Skip to main content

குடிப்பழக்கத்திலிருந்து விடுபட...- சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 Dr Salai Jaya Kalpana - Mudra 

முத்திரைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும், பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைகள் அபாரமான பலன்களை கொடுக்கும் என்றாலும், அதை முறையாக வந்து கற்றுக்கொள்ளும் பொழுது தான் முழு புரிதலோடு சரியான மேற்பார்வையோடு பலனை கொடுக்கும். ஒரு கருவுற்ற பெண்ணிற்கு நாங்கள் சுகப்பிரசவத்திற்கு அபான முத்திரை செய்ய சொல்லி கொடுத்தோம். அவருக்கு உடலில் வேறேதும் பிரச்சனை இல்லை என்பதால், சிசேரியனை தவிர்க்க அவருக்கு முத்திரை செய்ய சொன்னோம். இதை எப்பொழுது செய்யவேண்டும் செய்யக்கூடாது என்றெல்லாம் இருக்கிறது. பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பு, அல்லது ஒன்று , மூன்று நாள் முன்போ அவரின் உடல்நிலையை சரிபார்த்த பின்பு செய்தால் போதுமானது. ஆச்சர்யப்படும்படி அவர்க்கு பிறந்த குழந்தையும் அபான முத்திரை கையில் வைத்திருந்தது. 

சில முத்திரைகள் யாரெல்லாம் செய்யக்கூடாது என்று பார்த்தோமானால், உதாரணத்திற்கு கழிவுநீக்க முத்திரை செய்பவர்களுக்கு இனிப்பு அதிகம் சாப்பிடும் பழக்கமோ, மது, புகை பழக்கமோ, இருந்தால் அவர்களுக்கு இது பலனை கொடுக்காது. 48 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது உடம்பிலிருந்து  அதிகப்படியான கழிவுகள் வெளியேறுவதை அவர்களே உணரலாம். இதனால் கழிவு வெளியேறி குடிப்பழக்கமே மறந்து போகும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இதை செய்யும்போது, தோலில் உப்பு வெளியேறும், கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும், குடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்போது ஒரு சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படலாம். ஆனால் இதற்கெல்லாம் பயந்து வேறொரு மருந்துகள் எடுத்துக்கொண்டார்கள் எனில் முத்திரைக்கான தூண்டலை மட்டும் கொடுத்து விட்டு பலன் இல்லாமல் போகும்.

 Dr Salai Jaya Kalpana - Mudra 

முக்கிய குறிப்பாக ஒரு சில பல் பிரச்சனைக்காக சிலபேர் ரூட்கெனால் சிகிச்சை செய்திருப்பார்கள், பற்களில் செயற்கை ஆணி பதித்திருப்பவர்கள், விபத்தினால் உடலில் மெட்டல் பதித்து இருப்பவர்கள்,  இதய அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் செயற்கையாக பதித்திருந்தாலோ இந்த கழிவு நீக்க முத்திரையை செய்யக் கூடாது. அந்த முத்திரையை பொறுத்தவரை உடலில் இருக்கும் இயற்கையானவற்றை தவிர வேறு எது இருந்தாலும் அதை கழிவாக நினைத்து வெளியேற்றி விடும். எனவே இவர்கள் எல்லாம் கட்டாயம் இந்த முத்திரையை  செய்யக்கூடாது.

எனவே வகுப்பில் இருக்கும்போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்போது, அதை உடனுக்குடன் கண்காணிக்க முடியும். இதிலும் இந்த முத்திரை செய்யும்போது அதற்கான விரல் சரியான புள்ளியில் வைக்காமல் சிறிது தள்ளி வைத்தாலும், பலன் சிறக்காது. இந்த முத்திரை பஞ்ச பூதங்களில் மண்ணை குறிப்பது, அதாவது மூலாதார சக்தியை அதிகரிக்க  வைக்கும். எனவே இதை வயதிற்கு வராத ஆண்களோ பெண்களோ செய்யக்கூடாது , ஏனெனில் இது அவர்களை விரைவாக வயதிற்கு வர வைக்கும். அதுபோல இந்த முத்திரையை அமாவாசை அல்லது அஷ்டமி அன்று ஆரம்பித்தால் நன்று. நம் உடல் பொதுவாக நிலவினோடு தொடர்புடையது. எட்டாவது நாளான அஷ்டமி அன்று இயல்பிலே நம் உடல் கழிவுனை வெளியேற்ற கூடியது. எனவே கழிவுநீக்க முத்திரை அன்று செய்யும்போது நல்ல பலனை கொடுக்கும். செய்ய ஆரம்பிக்கும்போது, வாந்தி, குமட்டல் உணர்வு, வயிற்று போக்கு என்று பக்க விளைவுகள் கொடுக்கும். இதய அடைப்பு உள்ளவர்கள் செய்யும்போது, அந்த அடைப்பை கழிவாக எண்ணி உடல் வெளியேற்ற தொடங்கும். அப்பொழுது இதயத்தில் ஒரு சங்கடமான வலியை உணரலாம். எனவே அவர்கள் இதய முத்திரை செய்த பின்னே தான் கழிவு நீக்க முத்திரை செய்யவேண்டும். 

