Skip to main content

சிறு வயதில் வரும் ஃபேட்டிலிவர் பிரச்சனைக்கு தீர்வு? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Kirthika Tharan | Nonalcoholicfatty |

17 வயது பையனுக்கு உடல் எடையோடு இருந்த நான் - ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் அளவைக் குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

வெளிநாட்டில் இருக்கும்  17 வயது பையனுக்கு உடல் எடை அதிகமாகி கூடவே நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் இருந்தது. அதிக உடல் எடை அவனுடைய லிவரில் போய் கொழுப்பாக தங்கி இருந்தது. இதுவே சிம்பிள் லிவர் பேட்டி என்றால் லிவர் கெட்டுப் போகாது. நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்போது அது லிவரை பாதிக்கும். இந்த ஃபேட்டி லிவரை எந்த ஸ்டேஜ்ஜில் உள்ளது என்று பிளட் ரிப்போர்ட் மூலமும், லிவர் என்சைம் மாறுபாட்டை அல்ட்ரா சவுண்ட் வைத்து உணரலாம். நிறைய உடல் எடை அதிகம் உள்ள நோயாளிகள் ஏற்கனவே 20 சதவீதம் லிவர் பாதிப்புடன் தான் இருப்பார்கள்.

முதலில் குழந்தைகளுக்கு ஸ்டிரெஸ் அதிகமாக பெற்றோர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். சர்க்கரை சாப்பிடக்கூடாது என்றால் உடனே பெற்றோர்கள் எந்த சுகரும் பழங்களும் கொடுக்காமல் நிறுத்தி அவர்களுக்கு கிரேவிங்கை தான் அதிகப்படுத்துகின்றனர். அந்த பையன் அதிகமாக சாக்லேட் வகைகள், சாதம் , பலகாரம் போன்றவை அதிகம் எடுத்திருக்கிறான். முதலில் ஃபேட்டி லிவருக்கு சாக்லேட் தான் அதிக பாதிப்பை கொடுக்கும்.  அந்த பையன் இருந்தது மிடில் ஈஸ்டர்ன் பக்கம். வெதர் சரியாக இல்லாததால் வீட்டில் சரியான உடற்பயிற்சி நிபுணர் வைத்து வீட்டிலேயே ஆக்டிவிட்டீஸ் கொடுக்கப்பட்டது. பேக்கரி ஐட்டம் சாக்லேட் என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு டிடாக்ஸ் டிரிங், வாட்டர் தெரபி உட்பயிற்சிகளையும் கொடுக்கும் போது ஆரம்ப நிலையிலே நன்றாக அந்த ஃபேட்டி லிவர் பாதிப்பு குறைவதை பார்க்க முடிந்தது. 

இந்த ஃபேட்டி லிவர் ஓரளவு தான் ரிவேர்சபில். நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு நம் லைஃப் ஸ்டைல், தூக்கம், உணவு முறை மூலமாக ஓரளவு குறைக்க முடியும். இதுவே ஆல்கஹாலிக் வகை என்றால் கண்டிப்பாக மது பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதுவே வெறும் சாதாரண ஃபேட்டி லிவர் என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். கொழுப்பை நேரடியாக எடுக்காவிட்டாலும் நம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாகவும் மாறும். எனவே கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரையும் குறைத்து அதிகமாக தண்ணீரை எடுக்க வேண்டும். அதன் மூலமாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதை முறையாக கடைப்பிடித்ததன் மூலம் அந்த சிறுவன் நன்றாக உடலையும் குறைத்து ஒபிசிட்டி தொந்தரவில் இருந்தும் வெளிவந்து ஃபேட்டி லிவர் தொந்தரவு நீங்கி நன்றாக சரியானது.

Next Story

மன அழுத்தம் குடல் எரிச்சலை உண்டாக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Kiruthika tharan - Irritable Bowel Syndrome -  Explained 

ஐ.பி.ஸ் எனப்படும் Irritable Bowel Syndrome நோயைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

ஐ.பி.எஸ்  என்று Irritable Bowel Syndrome என்பது அல்சர் வழியில் வரும். இந்த ஐ.பி.எஸ் அலசரேட்டிவே கொலட்டிஸ் (ulcerative colitis) அண்ட் குரோன் (Crohn's disease) என இரண்டு விதமாக இருக்கிறது. தாங்க முடியாத அல்சருடன் ஒரு கிளையண்ட் வந்தார். எந்த நோயாக இருந்தாலும் முதலில் ஸிட்ரெஸ் அளவு தான் பார்க்கப்படும். சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் என்று ஒன்று ஸ்டிரெஸ் ஃபேக்டரை கண்டுபிடிக்க இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு 20க்கு 14 முதல் 18 வரை தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியில் கொண்டுவர சைக்கோ தெரப்பி கொடுத்து மாற்ற வேண்டும்.

