Skip to main content

சிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது - கலைஞர்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கலைஞர் முதல்வரானதும் திருவாரூரில் பல காலமாக ஓடாமல் கிடந்த தேரைப் புதுப்பித்து ஓட வைத்தார். அப்போது எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா? என்று கேட்டீர்கள். இப்போது நீங்களே தேர் ஓட்டுகிறீர்களே?' இது முரண்பாடாகத் தெரியவில்லையா? என்றார். உடனே கலைஞர்,"

 

kalaingnar photo



என்ன பாடினேன்? ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித்தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா என்று கேட்டேன். அப்போது மக்கள் ஏங்கித் தவித்தார்கள். இப்போது எங்கள் ஆட்சியில் அப்படி யாரும் ஏங்கித் தவிக்கவில்லை. அதனால்தான் தேரோட்டத்தை அனுமதித்திருக்கிறேன்'என்றார். விளக்கத்தைக் கேட்டுக் கலகலப்பானது அவை. அரிசிப் பஞ்சத்தில் மக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரை எப்படிச் சொல்லாமல் சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தவர்கள் மவுனமாகிவிட்டார்கள்.

 

kalaingnar



திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் களவாடப்பட்ட செய்தியும் தணிக்கை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியப் பிள்ளை தூக்கில் தொங்கியதும் நாடறிந்த செய்தி. அப்போது முதல்வராக மக்கள் திலகம் இருந்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். கலைஞர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதிகேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. அப்போது ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்த ஹண்டே எழுந்து, "கருணாநிதி திருச்செந்தூர் போனார். முருகனே அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். 
 

kalaingnar



இப்போது முருகன் சிலை அங்கே இல்லை'என்றார். உடனடியாக எழுந்த கலைஞர்,"திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் திருடுபோய்விட்டது என்று எண்ணினேன். சிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது' என்றார். மக்கள்திலகமும் சேர்ந்து சிரித்துவிட்டார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். எண்ணிலடங்காத சுவையான உரையாடல்கள், கருத்து மோதல்கள். கலைஞரிடம் பேசி வெல்ல முடியாது என்பதை அறிந்து ஏசி வெல்லலாம் என்றெண்ணிக் கரடி விட்டவர்கள் பின்னாளில் கூசி நின்ற நிகழ்வுகளும் ஏராளம்.


சென்னிமலை தண்டபாணி

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.