Skip to main content

எண்களை நினைவில் வைக்க எளிய வழி! மனதின் நூலகம் #3

Published on 19/07/2018 | Edited on 21/07/2018
memory



சில விஷயங்களை நம்மால் எளிதாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும். சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வது கடினமாக இருக்கும். கடினமான விஷயங்களை, ஏதேனும் எளிதான ஒன்றோடு சம்பந்தப்படுத்தி மனதில் பதியச் செய்து விட்டால், பிறகு அதை எளிதில் நினைவுக்கு கொண்டுவர முடியும்.

சில வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ள, அந்த வார்த்தைகளைப் போன்று ஒலிக்கும் எண்களோடு சம்பந்தப்படுத்தி வைத்துக் கொள்வது ஒரு வழி. வார்த்தைகளை நினைவு படுத்த, குறிப்பிட்ட எண்களை நினைத்துக்கொண்டால் போதும். வார்த்தைகள் நினைவுக்கு வந்து விடும். உதாரணமாக சில எண்களும், அவற்றோடு சத்தத்தில் ஒத்துப் போகும்வார்த்தைகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

One      - Sun

Two     - Shoe

Three   - Tree

Four     - Door

Six       - Sticks

Seven   - Heaven

Eight    - Gate

Nine     - Fine

Ten      - Hen

 

memory power



சில எண்கள் சில விஷயங்களை நினைவுபடுத்தும். உதாரணமாக 14 என்றஎண், இது பிப்ரவரி 14, காதலர் தினம் என்ற விஷயத்தை நினைவுபடுத்தலாம் அல்லது ராமன் 14 வருடம் சீதையோடு சேர்ந்து காட்டுக்குப் போனதைநினைவுபடுத்தலாம். இது போன்று எண்களும் அவற்றோடு நினைவுக்கு வரும் சில விஷயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

16 ஸ்வீட் சிக்ஸ்டீன்

18 அடல்ட்ஸ் ஒன்லி

25 வெள்ளி விழா

50 பொன் விழா

60 வைரவிழா

100 நூற்றாண்டு விழா

கதையாக நினைவில் வையுங்கள்...

தனித்தனியான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றை ஒரு கதையைப் போல இணைத்து, நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, குதிரை, வண்டி, ஐஸ்கிரீம்,  திராட்சைப் பழம், பந்து என்று சம்பந்தமில்லாத சில வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 

அதை இப்படி இணைக்கலாம்: “திராட்சைப் பழத்தையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட்டு விட்டு, அவன் குதிரை வண்டியில் ஏறிச் சென்றான். வழியில் ஒரு பந்து கிடப்பதைப் பார்த்தான்”.

சில விஷயங்களை நாம் அன்றாடம் புழங்கும் மிக நன்கு தெரிந்த ஒரு இடத்தோடு தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக பச்சை வண்ணம், தண்ணீர், புத்தகம், கார், 12 என்ற நான்கு விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என வைத்துக் கொள்வோம். நமக்கு மிகவும் பரிச்சயமானது வீடு. வீட்டோடு இந்த நான்கு விஷயங்களையும் தொடர்புபடுத்தி கற்பனை செய்து கொள்ளலாம்.
 

memoery think



“நான் வீட்டில்  உட்கார்ந்திருந்தேன். பாத்ரூமில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது நான் ஒரு புத்தகத்தின் 12வது பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். ஜன்னல் கதவுகளுக்கு பச்சை வண்ணம் பூசப்பட்டு இருந்தது.”

இப்படிக் கற்பனை செய்து கொண்டால், அதை திரும்ப நினைத்துப் பார்ப்பது மிக மிகச் சுலபம். அப்படி திரும்ப நினைக்கும் போது, பச்சை வண்ணம், கார், தண்ணீர், 12, புத்தகம் போன்ற சொற்கள் தானாக நினைவுக்கு வந்து விடும். எழுத்துக்களை தனித்தனியாக நினைவில் வைத்திருப்பது கடினம். அந்த எழுத்துக்களை ஏதேனும் சொற்களோடு சேர்த்து நினைவில் வைத்துக் கொள்வது சுலபம். குழந்தைகள் அம்மா, ஆடு, இலை, ஈ என்று படிக்கிறார்கள். குழந்தைகள் அ, ஆ, இ, ஈ என உயிரெழுத்துக்களை சுலபமாக நினைவில் வைத்திருக்க இந்த வழிமுறை உதவுகிறது.


முந்தைய பகுதிகள்:

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? மனதின் நூலகம்!!!


நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2

 

 

 

​​​​​​​

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.