Skip to main content

கண் சிவப்பாக இருப்பதற்கான காரணம் என்ன? - கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்கம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

  Dr Sasikumar | Eye care | Drink Water

 

கண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியம் தர வேண்டியது அவசியமாகும். கண் சிவப்பாக இருப்பதற்கான காரணம் குறித்து கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விவரிக்கிறார்

 

கண் காய்ந்துபோகும் பிரச்சனை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. கண்ணின் இமையில் எண்ணெய் உற்பத்தியாகி வெளியேறும் துவாரங்களில் தண்ணீர் போல் வெளியேற வேண்டிய எண்ணெய் கெட்டியாகிறது. இதனால் கண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இதனால் கண்களில் புண் ஏற்பட்டு சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. தூக்கமின்மையால் தான் கண்கள் சிவக்கின்றன என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் டென்ஷனாக இருக்கும்போது வயிற்றின் தண்ணீர் உறிஞ்சும் சக்தி குறையும். 

 

எனவே வயிறு புண்ணான பிறகு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அதனால் பயனில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். இதனால் வயிறு காய்ந்து போகிறது. கண்கள் சிவந்து போதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். சொட்டு மருந்து மட்டும் இதற்கு பத்தாது. கண்ணில் இருக்கும் எண்ணெய் தண்ணீரோடு கலக்க வேண்டும். இதன் மூலம் கண்களில் வலுவலுப்பு ஏற்படும். அப்போதுதான் கண் காய்ந்து போகும் பிரச்சனை சரியாகும். 

 

வெதுவெதுப்பான தண்ணீரில் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். சோற்றுக்கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். கண்களில் கைகள் மூலம் மசாஜ் செய்யலாம். இந்த நேரத்தில் கண்களை அழுத்தக்கூடாது. இதை காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை செய்யலாம். வயிற்றில் புண், வயிற்றில் எரிச்சல், தலைவலி, தூக்கம் கெடுதல், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுதல், சர்க்கரையின் அளவு அதிகமாதல், மலச்சிக்கல் போன்ற பல்வேறு பின்விளைவுகள் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும்.
 

 

 

Next Story

சிறு வயதில் பார்வை குறைபாடு வருவது ஏன்? - கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்கம்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

 Dr Sasikumar |Eye care

 

ஆக்சிஜனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விவரிக்கிறார்

 

உடல் நன்றாக இயங்குவதற்கு நம்முடைய ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜன் தேவை. யோகாவில் நாம் செய்யும் பிராணயாமம் உடலுக்கு மிகவும் நல்லது. இதன் மூலம் ஆக்ஸிஜன் சரியான அளவில் நம்முடைய ரத்தத்தில் சென்று சேரும். அனைத்து உடல் உறுப்புகளும் நன்கு வலுவடையும். கண் காய்ந்து போதல் என்பது முக்கியமான ஒரு பிரச்சனை. கண்ணுக்குள் இருக்கும் லென்ஸுக்கு சரியான முறையில் ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அதனால் பவர் ஏறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 

 

இதன் மூலம் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆக்சிஜன் சரியான முறையில் செல்லாததால் சிறுவயதிலேயே பலருக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சொந்தத்தில் திருமணம் செய்வதும் குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு மாலையில் கண்பார்வையில் குறைபாடு ஏற்படும். காலம் செல்லச் செல்ல பகலிலும் அவர்களுக்கு அந்தப் பிரச்சனை ஏற்படும். பிராணயாமம் செய்வது இவர்களுக்கு நல்லது.

 

சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆக்சிஜன் தெரபி மூலம் பலருக்கு கண்பார்வை சரியாகி இருக்கிறது. நானே பலருக்கு இதைப் பரிந்துரைத்திருக்கிறேன். மாலைக்கண் நோய்க்கு தீர்வே இல்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆக்சிஜன் தெரபி அவர்களுக்கு பெருமளவில் உதவியிருக்கிறது. முழுமையாகப் பார்வையை இழந்த ஒருவருக்கு ஆக்சிஜன் தெரபி கொடுத்த பிறகு, தன்னுடைய வேலையைத் தானே அவரால் செய்துகொள்ள முடிந்தது. 

 

மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தூக்கம், உணவு முறை என்று இவை அனைத்தும் வாழ்வில் மிக முக்கியமானவை. ஆக்சிஜன் தெரபியை குறைந்தது பத்து முறையாவது செய்ய வேண்டும். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த தெரபி உதவுகிறது. சில ஊர்களில் மட்டுமே ஆக்சிஜன் தெரபி பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இதைச் செய்வதற்கு எந்த பயமும் தேவையில்லை. சோர்வாக இருப்பவர்கள் கூட ஆக்ஸிஜன் தெரபி செய்யலாம். விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் பலர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
 

 

 

Next Story

தூக்கமின்மை கண்களைப் பாதிக்குமா? - கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்கம்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Does lack of sleep affect the eyes? - Explanation by Ophthalmologist Sasikumar

 

தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், தூக்கம் குறைந்தால் அதனால் கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும் என்றும் கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்குகிறார்

 

தலை வலி என்று என்னிடம் யாராவது வந்தால் அவர்கள் சரியாகத் தூங்கினார்களா என்று நான் முதலில் கேட்பேன். இல்லை என்பார்கள். தூக்கம் வராமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் செல்போன் பார்ப்பது தான். மொபைல் பார்க்கும்போது கண்ணும் மூளையும் முழுமையாக ஆக்டிவாக இருக்கும். அந்த வெளிச்சம் இருப்பதால் தூக்கம் சுத்தமாக வராது. ஆழ்ந்த தூக்கமே மனிதர்களுக்கு நல்லது. சின்ன சத்தத்துக்கு கூட எழுந்து விடும் நபர்கள் இருக்கிறார்கள். அதில் பெருமை எதுவும் இல்லை. ஆழ்ந்த தூக்கம் தான் தேவை. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

 

தூங்காமல் வேலை செய்வது நல்லதல்ல. சரியான தூக்கம் வரவில்லை என்றாலே நம்முடைய உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தூக்கமின்மையால் கண்ணில் வலி, எரிச்சல் ஆகியவை ஏற்படும். கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். உணவை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இப்போது நாம் நியூஸ் பார்ப்பதே செல்போனில் தான். ப்ளூ-ரே வெளிச்சத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிய வேண்டும். இதன் மூலம் கண்களை நம்மால் பாதுகாக்க முடியும். கண்புரை நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.

 

விரைவில் செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவுகளை இரவில் எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கம் வரும். இரவு 9 மணிக்கு தூங்குவது நல்லது. மேற்கத்திய நாடுகளில் சீக்கிரமாக உண்டு சீக்கிரமாகத் தூங்கும் பழக்கம் இருக்கிறது. அதை நாமும் பின்பற்றலாம்.