Skip to main content

முட்டி வலி ரொம்ப ஆபத்து.. இதையெல்லாம் அதிகம் செய்யாதீர்கள் - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Dr Arunachalam about Knee Pain 

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு பாதிப்பாக இப்போது மூட்டு வலி இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விரிவாக விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம் அவர்கள்...

 

நம்முடைய உடல் எடையைத் தாங்குவதே முட்டி தான். வண்டி ஓட்டும்போது பலர் செய்யும் சர்க்கஸ் அவர்களுடைய மூட்டுகளை பாதிக்கிறது. பேருந்துகளில் இருந்து குதிப்பது, ரயில்களில் இருந்து குதிப்பது போன்ற செயல்கள் அனைத்துமே மூட்டுகளைத் தான் பாதிக்கும். முந்தைய காலங்களில் மாடி வீடுகள் அதிகம் இல்லை. இப்போது மாடிப்படி ஏறுவது அதிகமாகியுள்ளது. கபடி போன்ற அப்போதைய விளையாட்டுகளை விட இப்போதைய விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து போன்றவை அதிக காயங்களை ஏற்படுத்தக் கூடியவை. 

 

மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால், இருசக்கர வாகனங்களின் வேகம் குறைந்து, அதனால் மருத்துவமனைகளில் எலும்பு முறிவு நோயாளிகள் தற்போது குறைந்துள்ளனர். மற்ற நாட்களில் அவர்கள் வேகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு அதன் மூலம் எலும்பு முறிவு அதிகம் ஏற்படுகிறது. பெரிய அளவில் வலி இருந்தால் எலும்பு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கான கால்சியம் சத்து அவசியம்.

 

நம்முடைய நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதில்லை. ஆண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் இருந்தாலும் கால்சியம் சத்து இருப்பதில்லை. பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவுகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கடல் உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும். இறால், நண்டு போன்றவை கால்சியம் சத்தை அதிகம் வழங்கும். குழந்தைகளின் நடை மாறினால் பெற்றோர் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்கின்றனர்.

 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவினாலும் வலிகள் ஏற்படலாம். தொண்டை பாதிப்புகளுக்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டாலும் மூட்டு வலி, இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காயங்கள், அதிகமான உழைப்பு, உடல் பருமன் ஆகியவையும் மூட்டு வலியை ஏற்படுத்தும். உடல் எடையைக் குறைக்காவிட்டால் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஆகிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 


 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.