Skip to main content

‘கண்ணாடி போடுவதை தடுக்க...’ - ‘சித்த முத்திரை’ மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Eye Treatment | Mudra | Dr Salai Jaya kalpana |

பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

டயாபெடிக் வருவதற்கு முன்பாக 20 வயதில் இருப்பவர்களுக்கு கூட ப்ரீ-டயாபெடிக் என்ற கண்டிஷன் வருகிறது. அதாவது அவர்களின் பெற்றோருக்கு இருந்த வாழ்வியல் சூழ்நிலையும் அப்படி இருக்க, இதுபோன்று ப்ரீ-டயாபெடிக் நிலை வருகிறது. அப்படி இருப்பவர்கள் அபான முத்திரை மற்றும் பிராண முத்திரை செய்வதினால் நல்ல பலன் தரும். இதை சரியான முறையில் சரியாக செய்து வருவது முக்கியம். பிராண முத்திரையை கழிவு நீக்க முத்திரை செய்து முடித்து, அபான முத்திரையும் முடித்து பிராண முத்திரையை செய்யவே தலை முதல் பாதம் வரை அனைத்து உபாதைகளையும் சரி செய்யும். பிராண முத்திரை நம் உடலில் இயங்கும் சக்தியை நன்றாக சுற்ற வைக்கும். இதற்குத் தடையாக ஆங்காங்கு எதுவும் இருக்கக்கூடாது. எனவே முதலில் அபான முத்திரை செய்து சரி செய்துவிட்டு பிராண முத்திரையை செய்ய வேண்டும்.

நம் உடலில் எல்லா தொந்தரவும் பிராண சக்தி குறைவது தான். பிராண சக்திக்கான முத்திரையை செய்யும்போது கண்களில் கண்ணாடி போடுவது கூட தடுக்க முடியும். தைராய்டு, தலைமுடி பிரச்சனை, பி.சி.ஓ.டி, ஒற்றை தலைவலி என்று அனைத்தையும் சரி செய்யும். இதை கண்டிப்பாக மல, ஜல கழிவு இல்லாமல், உணவுக்கு முன் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். உணவு உடலில் இருக்கும் போது செய்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் கால அளவு இருக்கிறது. ஆகாய முத்திரை என்பது ஒரு நாளைக்கே 20 நிமிடம் மட்டுமே 5 நிமிடமாக பிரித்து பிரித்து செய்ய வேண்டும். அதுவே அபான முத்திரையை 20 முதல் 40 நிமிடம் வரை ஒரே நேரத்தில் கூட செய்யலாம். ஒவ்வொருவரின் உடல் வாகு பொறுத்து கால நிலை, உடல் காலகட்டம், செய்யும் முறை என்று மாறுபடும்.

Eye Treatment | Mudra | Dr Salai Jaya kalpana |

இந்த முத்திரைகளை ஒவ்வொன்றாக பயிற்சி எடுத்த பின் முறையாகச் செய்ய வேண்டும். முன்னதாக இரண்டு நாளில் எல்லா முத்திரைகளையும் சொல்லி கொடுக்கும் முறை இருந்தது. இப்போது மாற்றி 14 வாரங்கள் எடுத்து ஒவ்வொரு முத்திரையாக அதாவது கழிவு நீக்க முத்திரை என்று முதலில் ஆரம்பித்து குழுக்களாக செய்து அவரவர் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அதற்கேட்ப நெறிமுறைப்படுத்தி முத்திரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு சிலருக்கு முத்திரை செய்யும்போதே அம்மை கொப்புளங்கள் போன்று உடலில் வரும். ஒரு சிலருக்கு உணவைக் கண்டாலே பிடிக்காது. அவரவர் கழிவுக்கேற்றார் போல உணவு வகை பிடிக்காமல் போகும். அந்த மாற்றங்களை வைத்து பிரச்சனைகளை அறிய முடியும். முதலில் மண் முத்திரையில் ஆரம்பித்து செய்ய வேண்டும். மண் முத்திரை என்பது எல்லாவற்றிற்கும் தொடக்கத்தை குறிக்கும். தொடங்க வேண்டும் என்பதை தள்ளிப் போடும் பழக்கம் உள்ளவர்கள், முதல் வாரம் இதனை செய்ய வேண்டும். இதிலும் குழந்தைகள், பதின் வயதுக்காரர்கள் செய்யக்கூடாது. ஏனென்றால் அளவு கடந்த சக்தியை கொடுக்கக் கூடியது. அதற்கடுத்த வாரம் நீர், அடுத்து நெருப்பு, காற்று, ஆகாயம் என்று முறையாக செய்ய வேண்டும். 

