Skip to main content

தலைமுடியை இப்படிக் கழுவினால் உதிராது - சித்த மருத்துவர் லட்சுமி கீதா விளக்கம்!

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

DrLakshmi geetha | Siddha | Hairfall | Hairgrowth

 

தலைமுடி பராமரிப்பு குறித்து சித்த மருத்துவர் லட்சுமி கீதா விரிவாக எடுத்துரைக்கிறார்

 

அனைவருக்கும் அழகைக் கொடுப்பது தலைமுடி. கரிசலாங்கண்ணியால் செய்யப்படும் தைலம் தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். இப்போது நாம் அதிகமாக ஷாம்பூ பயன்படுத்துகிறோம். அதிகமான கெமிக்கல் உள்ள ஷாம்பூவை பயன்படுத்தும்போது அது தலைமுடியை பாதிக்கிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் ஏற்படும். சின்ன வெங்காயத்தின் சாறை தலையில் தேய்க்கும்போது முடி உதிரும் பிரச்சனை சரியாகும். ஷாம்பூ பாக்கெட்டை பிரித்து அப்படியே பயன்படுத்தாதீர்கள். 

 

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு அதன் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெய் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும். வாரத்துக்கு இருமுறையாவது நிச்சயம் தலைக்கு குளிக்க வேண்டும். தலை என்பது உடலின் மிக முக்கியமான ஒரு பகுதி. சித்த மருத்துவத்தில் பல வகையான எண்ணெய்கள் முடி உதிராமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான சூடு இருக்கும்போது சந்தனாதி தைலம், பித்தம் அதிகமாக இருக்கும்போது சுக்கு தைலம், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும்போது பொன்னாங்கண்ணி தைலம், இளநரை இருக்கும்போது கரிசலாங்கண்ணி தைலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

 

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதாலும் முடி உதிர்தல் ஏற்படும். குடலில் கிருமிகள் அதிகம் இருந்தாலும், தூக்கமின்மை இருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சித்த மருத்துவத்தின் மூலம் உங்களுக்கு நிச்சயம் இதற்கான நல்ல தீர்வு கிடைக்கும். பலருக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கும். வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு குளித்தாலே பேன் வராமல் தடுக்கலாம். கோழி முட்டையில் வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து, அதை தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்தால் முடிக்கு நிறைய சத்து கிடைக்கும். 

 

செம்பருத்தி இலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அரைத்து, துணியில் கட்டி பிழிய வேண்டும். அந்த சாறை தலையில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இது முடி கொட்டுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

 


 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.