ADVERTISEMENT

பசு நெய் குடித்தால் முகம் பொலிவு பெறுமா? 

03:17 PM Feb 02, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

பசு நெய்யை தினமும் காலையில் குடிப்பதால் முகம் பொலிவு பெறும் என்று சொல்லப்படுகிறதே இது எந்த அளவுக்கு மருத்துவமுறைப்படி உண்மை என்ற கேள்வியை பிரபல டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த பதில் பின்வருமாறு...

பசு நெய் அல்லது வெண்ணெய்யை உருக்கி தினமும் காலையில் குடித்தால் முகம் பொலிவு பெறும் என்பது உண்மை அல்ல. உடலில் கொழுப்பின் அளவு தான் அதிகரிக்கும். உடல் பருமன் இல்லாதவர்கள் குடிக்கலாம்; அதனால் கொஞ்சம் எடை அதிகரிக்கலாம். ஆனால் உடல் பருமன் உள்ளவர்கள் குடித்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அது பல நோய்களுக்கு வழி வகுக்கும்.

வைட்டமின்கள் இருந்தாலும் நெய்யை குடிப்பது ஒரு சிலரின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிக்கன் தோல் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பேதி ஏற்படுவதைப் போல நெய் குடிப்பதாலும் வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலுக்கு ஏற்றுக்கொள்கிறவர்கள் காலப்போக்கில் உடல் பருமன் ஆவார்கள். நெய் குடிப்பதால் முகம் பொலிவு பெறாது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT