Skip to main content

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அற்புத பலன்களை தரும் உடற்பயிற்சி!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

effects of workout on vaccination

 

உடற்பயிற்சி பழக்கவழக்கமானது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு அளிக்கிறது. இருப்பினும், இவை தடுப்பூசி போட்டதற்குப் பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்குமா? என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

 

உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் ஆரோக்கியம் நிறைந்த சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை, நாம் அனைவரும் பின்பற்ற, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ள ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதேசமயம், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிறந்த வழியாக தற்போது, உலகெங்கிலும் கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், உடற்பயிற்சி பழக்கவழக்கத்திற்கும், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கும் சம்பந்தம் உள்ளதா? ஆம். உடற்பயிற்சியானது தடுப்பூசி போட்டதற்குப் பிறகு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 

இது தொடர்பாகக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சி முடிவுகளில், தடுப்பூசி போட்ட பின் உடற்பயிற்சி செய்பவர்களிடமும், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடமும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறன் அதிகம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், முகமூடி அணிவது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கரோனோ பரவல் தடுப்பு வழிமுறை பட்டியலில் உடற்பயிற்சி மேற்கொள்வதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கரோனா தடுப்பூசி போடுவதற்கு 2-3 மாதங்களுக்கு முன் உடற்பயிற்சி அல்லது ஏதாவதொரு உடல் ரீதியான செயல்பாடுகளிலோ ஈடுபடுங்கள். 

 

ஆராய்ச்சியாளர்கள் கேட் எட்வர்ட்ஸ் மற்றும் ராபர்ட் பூய் ஆகியோரின் 2013 ஆய்வறிக்கையில், உடற்பயிற்சி செய்வது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உடற்பயிற்சி செயல்பாடுகள் காரணமாக வயதானவர்களுக்கு தடுப்பூசிக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டதை உறுதி செய்துள்ளது.

 

தடுப்பூசிக்கு முன்னர் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொண்ட  வெவ்வேறு வயதுடைய நபர்களை உள்ளடக்கிய 20 நபர்களிடம் நடத்திய மற்றொரு சோதனையின் முடிவில், 'கடுமையான' அல்லது 'நாள்பட்ட' உடற்பயிற்சியின் வெளிப்பாடு காரணமாகத் தடுப்பூசி போட்டதற்குப் பிறகு நோயெதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதேபோன்று, 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பெறுவதற்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், இளம் வயது வாலிபர்கள் கொண்ட ஒரு குழு 25 நிமிடங்களுக்கு உடல் பயிற்சிகளை மேற்கொண்டனர். தடுப்பூசிக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யாத மற்றொரு குழுவோடு ஒப்பிடும்போது, அவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்குப் பிறகு சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைத்தது உறுதி செய்யப்பட்டது.

 

இது குறித்து புதுடெல்லியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் மனோஜ் சர்மா கூறும்போது, "உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான பழக்கம் போன்ற நல்ல வாழ்க்கை முறை தேர்வுகள் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன" என்கிறார். அதேபோன்று, "சுறுசுறுப்பாக இல்லாதவர்கள், உட்கார்ந்த இடத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவோர் பலவீனமான நோயெதிர்ப்பு சக்திகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடற்பயிற்சி செய்பவர்களின் வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகள், தடுப்பூசிக்கு சிறந்த முடிவை அளிக்கக்கூடும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ”என்கிறார்.

 

மேலும், 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, உடற்பயிற்சி செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின்,  மென்மையான வீக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற குறைவான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக,  எச்.பி.வி தடுப்பூசி பெற்ற 116 இளம் பருவத்தினரை இந்த குழு கவனித்தது. தடுப்பூசி போட்டதற்குப் பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குச் சிறிய புண், உடல் வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை எந்தவொரு தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாகும் மற்றும் பாராசிட்டமால் போன்ற எளிய மருந்துகள் அதைச் சரிசெய்யக்கூடும் என்பதும் தெரிவித்திருந்தது.  இருப்பினும், உடற்பயிற்சி செய்யும் நபர்களின் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இதனைத் தடுக்க வழிவகுக்கும். எனவே, ஒருவரது அன்றாட வாழ்வில் வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவு  உட்கொள்வதும் மிகவும் அவசியம். ஏனெனில், ஆரோக்கியமான உணவு  ஒருவரின் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தேவையான நோயெதிர்ப்பு செயல்முறைகளில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இந்த இரண்டுமே ஒருவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை விஷயங்களாகும்.

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.