Eye Treatment | Mudra | Dr Salai Jaya kalpana |

தலை சுற்றல், மோஷன் சிக்னஸ் என்று சொல்லக்கூடிய தொந்தரவு, ஆகாயத்தில் விமான பயணம், மலை தொடர் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய தொந்தரவு, காதில் நீர் சமநிலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த ஆகாய முத்திரை வேலை செய்யும். ஆனால் எடுத்தவுடன் ஆகாய முத்திரை செய்தல் கூடாது. மற்ற வரிசையில் உள்ளதை முறையாக செய்த பின்னரே இதனை செய்யவேண்டும். திருமந்திர பாடலில், மருந்து என்பதற்கு ஒரு தனி பாடலே இருக்கிறது. 

அதாவது, "மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும் 
மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும் 
மறுப்பது இனிநோய் வாராதிருக்க 
மறுப்பது சாவையும் மருந்தெனலாமே.''

அதாவது உடல் நோயை எது தடுக்கிறது. எது மருந்து, நமது மன பிரச்சனையை எது சரி செய்கிறதோ அதுதான் மருந்து. இனி பிரச்சனை வராமல் தடுக்கக் கூடியது எதுவோ அதுவே மருந்து. மரணத்தை நெருங்கக் கூடிய அவசர நிலையில் கூட ஏற்படக்கூடிய அறிகுறிகளில் இருந்து முத்திரைகளை செய்யும்போது அதிலிருந்து தப்பிக்க முடியும்.

Next Story

சிறுதானியங்கள் தோல் பிரச்சனையை கொண்டு வருமா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Salai Jaya kalpana | Mudra | Food2 

வாதம், பித்தம், கபம் உடலமைப்பினர் எப்போது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

காற்று, வறட்சி, கடினம் போன்ற மூன்று குணங்களை கொண்டவர்கள் வாத உடலினர். எனவே அதற்கு எதிரான உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். வறட்சி இல்லாத கொழகொழப்பான, வெதுவெதுப்பான, இலகுவான பதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கொடுக்கும். எண்ணெய் குறைப்பது என்பது இவர்களுக்கு ஏற்காது. அதே போல இவர்கள் கடினமான பொறித்த வேகவைத்த உணவு வகைகளை எடுத்து கொள்ளக்கூடாது. 

நீர் டயட், பச்சை காய்கறி டயட் போன்ற உணவு முறை வாத தேகத்தினருக்கு ஒத்துவராது. பழுக்காத துவர்ப்பான காய் பழவகைகள் தவிர எல்லா பழங்களும் இவர்களுக்கு ஒத்து வரும். அப்படி பழுக்காத, துவர்ப்பான, பழத்தை எடுக்கும்போது உப்பு சேர்த்து சாப்பிடலாம். பொதுவாகவே அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எனவே அவர்கள் உணவில், உப்பு, புளிப்பு, இனிப்பு வகைகள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா வகை அரிசி உணவுகளும் ஏற்று கொள்ளும். குறிப்பாக  பச்சரிசி வெப்பத்தை சிறிது தரக்கூடியது என்பதால் பச்சரிசி கஞ்சி, பொங்கல் என வைத்து சாப்பிடுவது ஏற்று கொள்ளும். சிறுதானியத்தை பொறுத்தவரை தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை இவர்களுக்கு தோல் வியாதிகளை கொடுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

நீர் எடுத்துக்கொள்வதில் கூட ஒவ்வொரு தேகத்தினருக்கும் அளவு மாறுபடும். வெதுவெதுப்பான நீர் மட்டுமே வாத தேகத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்டெர்மிடியேட் பாஸ்டிங்  போன்ற ஒருவேளை உணவைத் தவிர்க்கும் டயட் வகை வாத தேகத்தினருக்கு மட்டுமே ஒத்து வரும். இவர்கள் இந்த டயட்டை ஒரு மூன்று மாத கால எடுக்கும்போது தானாகவே பசி ஏற்பட்டு பித்த உடலாக மாறும். அந்த சமயம் டயட்டை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். தமிழ் மருத்துவ முறையை பொறுத்தவரை வாத உடலினர் உணவுக்கு முன் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பித்த உடலினர் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். கப உடலினர் உணவுக்கு அரைமணி நேரம் பின் எடுக்க வேண்டும். அதே போல வாத உடலினர் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு நீர் குடித்து விட்டு , பின்னர் சாப்பிடவேண்டும். பசியை தூண்ட சூப் எடுத்துக்கொள்ளுதல் இவர்களுக்கு ஒத்து வரும். அதுவே பித்த உடலினருக்கு வயிற்று புண் வந்து அல்சரை ஏற்படுத்தும்.

