Skip to main content

உடல் சூட்டை உடனே தணிக்கும் இளநீரின் பயன்கள்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020


உடலில் ஏற்படும் அதீத உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீர் மிக முக்கிய பானமாக இருக்கிறது. ஒரு கப் இளநீரில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றது. குறிப்பாக 600 கிராம் பொட்டாசியம், 250 கிராம் சோடியம், 60 கிராம் மக்னீசியம், 58 கிராம் கால்சியம், 48 கிராம் பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம். அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு இளநீர் அருமருந்தாக இருக்கின்றது. இளநீரில் உள்ள அதன் சதை பகுதி உடலின் வறட்சி தன்மையை போக்கும் ஆற்றல் உடையது. வயிற்றுப்புண், வாய் புண் ஆகிவற்றை நீக்கம் ஆற்றல் இளநீருக்கு அதிகம் இருக்கின்றது.
 

sdfh



சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும் இளநீர் உதவுகின்றது. அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இளநீர் அருந்திருனால் நோயின் தாக்கம் வெகு சீக்கிரமாக குறையும். இதில் உள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும் வல்லமை உடையது. இரத்த சோகை மற்றும் ரத்த கொதிப்பை முறைப்படும் ஆற்றல் இளநீருக்கு உண்டு. குழந்தைகள் தொடர்ந்து இளநீரை அருந்தி வந்தால் அவர்களின் எலும்புகள் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையில்லாத கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இளநீருக்கு அதிகம் இருக்கின்றது.

 

Next Story

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கொடு! - சென்னையில் கூடும் தென்னை விவசாயிகள்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Replace palm oil with coconut oil!-Chennai coconut farmers

தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.

Next Story

உரித்த தேங்காயை கிலோ ரூ. 50க்கு கொள்முதல் செய்! - விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Farmers are struggle by breaking coconuts buy peeled coconut Rs. 50 per kg

 

கஜா புயலின் தாக்கத்தால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்து நின்றனர். சில மாதங்கள் ஆனது இயல்பு நிலைக்குத் திரும்ப. பல மாதங்கள் ஆனது விழுந்த தென்னை மரங்களைத் தோப்புகளில் இருந்து வெட்டி அகற்ற. எஞ்சிய தென்னை மரங்களைப் பராமரிப்பதுடன் புதிய தென்னங் கன்றுகளை நட பொருளாதாரம் இல்லாமல் தவித்தனர் விவசாயிகள்.

 

நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், போர்க் கப்பலில் தென்னங் கன்றுகளைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று சொல்லிவிட்டுப் போனதோடு சரி. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை என்றாலும் வட்டிக்கு கடன் வாங்கி புதிய தென்னங் கன்றுகள் நட்டனர். இந்த நேரத்தில் சில மாதங்கள் தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை, கீற்று, தேங்காய் ஓடுகள் ஓரளவு விற்பனை ஆனதால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாகத் தேங்காய் விலை படிப்படியாகக் குறைந்து தென்னை உபபொருட்களும் விலையில்லாமல் போனதால் விவசாயிகளின் நிலை பரிதாபமானது. சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ. 15 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ. 7, 8க்கு விற்பனை ஆகிறது.

 

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி. நடராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கடை வீதியில் தொடங்கி பேரணியாகச் சென்று, தேங்காய்க்கு உரிய விலை கொடு; உரித்த தேங்காய் கிலோ ரூ. 50க்கு அரசே கொள்முதல் செய்; ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய்களை வழங்கு; நெல், கரும்பு போல தேங்காய்க்கும் ஊக்கத் தொகை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.