Skip to main content

அதிக எடை குழந்தையின்மையை உண்டாக்குமா? - மகப்பேறு சிறப்பு மருத்துவர் தாட்சாயிணி விளக்கம்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Infertility Specialist  Dr. Dakshayani health tips

 

கருவுறுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தாட்சாயிணி விவரிக்கிறார்.

 

கணவன் மனைவி இருவரும் அதிக உடல் எடையோடு இருப்பது இப்போது பல தம்பதியினரிடையே முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அவர்கள் சரியான வழியில் உணவு உண்ணமாட்டார்கள். ஐடி துறை, வங்கித் துறை போன்றவற்றில் வேலை பார்ப்பவர்கள் தான் எங்களிடம் அதிகம் வருகின்றனர். பொதுவாக அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும். சூரிய வெளிச்சம் நம் மீது படுவது நமக்கு மிகவும் முக்கியம். நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டி சத்தை நமக்கு வழங்கும். 

 

மிக இளம் வயதினருக்கே இப்போது முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி என்பது இல்லாமல் இருப்பது, தவறான உணவுப் பழக்கம் போன்றவையே இதற்கான காரணமாக இருக்கிறது. உடல் உழைப்பு மற்றும் உடல் வேலை அவர்களுக்கு இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. எடுத்தவுடன் மாத்திரை மருந்து கொடுப்பது நம்முடைய பாணியல்ல. கருவுறுதலில் பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அதை சரி செய்வதற்கான பணியில் நாங்கள் ஈடுபடுவோம். ஹார்மோன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.

 

பெண்களுக்குத் தேவையான ஸ்கேன்களை நாங்கள் மேற்கொள்வோம். சிலருக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வலி ஏற்படும். சிலருக்கு அதிக உடல் பருமன் ஏற்படும். சிலருக்கு சரியான காலத்தில் மாதவிடாய் ஏற்படாது. முகத்தில் சிலருக்கு முடி வளர்ச்சி ஏற்படும். சில குறிப்பிட்ட உணவு முறைகளை நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைப்போம். யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வதால் அவர்களுடைய தினசரி வேலைகளை அவர்களால் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

 

மன அழுத்தம் குறைந்தாலே பாதி பிரச்சனைகள் குறையும். கவுன்சிலிங் செய்த பிறகு அவர்களுக்குத் தேவையான சரியான சிகிச்சையை நாங்கள் வழங்குவோம். மருத்துவ சிகிச்சையின் மூலமே பெரும்பாலான தம்பதியினரின் பிரச்சனைகள் தீரும். சிலருக்கு மருத்துவ சிகிச்சையையும் மீறிய தெரபிகள் தேவைப்படும். கணவனுக்கும் மனைவிக்கும் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு அவர்களுக்கு எந்த வகையான சிகிச்சை பலனளிக்கும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

 


 

Next Story

குழந்தையின்மைக்கு இந்த முத்திரை தீர்வா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Infertility - dr salai jaya kalpana Mudra 

குழந்தையின்மை, பிசிஓடி போன்ற பிரச்சனைகளுக்கு முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

பி.சி.ஓ.எஸ் என்று சொல்லக்கூடியது 'பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம்'. பொதுவாக சின்ரோம் என்று சொன்னால் நிறைய குறைபாடுகளை கொண்டிருக்கும். ஹார்மோன்ஸ் சரியின்மை, குழந்தை கருத்தரித்தலில் பிரச்சனை, முகத்தில் முடி முளைத்தல்,  தூக்கமின்மை, மாதவிலக்கு முறையின்மை என்று பல குறைபாடுகளை சேர்த்துச் சொல்வது. இந்த பிரச்சனைக்கு பிராண முத்திரை, அபான முத்திரை செய்யலாம். 

அபான முத்திரையை வெறும் வயிற்றில் கட்டை விரல் நுனியுடன், சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்கள் நீட்டி உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும்போது, குழந்தையின்மை, காரணம் இல்லாமல் குழந்தைப்பேறு தள்ளிப் போவது, பி.சி.ஓ.டி தொந்தரவு, குறிப்பாக கருப்பை குழாயில் அடைப்பு இருந்து அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இருப்பவர்கள் மூன்று மாதம் செய்யும்போது கண்டிப்பாக தீர்வு காணலாம். 

Mudra

நிறைய பேர் சினைமுட்டை வெளிவந்து அது முதிர்ச்சி அடைய மாற்றி மாற்றி ஹார்மோனல் ஊசி போட்டுக் கொள்வர். அப்படி இருக்கும்போது, இந்த முத்திரையை செய்வதன் மூலம் மட்டுமே இயற்கையாக அந்த சூழல் உடலில் நடக்கும். கழிவு நீக்க முத்திரையில் ஆரம்பித்து, பஞ்சபூத முத்திரையில் சமப்படுத்தி, தசவாயுக்களில் இருக்கும் ஐந்து வாயுக்களுக்கான முத்திரையில் இருக்கும் பிராண முத்திரை, அபான முத்திரைகளை செய்து வரும்போது முழுமையாக இந்த பி.சி.ஓ.டி, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு  தீர்வு காணலாம்.

