Skip to main content

"மன அழுத்தம் சில புரிதல்கள்" - மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

Dr Poorna Chandrika Explained about  mental stress

 

நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் பணிபுரிகிற பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா அவர்களை சந்தித்தோம். மனநலம் பற்றிய சில புரிதல்களை அவர் நமக்கு விளக்குகிறார்.

 

எல்லா இடங்களிலும் இருக்கும் பரவலான விசயம்; ஆனால் வெளியில் தெரிய வராமல் இருப்பது மனக்கவலை நோய். மனநலம் குறித்த பிரச்சனையை உணரும் போது கோவிலுக்கு போகலாம், சர்ச்சுக்கு போகலாம், மசூதிக்கு போகலாம் என்று தோன்றுகிற அளவுக்கு மனநல மருத்துவரிடம் போகலாம் என பலரும் நினைப்பதில்லை. ஒருவித தயக்க மனப்பான்மை மேலோங்குகிறது. 

 

பலருக்கு தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டும் மகிழ்ச்சியாக இல்லையே என்று தோன்றும். எதிலுமே முழுமனதோடு ஈடுபாடு இல்லை, ஆர்வம் இல்லை, தூக்கமில்லை, ஒரு கவலை எப்போதுமே இருந்துகொண்டு இருக்கிறது. பசி எடுப்பதில்லை போன்ற உணர்வுகளெல்லாம் மனக்கவலை நோயாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மனக்கவலை ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு ஏற்படும். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணை விட பெண்ணுக்கு மனக்கவலை அதிகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் சில வருடங்களில் உலகில் பலர் மனக்கவலை நோயால் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.

 

தீபிகா படுகோனே போன்ற பெரிய சினிமா நட்சத்திரங்கள் கூட எனக்கு டிப்ரசன் இருக்கிறது; நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்கிறேன் என சொல்கிறார்கள். பெரிய நடிகை அவங்களுக்குத் தான் எல்லாமே இருக்கிறதே, பிறகு எப்படி டிப்ரசன் வந்தது? என்கிற கேள்வி உருவாகலாம். இதே கேள்வி தான் எளியவர்களுக்கும் வருகிறது. மனநோய் என்பது எல்லாம் இருக்கிறவர்களுக்கும் வரலாம், எதுவுமே இல்லாமல் இருப்பவர்களுக்கும் வரக்கூடும். பிரச்சனை யாருக்குத்தான் இல்லை என்று சொல்வது எளிமை தானே. மனக்கவலை நோயால் தற்கொலை செய்துகொண்டிருந்தவர்கள் குடும்பங்களில் இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் ஜெனிடிக் முறையால் வரக்கூடும். 

 

பிரச்சனையை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் ஒருவர் மனநோயை எப்படி எதிர்கொள்கிறார் என்பது மாறுபடும். எடுத்துக்காட்டாக ஒரு காதல் தோல்வி என்று வைத்துக்கொண்டால் அதெப்படி என்னை வேண்டாம் என்று சொல்லலாம்; அவன்/அவள் இல்லாமல் இருக்க முடியாது என்று தற்கொலை செய்து கொள்கிற; வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் வரை இருக்கத்தானே செய்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் மனநோயை கையாள்கிறார்கள். மற்றவர்களுக்கு மருத்துவரை அணுக வேண்டிய தேவை ஏற்படுகிறது.

 


 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவுக்கு காரணம் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Dr RadhikaMurugesan | Relationships | Marriage |

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணத்தை மீறிய உறவின் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார்.

