Skip to main content

"நோய் வெளியில் இருந்து வருகிறது, ஆரோக்கியம் என்பது மனதுக்குள் இருந்து வருவது..."

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

அன்பு, உலக வாழ்வியலின் அடிப்படை. உணர்வது மட்டுமே அதன் சிறப்பு. குழந்தைகள்  மட்டுமே  உடல் மொழியால்  மிக கச்சிதமாக அன்பை  வெளிப்படுத்துகின்றனர். நாம் பெரும் சாதனைகள் புரிந்ததாக மனதுக்குள் நினைத்து கொண்டிருப்போம். ஒரு மிக சிறிய உடல் நல குறைவை சந்திக்கும் போது குழந்தைகளை விட பலவீனமான மன நிலையில் இருப்போம். நாம் அனைவரும் மிகவும் அறிந்த புகழ் பெற்ற ஒரு மனிதரின் மனைவி எனக்கு போன் செய்து, அண்ணா வீட்டுக்கு வந்துட்டு போங்கண்ணா உங்க நண்பர் அவரு அழுது எங்களையும் அழவச்சுகிட்டு இருக்காரு என்றார். நான் அதிர்ந்தேன். என் நண்பரைப் பற்றி  மிக  சுருக்கமாக... தமிழக ஆளுமைகளில் ஒருவர். பரபரப்பாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில்  இவர் என்ன கருத்து சொல்வார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவும். பணக்காரர். அறிவாளி. கலைத்துறை மூலமாக உலகம் முழுக்க அறியப்பட்டவர். 

 

sd



அவரது பங்களாவில் நுழைந்த நான் வியந்தேன். ஒரு பணியாள் கூட காணவில்லை. வாங்கண்ணா உள்ளதான் இருக்காரு. வரவேற்றார் அவர் மனைவி. நான் உள்ளே நுழைய டாக்டர் வெளியில் வர  சரியாக இருந்தது. என்ன ஆச்சு டாக்டர்? புட் பாய்சன்தான்.. சரியாகி விட்டது. குழந்தை மாதிரி சேட்டை செய்யறாரு. என் சின்ன வயசு விளையாட்டு தோழன வர சொல்லி இருக்கேன் வந்தவுடன நீங்க போங்கனு சொல்லி ரெண்டு மணி நேரமா என்ன பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்காரு, அதுதான் உங்களுக்கு போன் செய்து வர சொன்னாங்க. நீங்கதான் அந்த சின்ன வயசு நண்பரா! நன்றி சார் என சொல்லி விட்டு சிட்டாகப் பறந்தார். படுக்கையில் இருந்த என் நண்பரின் கண்களை கூர்ந்து ஆழமாக பார்த்தேன். மரண கலவரம் அவர் கண்களில்.என்ன ஆச்சு? நண்பரே.

பேதி ஆச்சு, இப்ப சரியாகிருச்சு. ஆனா எனக்கு செத்துப்போன அம்மா ஞாபகமாவே இருக்கு. அவங்க என்னை கொஞ்சினது, விளையாண்டது, நான் குளிக்க அடம் பிடிச்சபோது அடிச்சது, என்னை அடிக்கும் போது அவங்க  காலையே  போய் திரும்ப திரும்ப நான் கட்டிக் கிட்டது, சின்ன வயசுல எனக்கு பேதி ஆனப்ப ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு பல முறை எனக்கு ''ஆய்'' கழுவி விட்டதுன்னு கொஞ்ச காலமாவே அவங்க ஞாபகம் அடிக்கடி வருது, கனவுலயும் அவங்கதான் வராங்க.... செத்துப் போயிடுவேன் போல் தெரியிது. கலங்கிப் போய் பேசினார் அந்த பிரபலம்.

