Skip to main content

இன்டர்வியூவ் பிரஷரா? இந்த கேமை விளையாடுங்கள்!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
tetris

 

 

 

பல கட்டங்கள் ஒன்றிணைந்த பல்வேறு வடிவங்கள், பல பல வண்ணங்களில் மேலிருந்து விழ, அதை கட்டடத்தைப் போல வடிவமைக்க வேண்டும். முறையாக அடுக்காவிட்டால் மேலே இருக்கும் கோட்டை கட்டடம் தொட்டுவிடும். அப்படி நடந்துவிட்டால், மேலிருந்து விழும் வடிவங்களுக்கு கீழே விழ முடியாத நிலை ஏற்படும். இப்படியாக அந்த ஆட்டம் முடிவுபெறும். இதற்குப் பெயர் டெட்ரிஸ். 
 

கையடக்க வீடியோ கேம்களில் தொடங்கி, தொலைக்காட்சிகள், செல்போன்கள் என இருக்கும் பலருக்கும் பரிட்சயமான இந்த வீடியோ கேம், வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் விளையாடும் அளவுக்கு எளிமையானது. வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவே கடந்துபோகும் இதுபோன்ற கேம்களின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்ற தகவலை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள். 
 

tetris

 

 

 

கலிஃபோர்னியாவின் ரிவர்சைட் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஆய்வொன்றை நடத்தினர். அதில், மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுக்காக காத்திருப்பவர், நேர்காணல் முடிந்துவிட்டு காத்திருப்பவர் போன்றவர்களுக்கு டெட்ரிஸ் கேம் விளையாடக் கொடுத்துள்ளனர். அவர்கள் அதை விளையாடத் தொடங்கிய சில நிமிடங்களில் எல்லா பிரச்சனைகளையும் மறந்து உற்சாக மனநிலைக்குத் திரும்பியுள்ளனர். இதன்மூலம், நேரத்தையும் எளிமையாகக் கடத்த முடிந்திருக்கிறது. அதாவது, தேவையான ரிசல்ட்டை போதுமான அளவுக்கு அடைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
 

இந்த விளையாட்டு மட்டுமின்றி உடல்சார்ந்த பல விளையாட்டுகளின் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்றாலும், அந்த நேரத்தில் உடலை வருத்திக்கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  ‘ஏம்பா.. எனக்கிருக்க டென்ஷன்ல இதை வேற பண்ணனுமா’ என்று கேட்காதீர்கள். வாய்ப்பிருந்தால் ஒருமுறை முயன்று பாருங்கள். 
 

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

ஹோட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

6 people were arrested for attacking the hotel worker and snatching his cell phone

 

மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம். அது குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளது. அதைக் கண்ட அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களைத் தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

 

இது குறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.