கள்ளக் காதலை முதலில் திருமணத்தை தாண்டிய உறவு என்று சொல்வது சரியாக இருக்கும். கள்ளக் காதலுக்காக கணவனையும் மனைவியும் கொல்லப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது இப்பொழுது தான் அதிகமாக செய்திகளில் வெளியே வருகிறது. சமூகத்தில் விவாகரத்தை இயல்பாக பார்ப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் கணவன், குழந்தைகள் தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பதால் அந்த ஒரு நொடியில் ஏற்படும் கட்டுப்பாட்டை மீறின கிளர்ச்சியால் இப்படி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை சமூகத்தோடு பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.  எல்லாரும் இதுபோல செய்வதில்லை. வேறொரு உறவு இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி அல்லது கணவனை, குழந்தைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்துவார்கள். இதிலிருந்து எப்படி வெளியே வர முடியுமோ அதற்கான வழிகளை செய்து தானே தெளிவாக விலகி விடுவர். ஆனால் எங்கு ஒரு கசப்பான திருமண உறவு இருக்கிறதோ அங்கு தான் இதுபோன்று கொல்லும் அளவிற்கு மனநிலையில் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று செய்பவர்கள் நிலையான மனநிலையிலும் இருக்கமாட்டார். ஒருவித மனநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.

தனக்கென்று ஒரு மதிப்பில்லை, திருமணம் வேலை செய்யவில்லை அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லை என்ற விரக்தியில் கிடைத்திருக்கும் வேறொரு உறவை ஒரு அழகான தப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிலை வருவதற்கு முன்னர் எவ்வளவோ நடந்திருக்கும். ஆனால் வெளியே செய்தியாக வரும்போது அது தெரிவதில்லை. ஒருவர் மட்டுமே குற்றவாளியாக பார்க்கிறோம். தற்போது பெரும்பாலும் பெண்களே அதிகமாக இதில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய சமூகம் மோனோகெமி என்ற உறவுமுறை சார்ந்தது. இது இனச் சேர்க்கையை சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்தே இருக்கிறது. ஆனால் நிறைய ஆய்வுகளில் மனிதனின் இயற்கையான உள்ளுணர்விற்கு போலிகாமி என்ற உறவுமுறை தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆரோக்கியமான உறவில் கூட இதுபோன்ற ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் திருமண உறவை முன்னிலைப்படுத்துவார்கள். சர்வதேச அளவில் கூட இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவுக்கென்றே செயலி கூட இருக்கிறது. அதை 2 மில்லியன் இந்திய பயனாளிகள் பயன்படுத்துவதில், 60 சதவிகிதம் அதை பெண்களே உபயோகம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஐந்து சதிவிகிதம் மட்டுமே காதல் திருமணம் நடக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய சமூக மாற்றத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியாத உறவில் நிலைத்து இருப்பது என்பது சாத்தியம் குறைவாக இருக்கிறது. ஈர்ப்பும் குறைகிறது. திருமணம் ஆகி வெறும் தாய் மற்றும் ஒருவருக்கு மனைவி அடையாளம் தவிர ஒன்றுமில்லாமல் தனக்கான தேவைகள் எதுவும் அந்த திருமணத்தில் நிறைவேறாத போதும் தன்னுடைய சுயமதிப்பை இழக்கும் போது தான் தனக்கென்று தேவையை நோக்கி செல்லும்படி ஆகிறது. மேலும் அதற்கான வழிகளை இன்றைய இணைய வசதிகள் சுலபப்படுத்தி விடுகின்றன.

ஆண்களை விட பெண்களே இதுபோன்ற விஷயத்தில் தள்ளப்பட காரணம், அவர்களின் உணர்வுகளை அதிகமாக பொருட்படுத்தாததுதான்.  ஆண்களை விட மன அழுத்தம் பெண்களுக்கு இருமடங்கு இருக்கும். உதாரணமாக உடல்நிலை சரி இல்லை என்று வெளியே சொன்னாலும் கூட அவர்கள் பலவீனமானவர்கள் என்று உதாசீனப்படுத்துவது என்பது நடக்கிறது. இதனால் தான் எங்கு நம் எமோஷனல் தேவைகள் பூர்த்தி ஆகிறதோ அங்கே அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதுதான் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவைப்பது மற்றும் குடும்பத்தை கொல்ல வைக்கும்  அளவுக்கு எல்லை தாண்டிய முடிவுகளை எடுக்க வைக்கிறது.