Skip to main content

பெண்கள் பூப்படையும்போது கவனிக்க வேண்டியவை... - வழியெல்லாம் வாழ்வோம் #17

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

பூப்படைதல், சடங்கு என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும் பெண்குழந்தைகளின் பருவமாற்றம், பெண்களின் வாழ்வின் அதிமுக்கியமான காலம். அந்த காலகட்டத்தை பிள்ளைகள் சரியாக அணுக இந்த சமூகமும் குடும்பங்களும் உதவுகின்றனவா என்பது கேள்விக்குறியே.

 

vazhiyellam vaazhvom


 

தாய்மாமன் சீர், தங்க வெள்ளிப்பாத்திரப் பகட்டுகள், ஊர் அதிரும் மேள தாளங்கள் என்று அத்தனை வகையிலும் தங்கள் குடும்ப கௌரவத்தை உலகுக்கு தண்டோரா போடுவதற்கு செலவிடும் நேரத்தையும், கவனத்தையும் வயதுக்கு வந்த குழந்தையின் மனோநிலையை தெளிவாக்குவதற்கு பெரும்பாலான குடும்பங்கள் காட்டுவதில்லை. அதன் விளைவுதான் பெண் குழந்தைகள் அந்த வயதிலிருந்தே மனஉளைச்சலுக்கு உள்ளாக காரணமாகிறது. இந்தக்கட்டுரை, பூப்படைதலின் அடிப்படை உடற்கூறியல், உடலியல் மாற்றங்களை விளக்குகிறது.


பூப்படைதலின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்கள்:

ஹார்மோன்களின் தலைவன் பிட்யூட்டரி  என்ற  சுரப்பி.  இதை  மூளையில்  உள்ள  தலாமஸ் என்ற  பகுதி கட்டுப்படுத்துகிறது.  இது  நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது. பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம்பிக்கும். அந்த காலகட்டத்தில், கருவகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் ஆகிய இரு வகையான ஸ்டிராய்டு ஹார்மோன்களை சுரக்கின்றன. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணியாகயாகும்.  மார்பகங்களின் வளர்ச்சிக்கும் முறையான மாதவிலக்கு ஏற்படுவதிலும் ஈஸ்ட்ரோஜன் இன்றியமையாதது. புரொஜெஸ்டிரோன் கருப்பை வளர்ச்சிக்கும், கருப்பையை குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் உதவுகிறது. எனவே சரியான ஹார்மோன் விகிதல் இருந்தால், பூப்படைந்த பெண்ணின் மாதசுழற்சி சரியானதாய் அமையும். இந்த ஹார்மோன்களின் சுரப்பும், அதனால் ஏற்படும் முகப்பரு, உடல்வலி சார்ந்த பிரச்சனைகளும் சாதாரணம்தான். ஆனால் வயதுக்கு வந்த பெண் குழந்தையால் இந்த திடீர் மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ள இயலாது. மாதவிடாய்க்காலங்களின்போது ஏற்படும் வலிகளுக்கும் அந்தக் குழந்தை மனதளவில் தயாராகியிருக்காது. அதன் விளைவாகவே, எரிச்சலைடைதல், கோபப்படுதல் போன்றவை. 

 


குழந்தைகளின் அறியாமை:

பருவமடையும் ஒரு சிறுமியின் மனதை இனம்புரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கின்றன. குழப்பமும், பயமும், கவலையும் அவளை வாட்டுகின்றன. அதற்கு காரணம் :   மாதவிடாய் பற்றி எதுவுமே தெரியாதிருப்பது அல்லது தவறாகத் தெரிந்து வைத்திருப்பது. மாதவிடாய் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் சிறுமிகள் அது ஆரம்பமாகிற சமயத்தில் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால் நிறைய சிறுமிகளுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருப்பதில்லை என ஆய்வுகள் காட்டுகின்றன. 23 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் பேட்டி காணப்பட்டபோது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்ததாகச் சொன்னார்கள். திடீரென ஒருநாள் வயதுக்கு வந்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததாகவும் சொன்னார்கள்.

