணநீர் மண்டலத்தை ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சுத்திகரிப்பது. இப்படி முத்திரை அப்போதைக்கு மட்டும் ஏதாவது ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு முழுமையான பலனை பார்க்க முடியாது. முறையாக கழிவு நீர் முத்திரையில் ஆரம்பித்து பஞ்ச பூதங்களை நெறிப்படுத்தி முறையான வரிசையில் தொடர்ந்து விடாமல் முத்திரைகளை செய்பவர்களுக்கு, தைராய்டு, டையாபிட்டிஸ், பி.பி என்பது சரியான அளவை தொட்ட பின்பு மீண்டும் அது தொந்தரவை தருவதில்லை.

| Mudra | Dr Salai Jaya kalpana |

அடுத்து பித்தப்பை கல் பிரச்சனை. புள்ளி விவரங்கள் படி 50% சதவிகித பேர்க்கு அவசியம் இன்றி பித்தப்பையை நீக்கி விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு பிரதான அறிகுறி அடிக்கடி ஏப்பம் வருவது தான். அப்படி இருப்பவர்கள் டெஸ்ட் செய்து பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக பித்தப்பையில் கல் இருக்கும். இதற்கு வாயு முத்திரை மற்றும் உதான முத்திரை நல்ல தீர்வு தரும். ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால் கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கணுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது வாயு முத்திரை. கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ள வேண்டும். இதுதான் உதான முத்திரை. 

இந்த வாயு முத்திரையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கடி செய்து வரலாம். இது நம் உடலில் புதிதாக வாயுக்கள் ஏற்படாமல் தடுக்கும். சிலருக்கு வலது தோள்பட்டை முதல் நடு முதுகு வரை வலி இருக்கும். நெஞ்சு கரிப்பது, ஏப்பம் அடிக்கடி விடாது வருவது, சிலருக்கு பித்தம் அதிகரித்து வாந்தி கூட ஏற்படும். அவர்கள் இந்த உதான முத்திரை தினசரி இரண்டு வேளை 20 நிமிடம் என்று செய்ய செய்ய பித்தப்பை கல் மட்டுமல்லாது, அதனால் ஏற்படும் அவஸ்தைகளையும் சரி செய்ய முடியும். மருந்துகளில் அஷ்டசூரணம் என்று சொல்லப்படும் எட்டு வகை பொருட்களால் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம், பெருங்காயம்,சீரகம், இந்துப்பு போன்றவையால் ஆன சூரணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

Next Story

சிறுதானியங்கள் தோல் பிரச்சனையை கொண்டு வருமா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Salai Jaya kalpana | Mudra | Food2 

வாதம், பித்தம், கபம் உடலமைப்பினர் எப்போது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

காற்று, வறட்சி, கடினம் போன்ற மூன்று குணங்களை கொண்டவர்கள் வாத உடலினர். எனவே அதற்கு எதிரான உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். வறட்சி இல்லாத கொழகொழப்பான, வெதுவெதுப்பான, இலகுவான பதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கொடுக்கும். எண்ணெய் குறைப்பது என்பது இவர்களுக்கு ஏற்காது. அதே போல இவர்கள் கடினமான பொறித்த வேகவைத்த உணவு வகைகளை எடுத்து கொள்ளக்கூடாது. 

நீர் டயட், பச்சை காய்கறி டயட் போன்ற உணவு முறை வாத தேகத்தினருக்கு ஒத்துவராது. பழுக்காத துவர்ப்பான காய் பழவகைகள் தவிர எல்லா பழங்களும் இவர்களுக்கு ஒத்து வரும். அப்படி பழுக்காத, துவர்ப்பான, பழத்தை எடுக்கும்போது உப்பு சேர்த்து சாப்பிடலாம். பொதுவாகவே அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எனவே அவர்கள் உணவில், உப்பு, புளிப்பு, இனிப்பு வகைகள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா வகை அரிசி உணவுகளும் ஏற்று கொள்ளும். குறிப்பாக  பச்சரிசி வெப்பத்தை சிறிது தரக்கூடியது என்பதால் பச்சரிசி கஞ்சி, பொங்கல் என வைத்து சாப்பிடுவது ஏற்று கொள்ளும். சிறுதானியத்தை பொறுத்தவரை தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை இவர்களுக்கு தோல் வியாதிகளை கொடுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

நீர் எடுத்துக்கொள்வதில் கூட ஒவ்வொரு தேகத்தினருக்கும் அளவு மாறுபடும். வெதுவெதுப்பான நீர் மட்டுமே வாத தேகத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்டெர்மிடியேட் பாஸ்டிங்  போன்ற ஒருவேளை உணவைத் தவிர்க்கும் டயட் வகை வாத தேகத்தினருக்கு மட்டுமே ஒத்து வரும். இவர்கள் இந்த டயட்டை ஒரு மூன்று மாத கால எடுக்கும்போது தானாகவே பசி ஏற்பட்டு பித்த உடலாக மாறும். அந்த சமயம் டயட்டை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். தமிழ் மருத்துவ முறையை பொறுத்தவரை வாத உடலினர் உணவுக்கு முன் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பித்த உடலினர் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். கப உடலினர் உணவுக்கு அரைமணி நேரம் பின் எடுக்க வேண்டும். அதே போல வாத உடலினர் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு நீர் குடித்து விட்டு , பின்னர் சாப்பிடவேண்டும். பசியை தூண்ட சூப் எடுத்துக்கொள்ளுதல் இவர்களுக்கு ஒத்து வரும். அதுவே பித்த உடலினருக்கு வயிற்று புண் வந்து அல்சரை ஏற்படுத்தும்.