எனவே வாத உணவின் சாப்பிடும் போது இடையில் நீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உணவுக்கு பின் சூடான பானங்கள் குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு ஒத்து வரும். வெறும் வயிற்றில் நெய், இஞ்சி சாறு, நீராகாரம் போன்றவை வாத உடலினருக்கு கண்டிப்பாக ஒத்து வரும். இஞ்சி சாறும் சரியான முறையில் எடுக்க வேண்டும். இஞ்சியை கட்டாயம் தோல் சீவி ஒரு துண்டு எடுத்து  நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து அதை  அப்படியே அரைமணி நேரம் தெளிய வைக்க அடியில் மாவு போல படியும், அதை தவிர்த்து மேலாக தெளிவு நீரை மட்டும் எடுக்கவேண்டும். கூட சேர்த்து கொள்ளலாம். துவர்ப்பான பானங்கள் குறிப்பாக டீ வகைகள் , க்ரீன் டீ , பிளாக் டீ போன்றவை வாத உடலினர்  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Next Story

வாதம், பித்தம், கபம் உடலமைப்புக்கான உணவுகள்  -  சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உணவு முறையை பின்பற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் உடம்பு என்பார்கள். அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

வாத உடலினைப் பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் தவிர்க்கவே கூடாது. ஏனெனில் அவர்கள் பொதுவாகவே வறட்சியான உடலமைப்பை கொண்டிருப்பர். அவர்கள் பால் உணவுகளான தயிர், நெய், வெண்ணை, தாளித்த மோர் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசான எண்ணெயில் பெருங்காயம், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவையே தாளித்து உப்பு கலந்து மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கப உடலினரைப் பொறுத்த வரை வெள்ளை உணவுகள் விஷம் போன்றது. கபம் என்றால் காற்றை குறிக்கும். இயல்பாகவே அவர்கள் எப்போதும் நிறைய சிந்தனை ஓட்டத்துடன் இருப்பர். எனவே இரவில் உறங்க சிரமப்படுவர். அவர்களெல்லாம் இரவில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு தூங்கலாம். சர்க்கரை சேர்க்காத அல்லது எலுமிச்சை கலந்த கார்பனேட்டட் பானங்களான சோடா போன்றவை மட்டுமே ஒத்து வரும். உணவுக்கு பின் எடுக்க கூடிய காபியோ, சூடான பானங்களும் அவர்களுக்கு ஒத்து வரும். பழங்களை பொறுத்தவரை எல்லா வகையும் அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். 

கீரை வகைகளை பச்சையாக ஸ்மூத்தி போன்றோ, வேக வைக்கமாலோ சாப்பிட கூடாது. கருணை கிழங்கு தவிர வேறு எந்த கிழங்கும் வாத தேகத்தினருக்கு ஒத்துக்கொள்ளாது. துவரம் பருப்பை வேகவைக்கும் போது பெருங்காயமும், விளக்கெண்ணெய் சேர்த்து  சாப்பிட்டால் அவர்களுக்கு வாயு தொந்தரவு எடுக்காது. அவர்களுக்கு பாசி பருப்பு, கொண்டைக் கடலை  மட்டுமே அஜீரண தொந்தரவு செய்யாது. கொண்டைக் கடலையையும் உப்பு காரம் சேர்த்து வேகவைத்த சாப்பிட வேண்டும். வாத தேகத்தினருக்கு  கை, கால் வலி ஏற்படும்போது கொஞ்ச நாளைக்கு நல்லெண்ணெய் தவிர்த்து விட்டு, நெய், கடலெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை வாதம், கபம் உடலமைப்பு கொண்டவர்களுக்கு வேகவைத்த கோழிக்கறி சூடு ஆனாலும் ஒத்துக்கொள்ளும். கடல் மீன்கள், சிறிய அளவில் ஆட்டுக்கறி போன்றவை சேர்த்து கொள்ளலாம். பித்த தேகத்தினரும் ஆட்டுக்கறி சேர்த்து கொள்ளலாம். வாத தேகத்தினர் முட்டை, கருவாடு வகைகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாயை பொறுத்தவரை நார்த்தங்காய், இஞ்சி வகைகள், மற்றும் அப்பளம் போன்ற உப்பு வகைகள் வாத தேகத்தினருக்கு ஒத்துக் கொள்ளும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிக நேரம் உடல் முழுக்க வைத்து வெயிலில் நின்று அதன் பின்னர் குளிக்க வேண்டும். அவர்கள் பொதுவாகவே மிதமான வெந்நீரில் குளிப்பது நன்று. அதே பித்த தேகத்தினர் வெயில் ஆரம்பிக்கும் முன்பு  குளித்து முடித்து விட வேண்டும். வாத தேகத்தினர் கால்களில் குளிர்ச்சியோடு இருக்கும். பித்த தேகத்தினருக்கு சூடு தலையில் தேங்கும். எனவே வாத உடலினர் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக தலை வரை வெந்நீர் ஊற்ற வேண்டும்.