எனவே இந்த உடல் மற்றும் மனவலிகளையும், குழப்பங்களையும் போக்கும் விதமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தல் அவசியம். உடல்வலிகளின் வீர்யம் குறைந்தாலே, மன உளைச்சலிலிருந்து குழந்தைகளை மீட்டுவிடலாம். அத்தைகய பாரம்பர்ய உணவு முறைகள் பற்றி காண்போம்.

 

 


உடல்வலிகளை குறைக்கும் உணவு முறைகள்: 

உதிரப்போக்கு இருப்பதால், பெண் பிள்ளைகள் சரிவிகித, கலப்பு உணவுகளை சரியான அளவில் உட்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு முதலில் தோன்றுவது ரத்த சோகை எனப்படும் அனீமியா குறைபாடு. இந்த ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பணு குறைப்பாட்டால், குழந்தைகள் எப்போதும் சோர்வாகக் காணப்படுவர். அதேபோல் கால்சியம் சத்துக் குறைபாட்டால் கால் உளைச்சல், இடுப்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.


 

சரிவிகித உணவு (Balanced Food):

சரிவிகித, கலப்பு உணவென்பது நம் பாரம்பர்ய உணவு முறையில் நம் முன்னோர்களால் நடைமுறையில் இருந்ததே. எல்லா வகையான சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதுபோல் சமைத்து வழங்கப்படும் உணவு சரிவிகித உணவு எனப்படும். பொதுவாக உடலுக்குத் தேவையான சத்துக்களை, விட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் என்று வகைப்படுத்தலாம். இவை அனைத்தும் ஒவ்வொரு வேலையும் நம் உணவில் இருக்குமாறு கவனித்து உணவுகளைத் தயாரித்து உண்ணும் முறை, சரிவிகித உணவுமுறை எனப்படும். இந்த சத்துக்கள் கிடைக்குமாறு கலந்து உணவுகளை உண்பதால் இது கலப்பு உணவு (Mixed Food) எனப்படுகிறது.


எடுத்துக்காட்டாக சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, ஆகியவற்றை சொல்லலாம். இதில் சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இப்போது அதீதமாய் நாம் பயன்படுத்தும் துரித உணவுகளான பிட்சா, பர்கர், பாஸ்தா போன்றவற்றில் சரிவிகித சத்துக்கள் கிடைப்பதில்லை.

 


பூப்படைந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு  உணவுகள்:

தமிழர்களின் வாழ்வியலில், பூப்படைந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒரு மாத கால கவனிப்பை பல நூல்கள் எடுத்துக்கூறுகின்றன. அத்தகைய காலங்களில் குழந்தைகளுக்கு முழு நேர ஓய்வு கொடுப்பதும், சரியான உணவுகளை வழங்கி அவர்களின் உடலை வலுவாக்குவதும் வழக்கமாய் இருந்தது. ஆனால் இப்போது பள்ளிகளில் அவ்வளவு விடுமுறை கொடுப்பதில்லை. அதனால் குறைந்தபட்சம், சரியான உணவுகளையாவது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

 

குழந்தை வயதுக்கு வந்த நாள் முதல், காலையில் எழுந்தவுடன் உளுந்தங்களி அல்லது புட்டு போன்ற பச்சரிசிப் உணவுகளைக் கொடுக்க வேண்டும். அவை குழந்தைகளின் எலும்புகள் (குறிப்பாக இடுப்பெலும்புகள்)  பலம் பெற உதவும். அதோடு கருப்பட்டி கலந்து கொடுப்பதால் கால்சியம் சத்தும் அதிகரிக்கிறது. உளுந்து வடை, நல்லெண்ணெய் போன்றவற்றையும் கொடுப்பதால் குழந்தைகளின் இடுப்பு எலும்பு வலுவாகவும், அதே நேரத்தில் நெகிழும் தன்மையுடையதாகவும் மாறுகிறது. இந்தத்தன்மை பின்னாளில், அந்தப்பெண் தாய்மையடைந்து பேறுகாலம் ஆகும்போது, இயற்கை வழியில் குழந்தை பெற உதவும்.