எனவே வாத உணவின் சாப்பிடும் போது இடையில் நீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உணவுக்கு பின் சூடான பானங்கள் குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு ஒத்து வரும். வெறும் வயிற்றில் நெய், இஞ்சி சாறு, நீராகாரம் போன்றவை வாத உடலினருக்கு கண்டிப்பாக ஒத்து வரும். இஞ்சி சாறும் சரியான முறையில் எடுக்க வேண்டும். இஞ்சியை கட்டாயம் தோல் சீவி ஒரு துண்டு எடுத்து  நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து அதை  அப்படியே அரைமணி நேரம் தெளிய வைக்க அடியில் மாவு போல படியும், அதை தவிர்த்து மேலாக தெளிவு நீரை மட்டும் எடுக்கவேண்டும். கூட சேர்த்து கொள்ளலாம். துவர்ப்பான பானங்கள் குறிப்பாக டீ வகைகள் , க்ரீன் டீ , பிளாக் டீ போன்றவை வாத உடலினர்  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Next Story

வாதம், பித்தம், கபம் உடலமைப்புக்கான உணவுகள்  -  சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உணவு முறையை பின்பற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் உடம்பு என்பார்கள். அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

வாத உடலினைப் பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் தவிர்க்கவே கூடாது. ஏனெனில் அவர்கள் பொதுவாகவே வறட்சியான உடலமைப்பை கொண்டிருப்பர். அவர்கள் பால் உணவுகளான தயிர், நெய், வெண்ணை, தாளித்த மோர் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசான எண்ணெயில் பெருங்காயம், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவையே தாளித்து உப்பு கலந்து மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கப உடலினரைப் பொறுத்த வரை வெள்ளை உணவுகள் விஷம் போன்றது. கபம் என்றால் காற்றை குறிக்கும். இயல்பாகவே அவர்கள் எப்போதும் நிறைய சிந்தனை ஓட்டத்துடன் இருப்பர். எனவே இரவில் உறங்க சிரமப்படுவர். அவர்களெல்லாம் இரவில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு தூங்கலாம். சர்க்கரை சேர்க்காத அல்லது எலுமிச்சை கலந்த கார்பனேட்டட் பானங்களான சோடா போன்றவை மட்டுமே ஒத்து வரும். உணவுக்கு பின் எடுக்க கூடிய காபியோ, சூடான பானங்களும் அவர்களுக்கு ஒத்து வரும். பழங்களை பொறுத்தவரை எல்லா வகையும் அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். 

கீரை வகைகளை பச்சையாக ஸ்மூத்தி போன்றோ, வேக வைக்கமாலோ சாப்பிட கூடாது. கருணை கிழங்கு தவிர வேறு எந்த கிழங்கும் வாத தேகத்தினருக்கு ஒத்துக்கொள்ளாது. துவரம் பருப்பை வேகவைக்கும் போது பெருங்காயமும், விளக்கெண்ணெய் சேர்த்து  சாப்பிட்டால் அவர்களுக்கு வாயு தொந்தரவு எடுக்காது. அவர்களுக்கு பாசி பருப்பு, கொண்டைக் கடலை  மட்டுமே அஜீரண தொந்தரவு செய்யாது. கொண்டைக் கடலையையும் உப்பு காரம் சேர்த்து வேகவைத்த சாப்பிட வேண்டும். வாத தேகத்தினருக்கு  கை, கால் வலி ஏற்படும்போது கொஞ்ச நாளைக்கு நல்லெண்ணெய் தவிர்த்து விட்டு, நெய், கடலெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை வாதம், கபம் உடலமைப்பு கொண்டவர்களுக்கு வேகவைத்த கோழிக்கறி சூடு ஆனாலும் ஒத்துக்கொள்ளும். கடல் மீன்கள், சிறிய அளவில் ஆட்டுக்கறி போன்றவை சேர்த்து கொள்ளலாம். பித்த தேகத்தினரும் ஆட்டுக்கறி சேர்த்து கொள்ளலாம். வாத தேகத்தினர் முட்டை, கருவாடு வகைகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாயை பொறுத்தவரை நார்த்தங்காய், இஞ்சி வகைகள், மற்றும் அப்பளம் போன்ற உப்பு வகைகள் வாத தேகத்தினருக்கு ஒத்துக் கொள்ளும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிக நேரம் உடல் முழுக்க வைத்து வெயிலில் நின்று அதன் பின்னர் குளிக்க வேண்டும். அவர்கள் பொதுவாகவே மிதமான வெந்நீரில் குளிப்பது நன்று. அதே பித்த தேகத்தினர் வெயில் ஆரம்பிக்கும் முன்பு  குளித்து முடித்து விட வேண்டும். வாத தேகத்தினர் கால்களில் குளிர்ச்சியோடு இருக்கும். பித்த தேகத்தினருக்கு சூடு தலையில் தேங்கும். எனவே வாத உடலினர் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக தலை வரை வெந்நீர் ஊற்ற வேண்டும்.