Skip to main content

பல நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணமா? - டாக்டர் சங்கர் விளக்கம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Dr Sankar Health tips

 

உடலின் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் மருத்துவத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட பிரபலமான டாக்டர் சங்கர் விளக்குகிறார்

 

மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல்வேறு மருந்துகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் கிலோ கணக்கில் உடலுக்குள் செலுத்தும் மருந்துகளும் இருக்கின்றன. இந்த மருந்துகளால் கண் பாதிப்புகளிலிருந்து ஒருவரை பெருமளவு குணப்படுத்த முடியும். பல மாத்திரைகள் செய்யும் வேலையை ஊட்டச்சத்து மருந்துகள் செய்துவிடும். அனைத்து வகையான உணவுகளையும் சரியான அளவில் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடுவது தவறு. சிகிச்சைக்கு வரும்போது உணவில் செய்ய வேண்டிய மாற்றங்களை நாங்கள் பரிந்துரைப்போம்.

 

ஆரம்பகட்ட சர்க்கரை நோயில் இருப்பவர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையின் மூலமாகவே சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் குறைந்தது 8 மணி நேரம் நிச்சயம் தூங்க வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூரிய வெளிச்சத்தில் இருந்து வரும் வைட்டமின் டி சக்தியை உள்வாங்கும் தன்மை தெற்காசியர்களுக்கு குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன. அதனால் சிலர் தனியாக வைட்டமின் டி மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய நிலைமை உள்ளது.

 

இயற்கையோடு இணைந்து வாழ்வதன் மூலம் கெடுதல் தரும் விஷயங்களிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். உடலுக்குத் தேவையான எதுவுமே அதிகமாக இருந்தால் அதை நச்சுக்கள் என்கிறோம். அனைவரும் உட்கொள்ளும் பாராசிட்டமால் மாத்திரையை அதிகமாக உட்கொண்டால் அதுவும் நச்சு தான். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் வேலையை நம்முடைய கல்லீரல் செய்கிறது. சாதாரண மினரல் வாட்டர் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் வருவதால் அதில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறது. அந்தக் காலத்தில் நச்சுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. 

 

இப்போது பரவும் நச்சுக்களால் கேன்சர் வரும் அபாயமும் இருக்கிறது. அளவுக்கு அதிகமான பாக்டீரியாக்களை நம்முடைய உடலால் தாங்க முடியாது. உடலில் உள்ள நச்சுக்களை மாத்திரை மருந்துகளின் மூலம் வெளியேற்ற முடியும். பொதுவாக ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை அவரே சொன்னால் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் கண்டுபிடிக்க முடியும். மனதுக்கு அமைதி தரும் நடவடிக்கைகளின் மூலம் அந்த ஹார்மோன்களின் அளவை நம்மால் குறைக்க முடியும். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணம்.
 

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவுக்கு காரணம் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Dr RadhikaMurugesan | Relationships | Marriage |

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணத்தை மீறிய உறவின் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார்.

கள்ளக் காதலை முதலில் திருமணத்தை தாண்டிய உறவு என்று சொல்வது சரியாக இருக்கும். கள்ளக் காதலுக்காக கணவனையும் மனைவியும் கொல்லப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது இப்பொழுது தான் அதிகமாக செய்திகளில் வெளியே வருகிறது. சமூகத்தில் விவாகரத்தை இயல்பாக பார்ப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் கணவன், குழந்தைகள் தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பதால் அந்த ஒரு நொடியில் ஏற்படும் கட்டுப்பாட்டை மீறின கிளர்ச்சியால் இப்படி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை சமூகத்தோடு பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.  எல்லாரும் இதுபோல செய்வதில்லை. வேறொரு உறவு இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி அல்லது கணவனை, குழந்தைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்துவார்கள். இதிலிருந்து எப்படி வெளியே வர முடியுமோ அதற்கான வழிகளை செய்து தானே தெளிவாக விலகி விடுவர். ஆனால் எங்கு ஒரு கசப்பான திருமண உறவு இருக்கிறதோ அங்கு தான் இதுபோன்று கொல்லும் அளவிற்கு மனநிலையில் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று செய்பவர்கள் நிலையான மனநிலையிலும் இருக்கமாட்டார். ஒருவித மனநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.

தனக்கென்று ஒரு மதிப்பில்லை, திருமணம் வேலை செய்யவில்லை அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லை என்ற விரக்தியில் கிடைத்திருக்கும் வேறொரு உறவை ஒரு அழகான தப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிலை வருவதற்கு முன்னர் எவ்வளவோ நடந்திருக்கும். ஆனால் வெளியே செய்தியாக வரும்போது அது தெரிவதில்லை. ஒருவர் மட்டுமே குற்றவாளியாக பார்க்கிறோம். தற்போது பெரும்பாலும் பெண்களே அதிகமாக இதில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய சமூகம் மோனோகெமி என்ற உறவுமுறை சார்ந்தது. இது இனச் சேர்க்கையை சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்தே இருக்கிறது. ஆனால் நிறைய ஆய்வுகளில் மனிதனின் இயற்கையான உள்ளுணர்விற்கு போலிகாமி என்ற உறவுமுறை தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆரோக்கியமான உறவில் கூட இதுபோன்ற ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் திருமண உறவை முன்னிலைப்படுத்துவார்கள். சர்வதேச அளவில் கூட இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவுக்கென்றே செயலி கூட இருக்கிறது. அதை 2 மில்லியன் இந்திய பயனாளிகள் பயன்படுத்துவதில், 60 சதவிகிதம் அதை பெண்களே உபயோகம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஐந்து சதிவிகிதம் மட்டுமே காதல் திருமணம் நடக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய சமூக மாற்றத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியாத உறவில் நிலைத்து இருப்பது என்பது சாத்தியம் குறைவாக இருக்கிறது. ஈர்ப்பும் குறைகிறது. திருமணம் ஆகி வெறும் தாய் மற்றும் ஒருவருக்கு மனைவி அடையாளம் தவிர ஒன்றுமில்லாமல் தனக்கான தேவைகள் எதுவும் அந்த திருமணத்தில் நிறைவேறாத போதும் தன்னுடைய சுயமதிப்பை இழக்கும் போது தான் தனக்கென்று தேவையை நோக்கி செல்லும்படி ஆகிறது. மேலும் அதற்கான வழிகளை இன்றைய இணைய வசதிகள் சுலபப்படுத்தி விடுகின்றன.

ஆண்களை விட பெண்களே இதுபோன்ற விஷயத்தில் தள்ளப்பட காரணம், அவர்களின் உணர்வுகளை அதிகமாக பொருட்படுத்தாததுதான்.  ஆண்களை விட மன அழுத்தம் பெண்களுக்கு இருமடங்கு இருக்கும். உதாரணமாக உடல்நிலை சரி இல்லை என்று வெளியே சொன்னாலும் கூட அவர்கள் பலவீனமானவர்கள் என்று உதாசீனப்படுத்துவது என்பது நடக்கிறது. இதனால் தான் எங்கு நம் எமோஷனல் தேவைகள் பூர்த்தி ஆகிறதோ அங்கே அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதுதான் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவைப்பது மற்றும் குடும்பத்தை கொல்ல வைக்கும்  அளவுக்கு எல்லை தாண்டிய முடிவுகளை எடுக்க வைக்கிறது.