அடுத்து பெண்களுக்கு, பி.சி.ஓ.டி க்கு நிகராக இருந்து வருவது தைராய்டு பிரச்சனை. இதில் குறிப்பாக ஹைபோ தைராய்டுக்கு முதல் அறிகுறியாக மாதவிலக்கு பிரச்சனை. ஏற்கனவே பி.சி.ஓ.டி இருப்பவர்குளுக்கு எடை அதிகரிப்பு, உடல் சோர்வு, மனச் சோர்வு, தோல் வறட்சி, தலை முடி வறட்சியாக காணப்படும். இதற்கெல்லாம் சூரிய முத்திரை நல்ல தீர்வு கொடுக்கும். மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மத்த விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதை இரண்டு கைகளிலும், இரண்டு வேளையிலும் 10 முதல் 20 நிமிடம் வரை செய்யவேண்டும். உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்களும், தொந்தரவு இல்லாதவர்களும், வெப்ப மண்டலங்களில் வசிப்பவர்களும், கோடை காலத்திலும் செய்யக்கூடாது. மேலும் செய்யும்போது நீர்க்கடுப்பு வந்தாலோ, கல்லடைப்பு பிரச்சனை ஏற்கனவே இருந்து எடுத்தவர்களோ, அதற்கான அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக இந்த முத்திரையை விட்டு விட வேண்டும். செய்து முடித்தவுடன் கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். இதிலே குரல் தொந்தரவும் இருப்பவர்கள் சங்கு முத்திரை செய்து வரலாம்.   

முத்ரா

ஒரு கை உள்ளங்கையில் மற்றொரு கையின் கட்டை விரலை வைத்து மற்ற விரல்களால் கட்டை விரலை மூடிவிட்டு, மீதி நான்கு விரல்களின் நுனியை கட்டை விரலின் நுனி மீது தொட வேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். சங்கின் தன்மை, சங்கின் நாதம், சங்கின் ஒலி இவை அனைத்தும் நம் உடலின் நரம்பு மண்டலங்களை சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. குரலை சார்ந்து இருக்கும் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள், தைராய்டு நோயினால் ஏற்பட்டிருக்கும் குரல் தொந்தரவுக்கு இந்த முத்திரை கொண்டு நிச்சயமாக தீர்வு காணலாம். மேலும் இதன் மூலமாக பாசிட்டிவ் எனெர்ஜியை நன்கு பெறலாம்.

Next Story

கருச்சிதைவு காரணங்களும் தீர்வுகளும் - மகப்பேறு சிறப்பு நிபுணர் டாக்டர் தாட்சாயிணி விளக்கம்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Miscarriage - Pregnancy - Dr Dakshayani Health tips

 

கருச்சிதைவு பிரச்சனை குறித்து கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயிணி விளக்குகிறார்.

 

கர்ப்பமானாலும் தானாக கருச்சிதைவு ஏற்படும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. இரண்டாவது ஸ்கேன் செய்து பார்ப்பதற்குள் இதயத்துடிப்பு நின்றுவிடுகிறது. உள் உறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருச்சிதைவு பிரச்சனை குறித்து நம்மிடம் பலர் வருகின்றனர். அவர்களை நாங்கள் முழுமையாக பரிசோதனை செய்வோம். அவர்களுக்கு ஏதேனும் தொற்று பிரச்சனை இருக்கலாம். கணவன் அல்லது மனைவியின் மரபியல் சார்ந்த பிரச்சனையால் கூட இது ஏற்படலாம். 

 

கருப்பை தொற்று காரணமாகவும் கருச்சிதைவு பிரச்சனை ஏற்படும். தங்களுடைய நேரம், பணம், எனர்ஜி என்று அனைத்தையும் செலவழித்த கணவன், மனைவி இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டவுடன் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அவர்களுக்கு நாங்கள் கவுன்சிலிங் கொடுப்போம். இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு பெண்களின் வயது ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு விந்துக்கள் சரியான அளவில் இல்லாமல் இருப்பதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம். 

 

பரிசோதனைகளின் மூலம் நல்ல கருவை மட்டும் பயன்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம். பலமுறை கருச்சிதைவு ஏற்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு நல்ல கரு ஏற்படுவது குறைவாகவே இருக்கும். அதைச் சரி செய்வதற்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைப்போம். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில், அடுத்த குழந்தை பெறுவதற்கு தம்பதியினர் பயப்படுவார்கள்.

 

முந்தைய நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை நாங்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம். இந்த மருத்துவ முறையின் மூலம் பெரும்பாலும் எங்களுக்கு வெற்றியே கிடைத்துள்ளது.