Skip to main content

“கோவம் வந்தா கடந்து போங்க...” - மனநல மருத்துவர் டாக்டர் பூர்ண சந்திரிகா ஆலோசனை

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Get over it if you get angry - advises Psychiatrist Dr. Poorna Chandrika

 

தினந்தோறும் சாலையில் நடக்கும் விதிமீறல்கள் குறித்தும், அவற்றை நாம் எப்படி திருத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மனநல மருத்துவர் டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.

 

சாலையில் பலர் வழி விடாமல் செல்வது பற்றியும், ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பது பற்றியும் சமீபத்தில் இருவரிடையே நடந்த ஒரு விவாதத்தைப் பார்த்தேன். இப்போது சாலையில் அனைவரும் செல்லும் வேகம் அதிகரித்துள்ளது. பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலைகளில் சண்டை நடப்பதை தினமும் நாம் பார்க்கிறோம். அதைத் தடுப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. ஏன் இதுபோன்ற சண்டைகள் நடக்கின்றன? தினசரி ஒரு அசம்பாவித சம்பவமாவது சாலைகளில் நடக்கிறது. 

 

கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையும், பொறுமையும் அனைவருக்கும் வேண்டும். சாலையில் இறங்கி சண்டை போடுவதால் நம்முடைய பயணமும் மனநிலையும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். சிறிய பிரச்சனைகள் தான் வன்முறைகளாக மாறுகின்றன. இப்படியான பிரச்சனைகள் ஏற்படும்போது அந்த இடத்தை விட்டு நகர்வதே சரியான தீர்வு. யாராவது தவறான முறையில் வண்டி ஓட்டி இடித்துவிட்டால், போலீசாரையும் இன்சூரன்ஸ் அதிகாரிகளையும் அணுக வேண்டும். அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். 

 

கோபத்தோடு நாம் கத்தும்போது நம்மோடு வந்திருக்கும் நம்முடைய குடும்பத்தினரும் பயப்படுவார்கள். விபத்தில் பெண்கள் ஈடுபட்டால், அவர்களை எளிதில் குற்றம் சொல்லும் மனநிலையும் இங்கு இருக்கிறது. பெண்கள் என்றால் தவறான முறையில் தான் வண்டி ஓட்டுவார்கள் என்கிற தவறான கற்பிதம் இருக்கிறது. அந்த நேரத்தில் பிரச்சனைகளைக் கடந்து செல்வதுதான் சரியானது. இப்போதைய இளைஞர்களிடம் வேகம் அதிகமாக இருக்கிறது. மிக இளம் வயதில் குழந்தைகளுக்கு பைக் வாங்கித் தர வேண்டாம் என்று பெற்றோருக்கு நாம் எவ்வளவோ சொல்கிறோம். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.

 

கோபத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்தி மனித நேயத்தோடு வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால், சாலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீரும். நாம் கூறும் கடும் சொற்கள் எப்போதும் மறக்காது. சிலருக்கு கோபம் என்பது சுபாவத்திலேயே இருக்கும். மற்றவர்களைத் திட்டிவிட்டு அதற்காக வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள். மன நிம்மதியுடனும் அமைதியுடனும் வாகனத்தை ஓட்ட வேண்டும். அப்படி இருந்தால் ஜென் மனநிலைக்கு மாறிவிடலாம்.


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Dr Arunachalam | Breast Cancer | Women | man

 

நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது மருத்துவரைப் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது, நோய்க்கான அறிகுறி ஆரம்பித்ததுமே மருத்துவரை அணுக வேண்டிய தேவையையும் அவசியத்தையும் டாக்டர் அருணாச்சலம் நமக்கு விரிவாக விளக்குகிறார்.

 

என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார், மார்பக புற்று நோயா என்று பரிசோதித்து இருக்கிறார். பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை, கிட்டத்தட்ட ஆறுமாதம் அப்படியே விட்டிருக்கிறார். இப்பொழுது திடீரென வலியின் தன்மை அதிகரித்ததும் எங்களை அணுகினார். 

 

பரிசோதித்தால் மார்பகமே கருப்பு நிறமாக மாறிவிட்டது. நோயின் தன்மை நான்காவது நிலைக்கு போய் ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் சிகிச்சை அளித்தோம். ஆனால் புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு மார்பகத்தை நீக்கி 20 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களெல்லாம் உண்டு என்பதை மருத்துவத்துறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

 

விரல்களை குவித்துக் கொண்டு மார்பகத்தில் வலது புறத்தில் ஆரம்பித்து இடதுபுறமாக சுற்றி சுற்றி அழுத்தி சுயமாகவே பரிசோதனை செய்து பார்க்கலாம். பரிசோதனையின் போது எதாவது வலியோ, வேதனையோ, கட்டி போன்று தோன்றினாலோ மருத்துவரை அணுகி மம்மோகிராம் பரிசோதனை செய்து புற்றுநோயா அல்லது சாதாரண வலி தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

