Skip to main content

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது!!! ஏன்... வழியெல்லாம் வாழ்வோம் #16

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

பேதைப்பருவ குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு முறைகள்:

 

vazhiyellam vaazhvom




குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. அவற்றுக்கான விளம்பரங்களில் வரும் குழந்தைகள் போன்று நம் குழந்தைகளும் புஷ்டியாக வளரவேண்டும் என்பது பல இளம் தாய்மார்களின் ஆசையாகவே உள்ளது. ஆரோக்கியமான குழந்தையாய் வளரவேண்டும் என்ற எண்ணம் போய், அழகான குழந்தையாய் தம் குழந்தை வளரவேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம்தான் இத்தகைய பால்பொருட்கள் கடைவீதியெங்கும் கண்ணில்படக் காரணம்.

 

 


புட்டிப்பால் கொடுப்பது குழந்தையின் உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நல்லது அல்ல. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயின் மீது அதீத பாசமும், ஒட்டுதலும் இருப்பதாய் மனநல மருத்துவம் சொல்கிறது.  என் உறவுக்காரக் குடும்பத்துப்பிள்ளை ஒன்று. அதிக விலையுள்ள புட்டிப்பால் கொடுத்து வளர்த்தோம் என்று அடிக்கடி அவளது பெற்றோர்கள் அவளிடம் சொல்வார்கள். வளர்ந்தபின் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு விவாதத்தில் அவளது அப்பா, "தாய்ப்பாலுக்கு கணக்குப்போட்டா தாலி மிஞ்சுமா" என்று கேட்டார். அவள் உடனடியாகப் பதில் சொன்னாள்: "நீங்க புட்டிப்பால் தான கொடுத்து வளர்த்தீங்க. அதுக்கு கணக்குப் போட்டுடலாம் அப்பா" என்று. இதெல்லாம் குழந்தைகளின் மனநலம் சார்ந்த காரணிகள். குழந்தைகளே தாம் புட்டிப்பால் குடித்து வளர்ந்தோம் என்பதை விரும்புவதில்லை.  தினையில் கூழ் செய்து, பிரசவமான பெண்ணுக்கு கொடுப்பது அன்றைய வழக்கம். தினை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஆனால், இப்போதோ மதர்ஸ் ஹார்லிக்ஸ், ரஸ்க் என்று பல உணவுகளை அறிமுகப்படுத்துகிறது உணவு மார்க்கெட். ஆனால், அன்றைய  தினை கூழ், கருவாடு, வெள்ளைப்பூண்டு போன்றவற்றில் கிடைத்த பலன்கள் இத்தகைய பானங்கள், உணவுகளில் இல்லை. தவிர்க்க இயலா சூழ்நிலைகளில் மட்டுமே ஆயத்தப்பால் ஆகிய புட்டிப்பாலை கொடுக்கவேண்டும்.

 

 

 

குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் கொடுக்கக்கூடாது?


குழந்தைகள் பிறந்து ஒரு வயதைக் கடக்கும் வரை அவர்களுக்குப் பசும்பால் கொடுக்கக்கூடாது என்பதே நிபுணர்களின் கருத்து. ஒரு வயதுக்கு முன்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசும்பால், குழந்தைகளின் செரிமான அமைப்பை கடினமாக்குகிறது. பாலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு ஆகியவை குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றன. பாலில் குறைந்த அளவில் இருக்கும் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்கள் குழந்தைகளிடம் ரத்த சோகையை உண்டாக்குகின்றன. "ஒரு மாட்டுப்பால்" என்று ஒரே ஒரு நாட்டு மாட்டுப்பால் (வேறு வேறு மாடுகளில் இருந்து கறந்த பால்களைக் கலக்காமல்) கொடுக்கும்போதே இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் என்றால், இப்போதைய மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலின் தன்மைகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை. எனவே, ஒரு வயதுவரை குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.

