Skip to main content

'முதலமைச்சர கூப்பிடுங்க... கரோனாவை காட்ட சொல்லுங்க' - உளறிய இளைஞரும் உளவியல் பார்வையும்!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020


சமூக வலைத்தளங்கள்  செய்தி மற்றும்  தொலைக்காட்சிகளில் நேற்று ஒரு வீடியோ பரவலாக வைரல் ஆகியது. ஒரு துடுக்கான இளைஞன் ஊரடங்குக்கு எதிராக  போலீசை எதிர்த்து வாக்குவாதம் செய்கிறார். உடல் மொழி, முகத்தில்  காட்டும் பாவனைகள் பேச்சு போன்ற அவரது ஆக்ரோஷமான கோப உணர்வு  வெளிப்பாடுகள் நமக்குள்ளும் கடத்தப்படுகிறது. அதைப் பார்ப்பவர்கள் தானும் அவராகவே மாறும்படியான உணர்ச்சிகரமான நிகழ்வு. அந்த இளைஞனுக்கே நாம் கொஞ்சம் அதிகமாகத்தான் பண்ணுகிறோம் என்று மனதுக்குள் இருந்திருக்கும். அது அவர் முகத்தில் தெரிந்தது . சில சினிமா முன்னணி கதாநாயகி , நாயகர்கள் வில்லன் நடிகர்களின் ஒட்டு மொத்த  அங்க அசைவுகளை  அப்படியே அவர் பிரதிபலித்தார். சினிமா எந்த அளவுக்கு இன்றைய இளைய சமுதாயத்தை பாதித்து உள்ளது என்பதையே அவர் நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. ஆனால், சினிமாவும் வாழ்க்கையும் வேறு வேறு உலகம். அது ஒரு மாயை  என்பதை அதற்கு பின் நடந்த சட்டப்பூர்வமான காவல்துறை  நடவடிக்கைகள் அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் உணர்த்தியது . அவர் உதை  வாங்கியது வருத்தமான சம்பவம் தான். ஆனால் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் . இந்த ஊரடங்கு மக்கள் பாதுகாப்புக்காக மட்டுமே.   சினிமா இயக்குனர்களின் கற்பனை வளமோ அல்லது நடிகர்களோ, கதாநாயகிகளின் தோழிகளோ அவரை வந்து காப்பாற்ற இயலவில்லை. 
 

ரப



மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரசின் சமூக பரவல் மற்றும் பாதிப்புகளை பல வகைகளிலும் எடுத்துச் சொல்லி, மக்கள் நலனுக்காக, உயிர் காக்கும்  ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களின் செயல் பாட்டையும்  கேலி கிண்டல் செய்வது போல இருந்தது அந்த வாலிபரின் கோபம். இதில் ரொம்ப ஹைலைட் ''சட்டம் போட்ட முதலமைச்சர இங்க வரச்சொல்'' என்ற அந்த வார்த்தைகள் தான். முதலமைச்சர் மட்டுமல்ல சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள்,  தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவருமே ஒன்றுபட்டு கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் சட்டத்தை மதித்து தேசம் காக்க போராடும் வேளையில் ஒத்துழைப்பு கொடுப்பதே இந்தியக் குடிமக்களாகிய  நம் கடமை. சில சிரமங்கள் அனைவருக்குமே உண்டு உண்மைதான். ஆனால் உயிர் வாழ்வது அதைவிட மிக முக்கியம் அல்லவா. ஊரடங்குக்கு கட்டுப்பட்டு ஒத்துழைத்து  நம் சந்ததிகளை காப்போம் . ஒழியட்டும் கொரோனா வைரஸ். 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.