இங்க பாருங்க நண்பரே... இந்த அம்மா நினைப்பு உங்களுக்கு மட்டுமில்ல... எல்லாருக்குமே ஒரு உணர்ச்சி கரமான விசயம்தான். உங்களுக்கு இப்ப உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கறதுனால அது மாதிரி தோணும். நீங்க அம்மா இருக்கற வரைக்கும் அவங்கள நல்லாதான கவனிச்சுக் கிட்டீங்க. எத்தன பேரு வயசான காலத்துல தாய சரியா கவனிக்காம விட்டுட்டு அப்பறம் அமாவாசைக்கு காக்காவுக்கு சோறு வச்சு கும்பிட்டு கிட்டு இருக்காங்க. நீங்க அந்த விசயத்துல தங்கம் ஆச்சே உங்க மனைவி கூட மாமியார் மேல அவ்வளவு பாசமா இருந்தாங்களே. முழுசா உடம்பு சரியாகட்டும், வாங்க நம்ம ஊரு பக்கம் ஒரு டூர் போயிட்டு வரலாம். நாம சின்ன வயசுல வெளயாண்ட இடம் ஸ்கூலு நம்ம ஆசிரியர்கள் சொந்தக்காரங்க எல்லாரையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம். 

உங்க பிள்ளைகள வெளிநாட்டுல இருந்து வர சொல்லுங்க அல்லது நீங்க மனைவியோட கிளம்பி போய் பிள்ளைகள பாத்துட்டு வாங்க. உங்க அம்மா வயசுல உள்ள ஆதரவில்லாத தாய்மார்களா பாத்து பண உதவி வைத்திய உதவி  பண்ணுங்க. உங்க கம்பெனில வேலை செய்யுற ஆளுங்களுக்கு சம்பளம் கூட்டி குடுத்து பாருங்க அவங்க சந்தோசப்படுவாங்க... உங்களுக்கும் மன அமைதி கிடைக்கும். உங்க அம்மாவுக்கு செய்யுறதா நினைச்சு நாலு பேருக்கு உதவி செய்யுங்க. நல்லா தூக்கம் வரும் கனவெல்லாம் வராது நண்பரே. இப்போது அவர் என் கண்களை ஆழமாக உற்று நோக்கினார். நான் அந்த அறைக்குள் வந்த போது அவர் கண்களில் இருந்த கலக்கம் இப்போது இல்லை. நோய் வெளியில் இருந்து வருகிறது. ஆரோக்கியம் என்பது மனதுக்குள் இருந்து வருவது. தாய்மையும் அப்படியே. மனதுக்குள் இருந்து வருவது. ஆண் குழந்தைகள் அம்மா மீதும் பெண் குழந்தைகள் அப்பா மீதும் அதிக ஈர்ப்புடன் இருப்பது மறுக்க முடியாத உண்மைதானே. 
 

Next Story

‘நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?’ - இதயம் நொறுங்க வைத்த சம்பவம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

friend who wandered while keeping him in a trolley' - a heartbreaking incident

 

மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.

 

 

Next Story

கால்வாயில் இருந்த சிவனடியாரின் சடலம்; வெளியான பகீர் வாக்குமூலம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

two man incident his friend while drunk in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருப்புசாமி புதூர். இங்குள்ள அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத அளவில் சிவனடியார் வேடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

 

இதற்கிடையில், சடலமாக இருந்தவரின் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்தக் காயம் இருந்துள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், இறந்து கிடந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மதியழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த போலீசார், அவர் தங்கியிருந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இருவரும், பல்வேறு உண்மைகளைக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட போலீசார் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

கொலை செய்யப்பட்ட மதியழகனும் பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதியன்று மதியழகன், பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம், போதையில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது, தலைக்கேறிய போதையில் இருந்த மதியழகன் ஸ்ரீமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் அங்கிருந்த கட்டையால் மதியழகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அது போதாதென்று பக்கத்தில் இருந்த கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இதற்கிடையில், தாங்கள் அடித்ததில் மதியழகன் இறந்துவிட்டதால் ஸ்ரீமுருகனுக்கும் பட்டுப்பாண்டிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதியழகனின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, மதியழகனின் உடலை ரெக்சின் கவரால் சுருட்டி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கருப்புசாமிபுதூர் பகுதிக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இருவரும் தப்பித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து, ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.