 

அதேபோல், குழந்தைகளுக்கு 4 வயது ஆகும் வரை நட்ஸ்கள் எனப்படும் கொட்டைகளைத் தவிர்ப்பது நல்லது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏனெனில், இவ்வகையான கொட்டைகளை உண்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கெட்டியான வெண்ணெய் போன்றவையும் குழந்தைகளின் உடல்நலத்துக்கு எதிரிகளே. நன்கு உருக்கிய வெண்ணெயை நெய்யாக மாற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 

 


இரண்டு-மூன்று வயது வரை கூட குழந்தைகள் மேல் நாம் காட்டும் அக்கறை ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும். அதன்பின் கிரச்கள் அல்லது விளையாட்டுப்பள்ளிகளில் அவர்களை விட்டபின், மொத்தமாய் அவர்கள் மேல் அக்கறை கொள்ளும் அளவு நம் வாழ்க்கை முறையும் அனுமதிப்பதில்லை. அதனால்தான் அந்த வயது முதல் துரித உணவுகளுக்குப் பிள்ளைகள் அடிமையாகிவிடுகின்றனர். குளிர்பானங்களும், ஐஸ்கிரீம்களும் அவர்களது பிடித்த உணவாகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் நாக்கில் சுவையுணர் மொட்டுக்கள் வயது வந்தவர்களைவிட அதிகம் இருக்கும். அதனால்தான் அவர்கள் சாக்லேட்களை விரும்பி உண்கின்றனர். இனிப்புகள் மூளையின் செயல்திறனை தூண்டும் காரணிகளாக இருப்பினும் ஓர் அளவுக்கு மேல் இனிப்புகளை உட்கொள்வது குழந்தைகளின் வயிறையும், பற்களையும் வெகுவாகப் பாதிக்கும். இந்த வயதில் குழந்தைகளுக்கு நம் பாரம்பர்ய சிறுதானிய உணவுகளை ருசியாக செய்து கொடுத்துப் பழகினால் அது அவர்களின் உணவு வழக்கத்தை சரியான பாதைக்கு மாற்றிவிடும்.

 

குளிர்சாதப்பெட்டியில் வைத்து பயன்படுத்தப்படும் பொருட்களின் அபாயங்கள்:


"மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்" என தேரன் சித்தர் என்ற தமிழ் மருத்துவர் பாடியதாக தமிழ் மருத்துவம் கூறுகிறது.  அதாவது முந்தைய நாள் சமைக்கப்பட்ட உணவை, அது அமிர்தம் போன்ற சுவை உடையதாய் இருந்தாலும்கூட சாப்பிடக் கூடாது . ஆனால் இன்று, ஒரு முறை குழம்பு வைத்து அதை மூன்று நாள் பயன்படுத்தும் வழக்கம் பல வீடுகளில் உள்ளது. இதுவும் குழந்தைகளின் செரிமான பாகங்களை பாதிக்கும். மேலும் உணவுடன் சேரும் வேதிப்பொருட்கள் சிறுகக்கொல்லும்(Slow Poison) நச்சாய் மாறுகின்றன. உடனடியாய் சமைத்து உண்ணும் வாய்ப்பு இல்லை என்றாலும், ஏதாவது தாமிர, வெண்கல அல்லது சில்வர் பாத்திரங்களில் வைத்தாவது குழந்தைகளுக்கு உணவு கொடுப்போம்.

 

vazhiyellam vaazhvom




இதுவரை பேதைப்பருவத்துப் பிள்ளைகள் பற்றி மட்டுமே பேசினோம். இந்தப்பருவம் வரை ஆண்பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளுக்கும் பெரிதாய் எந்த வேறுபாடும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆனால், அடுத்த பெண் பருவங்கள் அனைத்திலும் உடல் மற்றும் மனரீதியில்   பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளிடமிருந்து அனைத்திலும் வேறுபடுகின்றனர். அவற்றை வரும் வாரங்களில் காண்போம்.

(தொடரும்)

 

 

முந்தைய பதிவு:

பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா? வழியெல்லாம் வாழ்வோம் #15

 

 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:

 

 


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 


சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21
 

 

 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 

 



சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21