Skip to main content

பெண்களின் பொலிவுக்கு இது போதுமானது - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

It is sufficient for women's radiance - explains Ayurvedic doctor Sugandan

 

வள்ளலார் தந்த ஞான மூலிகையின் மருத்துவ குணம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

 

கரிசலாங்கண்ணி தான் வள்ளலார் தந்த ஞான மூலிகை. பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கரிசலாங்கண்ணி. வள்ளலார் ஒரு மிகப்பெரிய ஞானச் சித்தர். அவர் சொல்லும் ஞான மருந்துகளில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது கரிசலாங்கண்ணிக்கு தான். இதை தினமும் நாம் சாப்பிடலாம் என்கிறார் வள்ளலார். உடலுக்குள் இருக்கும் நீர் இதன் மூலம் விரைவில் வெளியேறும். மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாக இது அமைகிறது. இன்று பலருக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படுகின்றன. 

 

கல்லீரல் பிரச்சனை மற்றும் பித்தப்பை கற்கள் ஆகியவற்றை கரிசலாங்கண்ணி மூலம் சரிசெய்யலாம். அதை நாம் இன்று பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இனிமேலாவது இதை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். கால்சியம் உள்ளிட்ட நமக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கின்றன. மற்ற கீரைகளை நாம் சாப்பிடவில்லை என்றாலும் கரிசலாங்கண்ணியை நிச்சயம் சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணியை பொடியாகச் செய்து தினமும் அதை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மூளையின் செயல்திறனை இது அதிகரிக்கும். 

 

பால், தேன், நெய் உள்ளிட்டவற்றோடு இதை நாம் சேர்த்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் கரிசலாங்கண்ணி சாப்பிடலாம். குடிபோதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரிய தீர்வாக அமையும். இது நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. கண்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க கரிசலாங்கண்ணி சாப்பிடலாம். பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையைத் தீர்க்க கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்க்கலாம். கடுக்காய் போன்ற சிறந்த மூலிகை இது.

 

கரிசலாங்கண்ணி மூலம் தேகம் பொன்னாகும் என்கிறார் வள்ளலார். இன்று நாம் பியூட்டி பார்லர் சென்று உடலை அழகாக்குகிறோம். அதனால் நமக்குப் பலவிதமான அலர்ஜி ஏற்படுகிறது. ஆனால் கரிசலாங்கண்ணி மூலமாகவே நம்மை நாம் அழகாக்கலாம். அவ்வளவு ஆற்றல் மிக்க மூலிகை இது. இதைப் பொரியலாகவும், பொடியாகவும், மாத்திரையாகவும் சாப்பிடலாம். தேனோடு கரிசலாங்கண்ணி சேர்த்து சாப்பிடும்போது ஹார்மோன் பிரச்சனைகள் தீரும், ஹீமோகுளோபின் அதிகரிக்கும். கர்ப்பப்பை பிரச்சனைகளும் கரிசலாங்கண்ணி மூலம் மிக எளிதில் தீரும். வாதம், கபம், பித்தம் ஆகியவை இதன் மூலம் குணமாகும்.
 

 

 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.