Skip to main content

எல்லா இரட்டையர்களுக்கும் DNA-க்கள் ஒரே மாதிரியாக இருக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

identical twins and their dna modifications

 

இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். இரட்டையர்கள், எல்லா சூழ்நிலையிலும் அவர்களின் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிப்பார்கள். இரட்டையர்கள் என்றால், எல்லோரும் அவர்களை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்ப்பார்கள். வீட்டில் இரட்டையர்கள் பிறப்பது, கடவுள் கொடுத்த வரம் என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

 

அப்படி பிறக்கும் இரட்டையர்கள், ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும், அவர்களின் ஐடென்டிக்கல் DNA 100% ஒரே மாதிரியாக இருக்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும்.

 

ஒரே கருமுட்டையில் இருந்து தோன்றும் 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்', ஒரே மாதிரியான மரபணுக்களை அவர்களது பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இருந்த போதிலும், இரட்டையர்கள் பிறக்கும் தருணத்தில் அவை மரபணு ரீதியாக ஒத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. தாயின் கருப்பையில் இந்த 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' மரபணு மாற்றத்திற்கு உட்படுவதே இதற்கு காரணம். செல்களில் உள்ள DNA -க்கள் தானாக புதிய DNA வடிவங்களை உருவாக்குகின்றன. சாதாரணமாக இவை வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலேயே சராசரி மரபணு மாற்றங்களின் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரட்டையர்களில் ஒருவருக்கு மரபணு மாற்றங்கள் எல்லா செல்களிலும் நிகழ்கின்றன. மாறாக இந்த இரட்டையர்களில் மற்றொருவருக்கு எவ்வித மாற்றங்களும் நிகழ்வதில்லை.

 

கரி ஸ்டீபன்சன் (Kari Stefansson) என்ற ஆராய்ச்சியாளரின் ஆய்வில், சராசரியாக 15% 'ஐடென்டிக்கல் இரட்டையர்களில்', ஒரு குழந்தை குறிப்பிட்ட தகுந்த அளவு மரபணு (genome) மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆனால், இரட்டையர்களில் மற்றொரு குழந்தை இந்த மாற்றங்களை மேற்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மனித மரபணுக்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், 10 முதல் 15 மரபணு மாற்றங்கள் இந்தக் கரு வளர்ச்சியின்போது நடைபெறும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

‘இந்த மரபணுக்களில் எந்த குறிப்பிட்ட வரிசையில் மரபணு மாற்றங்கள் நிகழ்கின்றன என்று இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் இது பற்றிக் கண்டறியப்படலாம்’ என்று ஸ்டீபன்சன் தெரிவித்துள்ளார்.

 

சைக்கோட் (zygote) என்று அழைக்கப்படும் ஒரே ஒரு கருவுற்ற முட்டை இரண்டாகப் பிரிந்து இரண்டு கருக்களை உருவாக்குகிறது. பெரும்பாலும், இந்த நிகழ்வு கருவுற்ற 1 முதல் 7 நாட்களுக்குள் நிகழ்கிறது. ஆனாலும், ஒரு சில சமயங்களில் இந்த நிகழ்வானது அரிதாகக் கருவுற்று 8 முதல் 12 நாட்களிலும் நிகழலாம்.

 

இந்தப் பிரிதல் நிகழ்வு 8 முதல் 13 நாட்களுக்குள் பிரியுமாயின் அதிக அளவிலான செல் மூலக்கூறுகள் இந்த இரட்டையர்கள் பிரியும் முன்னரே வளர்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

 

எனவே, இரட்டையர்களில் ஒரு குழந்தை அதிக மாறுபாடுகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்தப் பிரியும் நிகழ்வானது, கரு வளர்ச்சியின் மிக ஆரம்பக் கட்டத்திலேயே பிரிவுற்றதை இது உணர்த்துகின்றது. மேலும், இந்த பிரிதல் நிகழ்வு 10-க்கும் மேற்பட்ட செல்களின் வளர்ச்சி நடந்த பிறகே நிகழுமாயின், ஒரு குழந்தை மட்டும் அதிக அளவில் செல் மூலக்கூறுகளை எடுத்துக்கொண்டு வளரவும் வாய்ப்புள்ளது.

 

identical twins and their dna modifications

 

இயற்கை மரபியல் (Nature Genetics) என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வில், மூன்று தலைமுறையினரைக் கொண்ட மனிதர்களின் DNA-க்களை ஆராய்ச்சி செய்து, கீழ்க்கண்ட புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியில், 387  'ஐடென்டிக்கல் இரட்டையர்கள்' மற்றும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பங்கு பெற்றனர். இந்தக் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்ததில், எந்த இரட்டையர்களிடையே எவ்விதமான மரபணு மாற்றங்கள் நிகழ்ந்தன. அவை, எவ்வாறு அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்பட்டன என்பது தொடர்பான பல்வேறு காரணிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

 

இந்த ஆராய்ச்சி முடிவுகளில் 'ஐடென்டிக்கல் இரட்டையர்கள்' 100% ஒரே மாதிரியான DNA வைக் கொண்டிருப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த மரபணு மாற்றங்கள், ஒரு சில நோய்களுக்கு அல்லது பண்புகளுக்குக் காரணமாக அமைகின்றது.

 

இரட்டையர்கள் பொதுவாக ஒரே இடத்தில்தான் வளர்க்கப்படுவர். இருப்பினும், அவர்களுக்கிடையே தனிப்பட்ட குணங்கள் மற்றும் உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு ஆராய்ச்சியின் முடிவில், குணம் அல்லது உருவகத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களைக் காட்டிலும், வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களைப் பொதுவாக, இரத்த வகை, கண் நிறம், முடி நிறம், கால்கள், கைகள் மற்றும் காதுகளின் வடிவம் வைத்துக் கண்டறியலாம். இவற்றைத் தவிர்த்து, DNA பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.