Dr Salai Jaya Kalpana - Mudra 

முத்திரைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும், பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைகள் அபாரமான பலன்களை கொடுக்கும் என்றாலும், அதை முறையாக வந்து கற்றுக்கொள்ளும் பொழுது தான் முழு புரிதலோடு சரியான மேற்பார்வையோடு பலனை கொடுக்கும். ஒரு கருவுற்ற பெண்ணிற்கு நாங்கள் சுகப்பிரசவத்திற்கு அபான முத்திரை செய்ய சொல்லி கொடுத்தோம். அவருக்கு உடலில் வேறேதும் பிரச்சனை இல்லை என்பதால், சிசேரியனை தவிர்க்க அவருக்கு முத்திரை செய்ய சொன்னோம். இதை எப்பொழுது செய்யவேண்டும் செய்யக்கூடாது என்றெல்லாம் இருக்கிறது. பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பு, அல்லது ஒன்று , மூன்று நாள் முன்போ அவரின் உடல்நிலையை சரிபார்த்த பின்பு செய்தால் போதுமானது.ஆச்சர்யப்படும்படி அவர்க்கு பிறந்த குழந்தையும் அபான முத்திரை கையில் வைத்திருந்தது.

சில முத்திரைகள் யாரெல்லாம் செய்யக்கூடாது என்று பார்த்தோமானால், உதாரணத்திற்கு கழிவுநீக்க முத்திரை செய்பவர்களுக்கு இனிப்பு அதிகம் சாப்பிடும் பழக்கமோ, மது, புகை பழக்கமோ, இருந்தால் அவர்களுக்கு இது பலனை கொடுக்காது. 48 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது உடம்பிலிருந்து அதிகப்படியான கழிவுகள் வெளியேறுவதை அவர்களே உணரலாம். இதனால் கழிவு வெளியேறி குடிப்பழக்கமே மறந்து போகும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இதை செய்யும்போது, தோலில் உப்பு வெளியேறும், கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும், குடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்போது ஒரு சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படலாம். ஆனால் இதற்கெல்லாம் பயந்து வேறொரு மருந்துகள் எடுத்துக்கொண்டார்கள் எனில் முத்திரைக்கான தூண்டலை மட்டும் கொடுத்து விட்டு பலன் இல்லாமல் போகும்.

Advertisment

 Dr Salai Jaya Kalpana - Mudra 

முக்கிய குறிப்பாக ஒரு சில பல் பிரச்சனைக்காக சிலபேர் ரூட்கெனால் சிகிச்சை செய்திருப்பார்கள், பற்களில் செயற்கை ஆணி பதித்திருப்பவர்கள், விபத்தினால் உடலில் மெட்டல் பதித்து இருப்பவர்கள், இதய அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் செயற்கையாக பதித்திருந்தாலோ இந்த கழிவு நீக்க முத்திரையை செய்யக் கூடாது. அந்த முத்திரையை பொறுத்தவரை உடலில் இருக்கும் இயற்கையானவற்றை தவிர வேறு எது இருந்தாலும் அதை கழிவாக நினைத்து வெளியேற்றி விடும். எனவே இவர்கள் எல்லாம் கட்டாயம் இந்த முத்திரையை செய்யக்கூடாது.

எனவே வகுப்பில் இருக்கும்போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்போது, அதை உடனுக்குடன் கண்காணிக்க முடியும். இதிலும் இந்த முத்திரை செய்யும்போது அதற்கான விரல் சரியான புள்ளியில் வைக்காமல் சிறிது தள்ளி வைத்தாலும், பலன் சிறக்காது. இந்த முத்திரை பஞ்ச பூதங்களில் மண்ணை குறிப்பது, அதாவது மூலாதார சக்தியை அதிகரிக்க வைக்கும். எனவே இதை வயதிற்கு வராத ஆண்களோ பெண்களோ செய்யக்கூடாது , ஏனெனில் இது அவர்களை விரைவாக வயதிற்கு வர வைக்கும். அதுபோல இந்த முத்திரையை அமாவாசை அல்லது அஷ்டமி அன்று ஆரம்பித்தால் நன்று. நம் உடல் பொதுவாக நிலவினோடு தொடர்புடையது. எட்டாவது நாளான அஷ்டமி அன்று இயல்பிலே நம் உடல் கழிவுனை வெளியேற்ற கூடியது. எனவே கழிவுநீக்க முத்திரை அன்று செய்யும்போது நல்ல பலனை கொடுக்கும். செய்ய ஆரம்பிக்கும்போது, வாந்தி, குமட்டல் உணர்வு, வயிற்று போக்கு என்று பக்க விளைவுகள் கொடுக்கும். இதய அடைப்பு உள்ளவர்கள் செய்யும்போது, அந்த அடைப்பை கழிவாக எண்ணி உடல் வெளியேற்ற தொடங்கும். அப்பொழுது இதயத்தில் ஒரு சங்கடமான வலியை உணரலாம். எனவே அவர்கள் இதய முத்திரை செய்த பின்னே தான் கழிவு நீக்க முத்திரை செய்யவேண்டும்.

Advertisment

 Dr Salai Jaya Kalpana - Mudra 

அடுத்து அபான முத்திரை என்பது அபான வாயுவை குறிக்க கூடியது. இதை செய்யும்போது உடல் மேலிருந்து கீழ் நோக்கி வருவதை தள்ளக்கூடியது. அதாவது கண்களில் வழியும் கண்ணீர், உணவுகளை தள்ளுவது, குடலிலிருந்து வெளியேறும் கழிவு, சளி பிடித்தல், தலையில் நீர் கோர்த்து கொண்டால் அதை இறக்கக்கூடியது, மாதவிலக்கையும் தள்ளக்கூடியது. அப்படி தான் குழந்தை கருவுற்றிருக்கும் போது பிரசவத்திற்கு கீழே தள்ளக்கூடியது. எனவே சரியான முறையில் கல்வி போன்று இதை பயின்று தான் செய்யவேண்டும். முத்திரை பலனை மட்டும் அறிந்துகொண்டு அவ்வப்போது செய்வது பலனை கொடுக்காது. பிராண முத்திரை செய்யும்போது லேசாக கை நடுங்கும்போது உடனடியாக நிறுத்த வேண்டும். வாயு முத்திரை செய்யும்போது மூச்சு திணறல் ஏற்பட்டாலும் உடனடியாக நிறுத்த வேண்டும். அதுபோல முத்திரைகளை வரிசையாக செய்தலும் அவசியம்.

கழிவு நீக்க முத்திரையில் தொடங்க வேண்டும். ஆனால் மேலே குறித்த உடலில் செயற்கையாக ஏதேனும் பொறுத்தப்பட்டிருந்தால் அதை தவிர்த்து மண் முத்திரையில் தொடங்க வேண்டும். நெருப்பு, ஆகாயம், காற்று முத்திரைகள் என்று தொடர வேண்டும். இந்த வரிசையில் செய்து முடிக்கும்போதே உடலில் இருக்கும் பொதுவான தொந்தரவுகள் எல்லாமே சரியாக தொடங்கும்.