 

பாரம்பரியமாக நோய் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக வர வாய்ப்பு உள்ளது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுக்கு மார்பக புற்று நோய் வந்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மார்பகம் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது தான். பெண்ணுக்கு வளர்ந்து விடுகிறது. ஆணுக்கு வளர்ச்சியற்று இருக்கிறது. ஆணுக்கும் மார்பகத்தை சுற்றி வலியோ, கட்டியோ இருந்தால் பரிசோதித்து புற்றுநோயா என்று பார்த்துக் கொள்ளவும். மார்பக புற்றுநோய்க்கு ஆண், பெண் வேறுபாடெல்லாம் தெரியாது. இருவருக்கும் வரக்கூடியதே

 

அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உணவு முறையில் சீரற்ற தன்மை உள்ள அனைத்து ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் சுயபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்து ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சின்ன வயசிலேயே மூலம் நோய் வருமா? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

 Dr Chandrasekar | pilessolution | Youngers | food | Cancer |

 

மூலம் நோய் ஏன் வருகிறது. அதற்கான காரணத்தையும் சிகிச்சை முறையையும் நமக்கு பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்குகிறார்.

 

மலம் கழிக்கும்போது ஆசன வாயிலில் ஒரு தசை போல் வெளியே வரும், சிலருக்கு தசை உள்ளே போகும், சிலருக்கு வெளியேவே இருக்கும், இரத்தம் வரும். எல்லாருமே இரத்தம் வந்தால் மூலம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மூலத்திற்கும், பெளத்திரத்திற்கும், ஆசனவாய் கிழிந்து ரத்தம் வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. சிலர் எல்லாவற்றையுமே மூலம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அது ஒருவகை புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.

 

மூலம் என்பது மலச்சிக்கல் பிரச்சனையால் உருவாகிற ஒரு நோய் ஆகும். மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்கிறவர்களுக்கு ஒட்டுமொத்த அழுத்தமும் அடிப்பகுதிக்குச் சென்று இரத்தக்குழாய் விரிவடையும் தன்மையே மூலம் ஆகும். இரத்தக்குழாய் விரிவடைந்து ஆசனவாயிலில் வந்து நிற்கும், சிலருக்கு அது உரசி உரசி இரத்தம் வர ஆரம்பிக்கும். வழியே இல்லாமல் இரத்தம் கொட்டும். 

 

மூலத்தினை உள் மூலம், வெளி மூலம், வெளியே வந்து உள்ளே போவது, உள்ளேயே இருந்து கொள்வது, வெளியே வந்து வெளியேவே தங்கி விடுவது என்று நிலைகள் உள்ளது. ஆரம்ப கட்ட மூலத்தினை வெறும் மருந்து, மாத்திரை, உணவு முறை மாற்றங்கள் வைத்து சரி செய்து விட முடியும். ஆனால் அதற்கு அடுத்த நிலையின் போதுதான் அறுவை சிகிச்சை நிபுணரை அணுக வேண்டிய தேவை ஏற்படுகிறது. மருத்துவர்கள் அது கல்லீரம் சார்ந்த மூலமா, உடற்பருமனால் வந்த மூலமா என்று பரிசோதித்து சிகிச்சையை ஆரம்பிப்பார்கள்.

 

சிறிய வயதிலேயே மூல நோய் வருவதற்கு காரணம் என்னவென்றால் ஒழுங்கா மலம் கழிக்க சொல்லிக் கொடுக்காததுதான். அதோடு ஜங்க் புட் உணவு வகைகள், பிஸ்கட் போன்றவை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்பட்டு ஒழுங்காக மலம் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளாகி இரத்தக் குழாய்கள் அழுத்தம் கொடுத்து மூலப்பிரச்சனை சிறு வயதிலேயே வந்து விடுகிறது.  

 

குழந்தைகளின் சிகிச்சைக்காக வருகிற பெற்றோர்களிடம் மலம் கழிக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தீர்களா என்றுதான் முதலில் கேட்போம். சொல்லித் தரவில்லை எனில் எப்படி உட்கார வேண்டும் என்பதையும், ஆசனவாய் மலம் கழிக்க ஏதுவானதாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துவிட்டு அதற்கென ஜெல்லி உள்ளது அதை வாங்கி இரவில் தூங்கும்போது பயன்படுத்தச் சொல்லி ஆலோசனை வழங்குவோம். பிறகு உணவில் நார்ச்சத்து உள்ள கீரைகள், காய்கறிகள் சாப்பிட சொல்வோம். இதைப் பின்பற்றினாலே மூலம் வராமல் காக்கலாம். மூலம் நோயின் தீவிரத்தன்மை உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.   
 

 

விரிவான அலசல் கட்டுரைகள்