Skip to main content

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6

Published on 14/07/2018 | Edited on 25/07/2018

புராதன மேற்கத்திய   நாகரிகங்களில்   எகிப்து  முன்னிலை  வகிக்கிறது.  நைல் நதிக்கரையோரத்தில் உருவான இந்த நாகரிகம்  உலகின்  மிக  மூத்த  நாகரிகமாககருதப்படுகிறது.

கற்காலம் முடிந்த கி.மு.4500 ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் கி.மு.3100 ஆம் ஆண்டுவாக்கில் எகிப்தின் உடை நாகரிகம் தொடங்கியது. அப்போதுதான் துணியை உருவாக்கக் எகிப்தியர்கள் கற்றுக்கொண்டனர்.

எகிப்து வெப்பப் பிரதேசமாக இருந்ததால் அவர்கள் அழகுக்காக மட்டுமின்றி தங்களுடைய வசதிக்காகவும் உடைகளை உருவாக்கினர். ஆளிச் செடிகளைப் பயிர்செய்து அவற்றை தண்ணீரில் உறவைத்து நாராக்கி துணி நெய்தனர். புராதன எகிப்தில் வாழ்ந்த அனைத்து சமூகத்தினரும் துணி நெய்தலையும், தையல் வேலையையும் தெரிந்து வைத்திருந்தனர். கம்பளியை அறிந்திருந்தாலும் அதை தூய்மையற்றதாக நினைத்தனர். விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி ஓவர்கோட் தயாரித்தனர். அத்தகைய கோட்டுகளை அரிதாக அணிந்தனர். வழிபாட்டு தலங்களில் அதை அணிவதை தவிர்த்தனர்.

 

 



விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட கீழ்த்தட்டு மக்கள் உடைகள் அணிவதில்லை. அடிமைகள் நிர்வாணமாகவே வேலை செய்தனர். ஆண்கள் தலையில் ஒரு துணியை போர்த்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த தலையணி மன்னருக்கும் அரசவை உறுப்பினர்களுக்கும் இடையே வேறுபட்டிருக்கும்.

சிறுவர்களும் அடிமைகளும் பாலியல் தொழிலளர்களும் உடைகள் அணிவதில்லை  என்றாலும், பரூவா மன்னர்கள் சிறுத்தை, சிங்கம் ஆகிய விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்தனர் என்று குறிப்புகள் உள்ளனர். கி.மு.2130 ஆம் ஆண்டுகளில் பழைய முடியாட்சி தொடங்கியது. அப்போதைய உடைகள் மிகவும் எளிமையானவையாக இருந்தன.

 

 


உடை அணிவதை தங்கள் கலாச்சாரத்தில் கட்டாயமாக கருதத் தொடங்கினர். சிலவகை உடைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆண்கள் ஷெண்டிட் என்ற பாவாடை வடிவிலான உடையை அணிந்து இடுப்பில் பெல்ட்டால் இறுக்கி கட்டியிருந்தனர். சிலநேரங்களில் முன்பகுதியில் மடிப்புகள் இருக்கும் வகையில் உடையை அணிந்தனர். இந்தக் காலகட்டத்தில் இந்த பாவாடை வடிவ உடை குட்டையாக இருந்தது. கி.மு.1600 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய மத்திய முடியாட்சியில் பாவாட வடிவ உடை நீளமாகியகு. கி.மு.1420 ஆம் ஆண்டுகளில் இடுப்பு உடையுடன் மார்புப் பகுதியை மறைக்க துண்டு, மேலுடை அணிந்தனர்.

 

 

womens



எகிப்தின் பழைய, மத்திய, புதிய முடியரசுக் காலங்களில் எகிப்திய பெண்கள் கலாசிரிஸ் என்று அழைக்கப்பட்ட எளிமையான உடையை அணிந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடை பிற்போக்குத்தனமாக இருந்தது. கணுக்கால் வரை நீண்ட உடை, மார்பகங்களில் பாதியை மறைக்கும் வகையிலோ, மார்பகங்களுக்கு கீழேயோ உடலை ஒட்டியிருக்கும். உடையை தோள்பட்டையுடன் இணைக்க இரண்டு அல்லது ஒரு இணைப்பு இருக்கும். அந்த இணைப்புகள் மார்பகங்களை ஓரளவு மறைக்கும் வகையில் இருக்கும். உடையின் நீளம் அதை அணியும் பெண்களின் சமூக அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

உடையில் அலங்காரத்திற்காக இறகுகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உடைக்கு மேலாக மேல் துண்டு, குல்லாய் அணிவது சிலருடைய விருப்பமாக இருந்தது. மேல் துண்டு, 4 அடி அகலத்துடன் 13 அல்லது 14 அடி நீளம் இருக்கும்.

 

 

 


கி.மு.1550 முதல் கி.மு.1292 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடை இறுக்கமான உறையைப் போல இருந்தது. மார்பகங்களுக்கு சற்று கீழேயும், கணுக்கால்களுக்கு சற்று மேலேயும் இருக்கும் வகையில் அந்த உடைகள் நெய்யப்பட்டன. லினன் நார்களால் நெய்யப்பட்டதால், உட்காரும்போதும், மண்டியிடும்போதும் இளகும் தன்மையுடன் இருந்தது.