அல்சரினால் வயிறு பகுதி மட்டும் புண்ணாக இல்லாமல் ஐபிடியை பொறுத்தவரைக்கும் மலக்குடலிலும் காயமாக இருக்கும். சில இடங்களில் புண்ணாகி தொற்றாக மாறிவிடும். சில சமயம்  h. Pylori என்ற ஒரு இன்ஃபெக்ஷன் கூட இருக்கும். சர்ஜரி அளவிற்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொண்டு உடனேயே சரி பார்த்துவிட வேண்டும். நாமாக மருந்து மற்றும் டயட் என்று போவதை விட மருத்துவரை அணுகுவது மிக சிறந்ததாக இருக்கும். இந்த கிளையண்ட் தன்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று அவரே சொன்னார். இவர் அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நிறைய சிக்கல்களினால் அலுவலில் தினசரி ஸ்ட்ரெஸ் என்றார். எனவே அவருக்கு ஸ்லோ சைக்கிளிக் போன்ற எக்ஸர்சைஸ் கொடுக்கப்பட்டது. வயிறு உப்புசம், புண் இருந்தால் இரவு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். உடனடியாக மோஷன் போவார்கள். எதையும் உடனே சாப்பிட முடியாது. அடிக்கடி வயிறு அதிகமாக வலிக்கும். மேலும் சில சமயம் மோஷனில் ரத்தம் கூட இருக்கும். அவருக்கு வாழ்வியல் மாற்றம் தான் முதலில் அளிக்கப்பட்டது. புரோ பயோடிக் உணவை கொடுத்து அவருக்கு ஐ.பி.டியை தூண்டும் உணவுகள் தடை செய்யப்பட்டது. சூப்பில் இருந்து எந்தெந்த காய்கள் ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் கொடுத்தோம். ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

மேலும் பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் என்ற கெமிக்கல் கூட பிரச்சினை கொடுக்கும் என்பதால் சில பழங்களும் தவிர்த்தே டயட் கொடுக்கப்பட்டது. வயிறு புண்ணாகி வலி இருந்ததினால் வெயிட் லிப்டிங் செய்து குறிப்பாக அப்ஸ் வொர்க் அவுட் செய்து அதன் பிறகு அவர் உடலிற்கு ஏற்ப ப்ரோட்டினை கொடுத்தோம். சிலருக்கு முளை கட்டிய பயிறுகள் கூட ஒத்துக் கொள்ளாது. அதனால் வேக வைத்த சிக்கன் பீஸ் கூட எடுக்கலாம். 

இப்படி டயட் மாற்றம் செய்து தூக்கத்தை முதலில் சரிப்படுத்தினோம். தூக்கத்தை நெறிப்படுத்த மொபைல் போனை குறைப்பது தான் முதற்கட்ட வழி. அதிலும் தூங்குவதற்கு முன்பு எந்த மறுநாள் குறித்த கவலை எதுவும் இல்லாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். சிலர் நடக்கப்போகும் விஷயத்தை யோசித்து யோசித்து தூங்காமல் இருப்பர். ஆனால் நன்றாக தூங்கினாலே மூளை நன்றாக வேலை செய்து அந்த பிரச்சனைக்கு தீர்வை தானாக கொடுக்க முடியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வரும்போது கொடுக்க கூடாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இதுவே பெரியவர்களுக்கு வரும்போது முழுமையாக சாப்பிடக்கூடாததை தவிர்த்து விட்டு புது உணவுகளை அப்பொழுதே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அந்த கிளைண்டுக்கு நிறைய வாழ்வியல் மாற்றத்தை கொடுக்க ஒரு 60லிருந்து 70% ஓரளவுக்கு சரியாகி வந்தார். மோசமான தொந்தரவு இல்லாமல் ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிகிறது. 

Next Story

உணவு முறை மாற்றத்தால் டயாபட்டீஸ் அளவு குறையுமா?- ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Kirthika Tharan | Nutrition | Diebetes | Heavyfood |

உணவு முறை மாற்றம் வைத்தே டயாபிடிக் அளவை குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

டயாபிடிக் பேஷன்ட் ஒருவர்  என்னிடம் வெளிநாட்டிலிருந்து வந்து சிகிச்சை எடுத்து கொண்டார். 100 யூனிட் அளவில் தினசரி என்று 20 வருடமாக இன்சுலின் எடுத்து வந்திருந்தார். அது கூடவே மாத்திரையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பார்த்துக் கொண்டிருந்ததோ ஐ. டி. வேலை. சுமார் ஒரு நாளைக்கு  12லிருந்து 14  மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் வேலை. 