 

 

 

சில வீடுகளில், பூப்படைந்த குழந்தைக்கு முதல் முப்பது நாட்கள் பச்சை நாட்டுக்கோழி முட்டையை உடைத்து கொடுக்கும் வழக்கமும் உள்ளது. (பச்சை கோழிமுட்டை சாப்பிடுவது குறித்த பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன). அதே அளவு நல்லெண்ணெயும் உடனடியாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இப்படியான உணவு முறைகளால், குழந்தையின் கருப்பை பலமடையும். ஹார்மோன்கள் சுரக்கும் விகிதங்கள் சரியாகும் என்று இயற்கை உணவு ஆய்வாளர்கள் நிரூபிக்கின்றனர்.

 

பருவமடைந்த ஒரு மாதம் மட்டுமல்ல; உளுந்தங்களி, புட்டு ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் மாதசுழற்சி நாட்களில் தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கினால் அவர்களின் உடல் நலம் சரியாய் பேணப்படும்.


பூப்படையும் வயது:

முன்பெல்லாம் சராசரியாக பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் பூப்படையும் காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எட்டு/ஒன்பது வயதுகளிலேயே குழந்தைகள் பூப்படைவது சாதாரண விடயமாகிவிட்டது. சில குழந்தைகள் பதினைந்து வயதைத் தாண்டியும் பருவமடைந்து இருக்கின்றனர். இதன் காரணிகள் மற்றும் இவற்றை சரி செய்யும் இயற்கை வழிமுறைகள் பற்றி அடுத்த வாரம் காண்போம்.


குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது!!! ஏன்... வழியெல்லாம் வாழ்வோம் #16
 

 

 

Next Story

கள்ளத்தனமாக மது விற்ற பெண்கள்; சுற்றி வளைத்த காவல்துறை

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
police arrested the women who sold liquor by hiding it at home.

வேலூர் மாநகருக்குட்பட்ட விருப்பாட்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை வீட்டில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு வந்த ரகசிய தகவலின் பேரிலும், எஸ்.பியின் உத்தரவின் பேரிலும் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை காவலர்கள் நோட்டமிட்டு வந்தனர்.

கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து டாஸ்மாக் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஜான்சிராணி மற்றும் சாந்தி ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல்  செய்துள்ளனர். இது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

நடவு பணிக்காகச் சென்ற 22 பெண்கள்; டிராக்டர் கவிழ்ந்து விபத்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
18 people were injured when tractor in which the women  overturned

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்திலிருந்து 22 பெண்கள் நெல் நாற்று நடவு பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துகொண்டாபுரம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை முத்துகொண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அரக்கோணம் அடுத்த ஆணைப்பாக்கத்தில் இருந்து கோணலம் செல்லும் சாலையில் கன்னியம்மன் கோயில் அருகில் செல்லும்போது அங்குள்ள வளைவில் டிராக்டரை திருப்பும் போது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது. பக்கத்தில் சேறும் சகதியும் இருந்ததால் பெண்கள் அதில் விழுந்தனர். இதன் காரணமாக கை கால்களில் பலத்த காயங்களுடன் பெண்கள் உயிர்த் தப்பினர். இல்லாவிடில் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 108 ஆம்புலன்ஸில் 18 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து 4 பேரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், 14 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

விபத்து குறித்து டிராக்டர் டிரைவர் சரவணனிடம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மூதுரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, வள்ளியம்மாள், முத்தம்மாள், கோடீஸ்வரி, ரேவதி, பூங்கொடி, வசந்தம்மாள், பொன்னியம்மாள், கிரிஜா, சந்திரம்மாள், சித்ரா, இந்திரா உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.