Skip to main content

துரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...? டாக்டர்.ஷாலினி விளக்குகிறார்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

இன்னும் ஹாசினி மரணத்தின் வலியும் தஸ்வந்த் மீதான கோபமும் நமக்கு முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி... சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் வன்கொடுமை செய்த செய்தி நம்மை வருத்தமும் வேதனையும் கொள்ள வைத்துள்ளது. இத்தகையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் கடமை. நாம் நம் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்று மனவள நிபுணர் டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்...   

 

dr.shalini



யாரிடம் கவனமாக இருக்கவேண்டும்...

சமுதாயத்தில் நல்லவன், தத்துவங்களை பேசுபவன், பக்திமான் என்றெல்லாம் நேர்மறையாகப் பெயர் எடுத்தவர்கள்தான் பெரும்பாலும் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை பார்க்கிறோம். மற்றபடி முரட்டுத்தனமானவர்கள், பொது விஷயங்களில் பங்கு கொள்பவர்கள் தன் கவர்ச்சியால் பலரை கவர முடியும் என நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு தகுதியான, சரிசமமான பெண்களுடன் உறவில் ஈடுபட முடிகிறது. தனக்கு சரிசமமான பெண்களை கவர முடியாதவர்கள்தான் குழந்தைகளை இலக்காகப் பார்க்கின்றனர். அதனால் 'அனைவரிடமுமே கவனமாகத்தான் இருக்க வேண்டு'மென்று குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.  

 

 


பெண் குழந்தைகளிடம் எதையெல்லாம் பேச வேண்டும்...

இந்த சம்பவத்தில், நடந்த விஷயத்தை பல மாதங்களாக குழந்தை பெற்றோரிடம் கூட சொல்லாமல் இருந்திருக்கிறது. குழந்தையிடம் கை, கால் என்று வெளிப்படையாக அறிமுகப்படுத்துவது போலவே, பேசுவது போலவே அனைத்து உறுப்புகளையும் அறிமுகப்படுத்த வேண்டும், அது குறித்தும் பேச வேண்டும். அது 'டர்ட்டி பார்ட்' என்ற எண்ணத்தை குழந்தைக்கு ஊட்டக்கூடாது. அதனால்தான் குழந்தைகள் அதுகுறித்துப் பேச தயங்குகின்றன. யாராவது தங்களை தவறாக அணுகினாலும் சொல்லத் தயங்குகின்றன. குழந்தைகள் எந்த விஷயத்தைக் குறித்தும் பெற்றோரிடம் பேசுவதற்கான ஸ்பேஸை பெற்றோர் தரவேண்டும். பொதுவாக பெண் குழந்தைகளை நாம், "உனக்கு என்ன தெரியும் நீ பொண்ணுதான", என்று பேசுவோம். இதைப் பார்க்கும் குழந்தைகள், பெண் ஏதோ ஒரு போகப் பொருள் என்றோ, தன்னைவிட மதிப்பு குறைந்தது என்றோ நினைத்து விடுகின்றனர். இதனாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.   

 

 


ஆண் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டும்...

பொதுவாக பெற்றோர்கள், 'தனது குழந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு அளிக்காததை நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும்' என்று சந்தோசத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இரண்டாவது, குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அடுத்து, குழந்தைகளின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதைத்தவிர அடிப்படையான விஷயங்களான ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தர  மறந்துவிடுகின்றனர். ஒன்று, அதை பள்ளி சொல்லித்தர வேண்டும் என நினைக்கிறோம் அல்லது அது வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறோம். இதுதான் நாம் தொடர்ந்து செய்துவரும் தவறு. அதனால் நாம் குழந்தைகளுக்கு அறத்தை, ஒழுக்கத்தை, பெண்களை மதிப்பதை கற்றுத்தர வேண்டும். 




 

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.