தூங்கும் நேரம் தவிர மீத நேரம் முழுக்க உட்கார்ந்தே தான் இருப்பார். ஆனால் அவருக்கு வேறு ஏதேனும் மனக் கவலையோ அல்லது ஸ்ட்ரெஸ் எதுவுமே கிடையாது. ஆனால் 100 யூனிட் அளவு இன்சுலின் எடுப்பது மட்டுமே சிக்கல். என்ன செய்யலாம் என்று பார்க்கும் பொழுது முதலில் அவரது உணவு முறையை பார்த்தோம். அவர் நல்ல ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார்.  திடீரென்று அவரை ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதற்கு பதில் ஸ்நாக்ஸ் வகைகளில்  மாற்றம் மட்டும் செய்தேன். 

அவருக்கு பிரீ பையாடிக் மற்றும்  ப்ரோ பயோடிக் சாலட் கூடவே நிறைய ஸ்மூத்திகள், கிரீன் ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல் கொடுக்கப்பட்டது. அவர் சைவம் என்பதால் முட்டையும் சாப்பிட முடியாது. அதனால் முட்டைக்கு பதிலாக ஸ்ப்ரவுட்ஸ் நிறைய கொடுக்கப்பட்டது. இந்த கட் மைக்ரோபியத்திற்கும், டயாபட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. நம் உடலில் 100 டிரில்லியன் மைக்ரோப்ஸ் உள்ளது. அது 30 வகையான கார்போஹைட்ரேட்சை செரிக்கக் கூடியது. 

ஒரு சில முளை காட்டிய பயிர்கள் சுகர் அதிகப்படுத்தும். ஒரு சில முளை கட்டிய பயிர்கள் சுகரை குறைக்கும். ஒவ்வொரு உடல்வாகிற்கும் அவர்கள் உடம்பில் இருக்க கூடிய மைக்ரோபியம் அளவை பொறுத்து அவர்களுடைய மெட்டபாலிசம் மற்றும் டயாபட்டிக் போன்ற அளவுகள் மாறுபடும். எனவே அவருடைய சுகர் அளவை மானிட்டர் செய்து அதற்கு ஏற்ப கொடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர் சுகர் மானிட்டர் சார்ட் எனக்கு அனுப்பப்பட்டதால், எந்த உணவு எந்த அளவு சுகர் அவருக்கு அதிகப்படுத்துகிறது என்று கவனித்து பார்க்க வசதியாக இருந்தது. எனவே நாங்கள் ஒவ்வொரு வகையான உணவையும் அவரின் சுகர் அளவு மாற்றம் வைத்து சார்ட் பிரிப்பேர் பண்ணி உணவு பழக்கத்தை முழுவதுமாக மாற்றினோம்.  நம்பவே முடியாத அளவுக்கு 15 நாட்களில் இன்சுலின் 100 யூனிட்டில் இருந்து ஜீரோவாக குறைந்தது. அதன் பின்னர் முழுக்க மாத்திரையிலேயே எடுத்துக் கொண்டு,  அதன் பிறகு இன்னும் சீக்கிரமாகவே மாத்திரையும் நிறுத்தப் பட்டது. 

20 வருடமாக இன்சுலினை உடலில் செலுத்துபவர்களுக்கு இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிலர் சிரமப்படலாம். அதனால் ஆரம்பத்திலேயே கவனித்து உடனடியாக சரி செய்வது எளிது. அப்படி சரியான உணவு மாற்றம் செய்தாலும் மருத்துவரை பார்த்தாலும் உணவு முறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறதா என்று அவ்வப்போது (FBS) மானிட்டர் மூலம் செக் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று மாறிவரும் சிகிச்சை முறையில் நிறைய வசதிகள் இருக்கிறது. எனவே டயபேட்டிக்கை கட்டுக்குள் வைப்பது சுலபம். 90% டயபடிக் மக்கள் சரியான உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் எடுக்கும் போது வெளியே வந்துவிடலாம். ஆனால் 10% மக்கள் என்ன செய்தாலும் மாத்திரையில் இருந்து அவர்களால் வெளிவர முடியாது. ஆனால் சரியான கவனிப்பால் மாத்திரையின் அளவை அதிகப்படுத்தாமல் இருக்க முடியும். டயாபிடிக் ப்ரோக்ராம் பொருத்தவரை ட்ரீட்மெண்ட் ப்ரோக்ராம் கிடையாது. அது ஒரு  லேர்னிங் ப்ரோக்ராம் மட்டுமே. ட்ரீட்மென்ட் எடுப்பதை விட உங்கள் டயாபட்டிக்கை  நீங்களே  மானிட்டர் செய்து எந்த உணவு எந்த அளவு உடலில் மாற்றம் கொடுக்கிறது என்று ஒரு முறை நீங்களே கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுக்க எடுக்கும் உணவில் நீங்களே சுதாரித்து சரியானதாக எடுத்துக் கொள்ள முடியும்.