Skip to main content

அதீத கோபம் பக்கவாதத்தை வர வைக்குமா? - விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Dr Arunachalam Health tips

 

மனித மூளை மற்றும் பக்கவாத நோய் குறித்த தகவல்களை நம்மோடு டாக்டர் அருணாச்சலம் பகிர்ந்துகொள்கிறார்.

 

விஞ்ஞானம் இன்னும் முழுமையாகக் கண்டறியாத ஒரு பாகம் என்றால் அது மூளை தான். இருதயம் குறித்த கண்டுபிடிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன. மூளை குறித்த இயற்கையின் ரகசியம் மிகவும் நுட்பமானது. கம்ப்யூட்டரில் இருக்கும் விஷயங்கள் அத்தனையும் மூளையில் இருக்கிறது என்று சொல்லலாம். எனவே மூளை குறித்து ஓரளவு மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. கற்றது கையளவு என்று மருத்துவர்களே சொல்லக்கூடியது மூளை பற்றி தான். பல்வேறு செயல்பாடுகளால் நம்மை பிரம்மிக்க வைக்கிறது நம்முடைய மூளை. 

 

அதிகப்படியான ரத்தக் கொதிப்பு தான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். அதீத கோபமும் பக்கவாதம் வர வைக்கும். மாரடைப்பும் பக்கவாதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தேங்கி, மற்ற இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதால் ஏற்படும் பக்கவாதமும் சிலருக்கு நேரும். எந்த வகையான பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய சிடி ஸ்கேன் பயன்படுகிறது. வலி ஏற்படுவதால் பலர் பயப்படுகின்றனர். ஆனால் வலி ஏற்படுவது ஒரு வகையில் நல்லது. 

 

வலியே இல்லாமல் கை, காலைத் தூக்க முடியாமல், அசைக்க முடியாமல், உணர்வில்லாமல் போவது தான் ஆபத்தானது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இது. வயதுக்கு ஏற்றவாறு உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்ப்பது தான் இதற்கான தீர்வு.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.