Skip to main content

பாத சிகிச்சை மூலமாக போதையிலிருந்து மீட்கலாம்; மன நோயினை குணமாக்கலாம் 

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

 foot reflexology can Recover  from addiction and Mental illness  

 

தங்களுடைய சிகிச்சையின் மூலம் மன நோயாளிகள், போதைக்கு அடிமையானவர்கள் போன்றோரை எவ்வாறு மீட்கிறோம் என்பதை விளக்குகிறார் திருவண்ணாமலையில் இயங்கி வரும் பாத சிகிச்சை நிபுணர்  ஆல்பா சுதாகர்.

 

பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஆறுதலாகப் பேசும் நபர்களைத் தேடுவார்கள். அமாவாசை போன்ற நேரங்களில் தான் அவர்களின் வேகம் அதிகரிக்கும். மற்ற நேரங்களில் குழந்தைகள் போன்று தான் இருப்பார்கள். சில நோயாளிகள் மட்டும் தான் ஆக்ரோஷமாக இருப்பார்கள். அவர்கள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார்கள் அல்லது மற்றவர்களைக் காயப்படுத்துவார்கள். அவர்களுக்கும் மனநல மருத்துவரின் மூலம் மருத்துவம் செய்கிறோம். போதைப்பழக்கம் உள்ளவர்கள் அது தங்களுக்கு மரணத்தைத் தான் தரும் என்பதையும் அறிந்தே செய்கிறார்கள். இது பழக்கம் கிடையாது. ஒரு நோய். நோயிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு அவர்கள் செல்லும்போது பழைய ஞாபகங்களில் மீண்டும் அந்தப் பழக்கங்களைத் தொடர்கிறார்கள். போதை வெறியில் இருக்கும்போது அவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும்.

 

உங்களுடைய அறிவு, திறமை அனைத்தும் போதை உணர்வால் களவாடப்படுகின்றது. போதை வஸ்துக்கள் அனைத்தும் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கக் கூடியவை. இதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவை. பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். முறையான வைத்தியம் தான் அவர்களைக் காக்கும். சினிமாத் துறையைச் சார்ந்த பலரும் நம்மிடம் சிகிச்சை எடுத்திருக்கின்றனர். மாதம் ஒரு நாள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குகிறோம். இதன் மூலம் பாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறோம். தங்களுடைய பிரச்சனைகளை யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்கும் பெண்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். வாரம் ஒரு நாள் நம்முடைய மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாமும் நடத்துகிறோம். 

 

உணவை நன்றாக மென்று சாப்பிடுபவர்களுக்குப் பெரும்பாலும் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசியறிந்து உண்ண வேண்டும். உணவு நன்றாக செரிமானமாக வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறை வீரியமாக இருக்கும். துரித உணவுகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு பாத சிகிச்சை குறித்த புரிதல் இருந்தால் குடும்பத்தில் யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.