 Dr Salai Jaya Kalpana - Mudra 

அடுத்து அபான முத்திரை என்பது அபான வாயுவை குறிக்க கூடியது. இதை செய்யும்போது உடல் மேலிருந்து கீழ் நோக்கி வருவதை தள்ளக்கூடியது. அதாவது கண்களில் வழியும் கண்ணீர், உணவுகளை தள்ளுவது, குடலிலிருந்து வெளியேறும் கழிவு, சளி பிடித்தல், தலையில் நீர் கோர்த்து கொண்டால் அதை இறக்கக்கூடியது, மாதவிலக்கையும் தள்ளக்கூடியது. அப்படி தான் குழந்தை கருவுற்றிருக்கும் போது பிரசவத்திற்கு கீழே தள்ளக்கூடியது. எனவே சரியான முறையில் கல்வி போன்று இதை பயின்று தான் செய்யவேண்டும். முத்திரை பலனை மட்டும் அறிந்துகொண்டு அவ்வப்போது செய்வது பலனை கொடுக்காது. பிராண முத்திரை செய்யும்போது லேசாக கை நடுங்கும்போது உடனடியாக நிறுத்த வேண்டும். வாயு முத்திரை செய்யும்போது மூச்சு திணறல் ஏற்பட்டாலும் உடனடியாக நிறுத்த வேண்டும். அதுபோல முத்திரைகளை வரிசையாக செய்தலும் அவசியம். 

கழிவு நீக்க முத்திரையில் தொடங்க வேண்டும். ஆனால் மேலே குறித்த உடலில் செயற்கையாக ஏதேனும் பொறுத்தப்பட்டிருந்தால் அதை தவிர்த்து மண் முத்திரையில் தொடங்க வேண்டும். நெருப்பு, ஆகாயம், காற்று முத்திரைகள் என்று தொடர வேண்டும். இந்த வரிசையில் செய்து முடிக்கும்போதே உடலில் இருக்கும் பொதுவான தொந்தரவுகள் எல்லாமே சரியாக தொடங்கும்.

Next Story

சிறுதானியங்கள் தோல் பிரச்சனையை கொண்டு வருமா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Salai Jaya kalpana | Mudra | Food2 

வாதம், பித்தம், கபம் உடலமைப்பினர் எப்போது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

காற்று, வறட்சி, கடினம் போன்ற மூன்று குணங்களை கொண்டவர்கள் வாத உடலினர். எனவே அதற்கு எதிரான உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். வறட்சி இல்லாத கொழகொழப்பான, வெதுவெதுப்பான, இலகுவான பதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கொடுக்கும். எண்ணெய் குறைப்பது என்பது இவர்களுக்கு ஏற்காது. அதே போல இவர்கள் கடினமான பொறித்த வேகவைத்த உணவு வகைகளை எடுத்து கொள்ளக்கூடாது. 

நீர் டயட், பச்சை காய்கறி டயட் போன்ற உணவு முறை வாத தேகத்தினருக்கு ஒத்துவராது. பழுக்காத துவர்ப்பான காய் பழவகைகள் தவிர எல்லா பழங்களும் இவர்களுக்கு ஒத்து வரும். அப்படி பழுக்காத, துவர்ப்பான, பழத்தை எடுக்கும்போது உப்பு சேர்த்து சாப்பிடலாம். பொதுவாகவே அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எனவே அவர்கள் உணவில், உப்பு, புளிப்பு, இனிப்பு வகைகள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா வகை அரிசி உணவுகளும் ஏற்று கொள்ளும். குறிப்பாக  பச்சரிசி வெப்பத்தை சிறிது தரக்கூடியது என்பதால் பச்சரிசி கஞ்சி, பொங்கல் என வைத்து சாப்பிடுவது ஏற்று கொள்ளும். சிறுதானியத்தை பொறுத்தவரை தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை இவர்களுக்கு தோல் வியாதிகளை கொடுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

நீர் எடுத்துக்கொள்வதில் கூட ஒவ்வொரு தேகத்தினருக்கும் அளவு மாறுபடும். வெதுவெதுப்பான நீர் மட்டுமே வாத தேகத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்டெர்மிடியேட் பாஸ்டிங்  போன்ற ஒருவேளை உணவைத் தவிர்க்கும் டயட் வகை வாத தேகத்தினருக்கு மட்டுமே ஒத்து வரும். இவர்கள் இந்த டயட்டை ஒரு மூன்று மாத கால எடுக்கும்போது தானாகவே பசி ஏற்பட்டு பித்த உடலாக மாறும். அந்த சமயம் டயட்டை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். தமிழ் மருத்துவ முறையை பொறுத்தவரை வாத உடலினர் உணவுக்கு முன் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பித்த உடலினர் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். கப உடலினர் உணவுக்கு அரைமணி நேரம் பின் எடுக்க வேண்டும். அதே போல வாத உடலினர் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு நீர் குடித்து விட்டு , பின்னர் சாப்பிடவேண்டும். பசியை தூண்ட சூப் எடுத்துக்கொள்ளுதல் இவர்களுக்கு ஒத்து வரும். அதுவே பித்த உடலினருக்கு வயிற்று புண் வந்து அல்சரை ஏற்படுத்தும்.