குழந்தைகள் 6 வயதுவரை உடைகள் அணிவதில்லை. 6 வயதுக்கு பிறகு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் உடைகள் அணிய அனுமதி அளிக்கப்பட்டது. நீளமான முடியை வலதுபக்கம் கொண்டை போட்டிருந்தனர். உடைகள் அணியாவிட்டாலும், கால் தண்டை, கைகளில் வளையம், கழுத்தில் பட்டை, தலையில் அணியும் விதவிதமான நகைகளை சிறுவர்கள் அணிந்தனர். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தங்கள் பெற்றோரைப் போலவே உடைகள் அணிந்தனர். எகிப்தியர்கள்  தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டுவிக்குகளை அணிந்தனர்.

 

 

cosmetic set



பாப்பிரஸ் செடியில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் மதம் தொடர்பான சில விஷயங்களை எகிப்தியர்கள் எழுதிவைத்துள்ளனர். அதற்கு “புக் ஆஃப் தி டெத்” என்று  பெயரிட்டுள்ளனர். இதில் லினன் என்ற நார் இழையை தயாரிப்பதற்காக ஆளி செடிகளை பயிரிட்டனர் என்ற தகவல் இருக்கிறது.

நைல் நதி சமவெளி நெடுகிலும் ஏராளமான கல்லறைகள், பிரமிடுகள் உள்ளன.  அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தபோது, முப்பட்டை வடிவில் மரத்தால்செய்யப்பட்ட நெசவு கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். லினன் நூல்இழையைக் கொண்டு துணி நெய்ததை இது உறுதிப்படுத்துகிறது.

சில கல்லறைகளில் இருந்து கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேல்பகுதி ஆங்கில வி எழுத்து வடிவத்தில்கழுத்துடனும் நீளமான கைகளுடனும் வடிவமைக்கப்பட்ட உடை அது.

டுடங்காமன் என்ற எகிப்து மன்னர் காலத்தில் அவர் அணிந்த  உடை  முன்பக்கம் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.  கி.மு. 1600களில் இருந்து கி.மு. 1000 ஆண்டுகளுக்கு இடையில் இந்த உடையில் பல மாற்றங்கள்  கொண்டுவரப்பட்டன. பெரும்பகுதி எகிப்தியர்கள் வெள்ளை நிற உடைகளையேவிரும்பினர்.

கி.மு.15ஆம் நூற்றாண்டில் மஞ்சள், சிவப்பு, ஊதா, பச்சை ஆகியவண்ணங்களுடன்  உடைகள் தயாரிக்கப்பட்டன. பின்னல் வேலைகள் மூலம்கரைகள் மற்றும் வடிவங்கள்  இடம்பெறத் தொடங்கின. எகிப்திய சமூகத்தில்நகைகள் அணியும் பழக்கம் பரவலாக  இருந்தது. உயர்குடியினர் தங்கம், வெள்ளிமற்றும் விலை உயர்ந்த வைரக்கற்களை  பயன்படுத்தி தயாரிக்கப்பட்டநகைகளை அணிந்தனர்.

ஏழை மக்கள் செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டநகைகளை  அணிந்தனர். ஆண்களும் பெண்களும் வண்ணங்கள் பூசி தங்களைஅலங்கரித்துக்  கொண்டனர். ஆண்களும் பெண்களும் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு, ‘விக்’குகளை அணிந்தனர். பெண்கள் தங்கள்உதடுகளில் சாயம் பூசிக் கொண்டனர்.  மருதாணி இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட  ஆரஞ்சு  கலந்த  சிவப்பு  நிற  சாயத்தை  தயாரித்து நகங்களில்பூசிக் கொண்டனர்.

 

 


ஆண்களும் பெண்களும் மையை பயன்படுத்தி கண்களைச் சுற்றி வண்ணம் தீட்டிக் கொண்டனர். எகிப்தியர்கள் பயன்படுத்திய அழகுசாதனப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் கிடைத்திருக்கின்றன. அவை இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

எகிப்து நாகரிகத்துக்கு இணையாகவே மத்திய தரைக்கடல் பகுதியில் மெசபடோமியா நாகரிகத்திலும் உடைகள் அணியும் பழக்கம் தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்…

 

(இன்னும் வரும்)


முந்தைய பகுதி:

பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5

 

அடுத்த பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!!

 

 

 

Next Story

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.


 

 

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

 

 

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.


 

udaiyin kathai


 

கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

 

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

 

udaiyin kathai


 

கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

 

 

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

 

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.

 

udaiyin kathai


 

கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

 

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும்  ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

 

 

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது.  உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.  

 

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில்  டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.

 

udaiyin kathai


 

கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

 

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

 

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

 

 

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

Next Story

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.


 

udaiyin kathai


 

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

 

 

 

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.


 

udaiyin kathai


 

கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

 

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

 

udaiyin kathai


 

கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

 

 

 

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

 

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.

 

udaiyin kathai


 

கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

 

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும்  ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

 

 

 

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது.  உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.  

 

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில்  டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.

 

udaiyin kathai


 

கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

 

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

 

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

 

 

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7