Skip to main content

வெண்குட்டம் நோயை குணப்படுத்த முடியுமா? - விளக்குகிறார் சித்த மருத்துவர் லட்சுமி கீதா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 Dr Lakshmi Geetha Skin specialist  health tips

 

வெண்குட்டம் என்ற தோல் நோய் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் சித்த மருத்துவர் லட்சுமி கீதா விரிவாக விளக்குகிறார்

 

ஒவ்வாத உணவுகளை நாம் எடுத்துக்கொள்வதாலும், ஆடைகள் உள்ளிட்ட வெளிப்புற காரணங்களாலும் கரப்பான் என்கிற தோல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் தோல் தடிமனாக மாறிவிடும். கருமையான நிறத்துக்கு தோல் மாறும். அதிலிருந்து நீர் வடியும் தன்மையும் காணப்படும். இதற்கு சித்த மருத்துவத்தில் கரப்பான் தைலம் என்கிற மிகச்சிறந்த மருந்து இருக்கிறது. திரிபலா சூரணம் என்கிற மருந்தை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம். இது காயகல்ப சூரணம் என்று அழைக்கப்படுகிறது. 

 

எந்த ஒரு நோய்க்கும் ஆட்படாமல் உடலைக் கல் போன்று வைத்து பாதுகாத்து, மிகச் சிறப்பான முறையில் வைத்திருக்க திரிபலா சூரணம் உதவும். நோயால் தாக்கப்பட்ட ஒரு நோயாளியை தாயை விட சிறப்பாக கவனித்துக்கொள்ளும் தன்மை கொண்டது திரிபலா சூரணம். குளிக்கும்போது நாம் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீர் வடிதல் என்பது முற்றிலுமாக நீங்கும். இயல்பான நிறத்துக்கு உங்களுடைய தோல் மாறும். கத்திரிக்காய், மீன், கருவாடு, கோழி, பாகற்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போது சிலருக்கு அரிப்பு ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். 

 

கரப்பான் நோயாளிகள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். உடலில் முன்னங்கை, முன்னங்கால், பாதம், நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கரப்பான் நோயின் பாதிப்புகள் பெரும்பாலும் இருக்கும். குளிக்கும்போது திரிபலா சூரணம் பயன்படுத்துவதால் அரிப்புகள் நீங்கும். சோப்புக்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்தலாம். தகுந்த சித்த மருத்துவரை நீங்கள் அணுகினால் உங்களுக்கான சிறந்த மருத்துவம் கிடைக்கும். கரப்பான் நோயிலிருந்து வெளிவருவதற்கான சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

 

வெண்குட்டம் என்கிற நோயும் பலருக்கு இருக்கிறது. இது குணப்படுத்த முடியாத நோய் என்று சித்தர்கள் சொன்னாலும், இதை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். இது ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதால் வரக்கூடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம் ஆகியவற்றை உண்ண வேண்டும். முக்கியமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பீட்ரூட் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடல் மீண்டும் இயல்பான நிறத்துக்கு மாறும்.

 

கார்போக அரிசியும் சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வாக பார்க்கப்படுகிறது. கார்போகி தைலத்தை வெண்குட்ட புள்ளிகளின் மீது தடவும்போது படை மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கார்போகி மாத்திரைகளும் கிடைக்கின்றன. உடல் கிருமிகள் அதிகம் இருப்பதால் ஏற்படும் இந்த நோயை நிச்சயம் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

 


 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.