எனவே வாத உணவின் சாப்பிடும் போது இடையில் நீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உணவுக்கு பின் சூடான பானங்கள் குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு ஒத்து வரும். வெறும் வயிற்றில் நெய், இஞ்சி சாறு, நீராகாரம் போன்றவை வாத உடலினருக்கு கண்டிப்பாக ஒத்து வரும். இஞ்சி சாறும் சரியான முறையில் எடுக்க வேண்டும். இஞ்சியை கட்டாயம் தோல் சீவி ஒரு துண்டு எடுத்து  நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து அதை  அப்படியே அரைமணி நேரம் தெளிய வைக்க அடியில் மாவு போல படியும், அதை தவிர்த்து மேலாக தெளிவு நீரை மட்டும் எடுக்கவேண்டும். கூட சேர்த்து கொள்ளலாம். துவர்ப்பான பானங்கள் குறிப்பாக டீ வகைகள் , க்ரீன் டீ , பிளாக் டீ போன்றவை வாத உடலினர்  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Next Story

வாதம், பித்தம், கபம் உடலமைப்புக்கான உணவுகள்  -  சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உணவு முறையை பின்பற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் உடம்பு என்பார்கள். அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

வாத உடலினைப் பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் தவிர்க்கவே கூடாது. ஏனெனில் அவர்கள் பொதுவாகவே வறட்சியான உடலமைப்பை கொண்டிருப்பர். அவர்கள் பால் உணவுகளான தயிர், நெய், வெண்ணை, தாளித்த மோர் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசான எண்ணெயில் பெருங்காயம், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவையே தாளித்து உப்பு கலந்து மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கப உடலினரைப் பொறுத்த வரை வெள்ளை உணவுகள் விஷம் போன்றது. கபம் என்றால் காற்றை குறிக்கும். இயல்பாகவே அவர்கள் எப்போதும் நிறைய சிந்தனை ஓட்டத்துடன் இருப்பர். எனவே இரவில் உறங்க சிரமப்படுவர். அவர்களெல்லாம் இரவில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு தூங்கலாம். சர்க்கரை சேர்க்காத அல்லது எலுமிச்சை கலந்த கார்பனேட்டட் பானங்களான சோடா போன்றவை மட்டுமே ஒத்து வரும். உணவுக்கு பின் எடுக்க கூடிய காபியோ, சூடான பானங்களும் அவர்களுக்கு ஒத்து வரும். பழங்களை பொறுத்தவரை எல்லா வகையும் அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். 

கீரை வகைகளை பச்சையாக ஸ்மூத்தி போன்றோ, வேக வைக்கமாலோ சாப்பிட கூடாது. கருணை கிழங்கு தவிர வேறு எந்த கிழங்கும் வாத தேகத்தினருக்கு ஒத்துக்கொள்ளாது. துவரம் பருப்பை வேகவைக்கும் போது பெருங்காயமும், விளக்கெண்ணெய் சேர்த்து  சாப்பிட்டால் அவர்களுக்கு வாயு தொந்தரவு எடுக்காது. அவர்களுக்கு பாசி பருப்பு, கொண்டைக் கடலை  மட்டுமே அஜீரண தொந்தரவு செய்யாது. கொண்டைக் கடலையையும் உப்பு காரம் சேர்த்து வேகவைத்த சாப்பிட வேண்டும். வாத தேகத்தினருக்கு  கை, கால் வலி ஏற்படும்போது கொஞ்ச நாளைக்கு நல்லெண்ணெய் தவிர்த்து விட்டு, நெய், கடலெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை வாதம், கபம் உடலமைப்பு கொண்டவர்களுக்கு வேகவைத்த கோழிக்கறி சூடு ஆனாலும் ஒத்துக்கொள்ளும். கடல் மீன்கள், சிறிய அளவில் ஆட்டுக்கறி போன்றவை சேர்த்து கொள்ளலாம். பித்த தேகத்தினரும் ஆட்டுக்கறி சேர்த்து கொள்ளலாம். வாத தேகத்தினர் முட்டை, கருவாடு வகைகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாயை பொறுத்தவரை நார்த்தங்காய், இஞ்சி வகைகள், மற்றும் அப்பளம் போன்ற உப்பு வகைகள் வாத தேகத்தினருக்கு ஒத்துக் கொள்ளும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிக நேரம் உடல் முழுக்க வைத்து வெயிலில் நின்று அதன் பின்னர் குளிக்க வேண்டும். அவர்கள் பொதுவாகவே மிதமான வெந்நீரில் குளிப்பது நன்று. அதே பித்த தேகத்தினர் வெயில் ஆரம்பிக்கும் முன்பு  குளித்து முடித்து விட வேண்டும். வாத தேகத்தினர் கால்களில் குளிர்ச்சியோடு இருக்கும். பித்த தேகத்தினருக்கு சூடு தலையில் தேங்கும். எனவே வாத உடலினர் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக தலை வரை வெந்நீர் ஊற்ற வேண்டும்.