Skip to main content

செல்போன் பயன்பாடு உடல்நலத்தைக் கெடுக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Can cell phone use harm health? - Explained by nutritionist Krithika Tharan 

 

உணவு உண்ணும் முறை, செல்போன் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விவரிக்கிறார்.

 

சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவை உண்ணுவதே முக்கியமானது. இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. ஏனெனில் இரவில் நம்முடைய உடல் தூக்கத்துக்கு தயாராகும். இந்தியாவில் தூக்கமின்மை அதிகமாவதற்கு முக்கியமான காரணம் மன அழுத்தம் தான். இரவில் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் வெளிச்சம் நம்முடைய தூக்கத்தை பாதிக்கும். வெளிச்சத்தால் சூரியன் இன்னும் மறையவில்லை என்று நம்முடைய உடல் நினைத்துக்கொள்ளும். 

 

இதனால் சரியான நேரத்திற்கு சுரக்க வேண்டிய மெலடோனின் தாமதப்படும். தூக்கம் கெடுவது குழந்தையின்மைக்கு கூட காரணமாக அமைகிறது. இரவு 9 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழுவது நல்லது. முன்னோர்கள் செய்த அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும். இப்போது நாம் நம்முடைய இருப்பிடங்களைப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, உடலைக் கெடுத்து வருகிறோம்.

 

தூக்கம் கெடுவதால் அல்சைமர் நோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இரவு நேரத்தில் சரியாகத் தூங்கினாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். மொபைலை இரவில் ஸ்விட்ச் ஆப் செய்தாலே நிம்மதியான தூக்கம் வரும். இதைச் செய்வது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. இதை நாம் செய்யாமல் விட்டால், தூக்கம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் நமக்கு ஏற்படும். ஆரோக்கியமாக இருந்தால் 100 வயது வரை மொபைல் ஃபோன் பார்க்கலாம். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நீண்ட நேர மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வோம்.

 


 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மன அழுத்தம் குடல் எரிச்சலை உண்டாக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Kiruthika tharan - Irritable Bowel Syndrome -  Explained 

ஐ.பி.ஸ் எனப்படும் Irritable Bowel Syndrome நோயைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

ஐ.பி.எஸ்  என்று Irritable Bowel Syndrome என்பது அல்சர் வழியில் வரும். இந்த ஐ.பி.எஸ் அலசரேட்டிவே கொலட்டிஸ் (ulcerative colitis) அண்ட் குரோன் (Crohn's disease) என இரண்டு விதமாக இருக்கிறது. தாங்க முடியாத அல்சருடன் ஒரு கிளையண்ட் வந்தார். எந்த நோயாக இருந்தாலும் முதலில் ஸிட்ரெஸ் அளவு தான் பார்க்கப்படும். சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் என்று ஒன்று ஸ்டிரெஸ் ஃபேக்டரை கண்டுபிடிக்க இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு 20க்கு 14 முதல் 18 வரை தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியில் கொண்டுவர சைக்கோ தெரப்பி கொடுத்து மாற்ற வேண்டும்.

அல்சரினால் வயிறு பகுதி மட்டும் புண்ணாக இல்லாமல் ஐபிடியை பொறுத்தவரைக்கும் மலக்குடலிலும் காயமாக இருக்கும். சில இடங்களில் புண்ணாகி தொற்றாக மாறிவிடும். சில சமயம்  h. Pylori என்ற ஒரு இன்ஃபெக்ஷன் கூட இருக்கும். சர்ஜரி அளவிற்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொண்டு உடனேயே சரி பார்த்துவிட வேண்டும். நாமாக மருந்து மற்றும் டயட் என்று போவதை விட மருத்துவரை அணுகுவது மிக சிறந்ததாக இருக்கும். இந்த கிளையண்ட் தன்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று அவரே சொன்னார். இவர் அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நிறைய சிக்கல்களினால் அலுவலில் தினசரி ஸ்ட்ரெஸ் என்றார். எனவே அவருக்கு ஸ்லோ சைக்கிளிக் போன்ற எக்ஸர்சைஸ் கொடுக்கப்பட்டது. வயிறு உப்புசம், புண் இருந்தால் இரவு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். உடனடியாக மோஷன் போவார்கள். எதையும் உடனே சாப்பிட முடியாது. அடிக்கடி வயிறு அதிகமாக வலிக்கும். மேலும் சில சமயம் மோஷனில் ரத்தம் கூட இருக்கும். அவருக்கு வாழ்வியல் மாற்றம் தான் முதலில் அளிக்கப்பட்டது. புரோ பயோடிக் உணவை கொடுத்து அவருக்கு ஐ.பி.டியை தூண்டும் உணவுகள் தடை செய்யப்பட்டது. சூப்பில் இருந்து எந்தெந்த காய்கள் ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் கொடுத்தோம். ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

மேலும் பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் என்ற கெமிக்கல் கூட பிரச்சினை கொடுக்கும் என்பதால் சில பழங்களும் தவிர்த்தே டயட் கொடுக்கப்பட்டது. வயிறு புண்ணாகி வலி இருந்ததினால் வெயிட் லிப்டிங் செய்து குறிப்பாக அப்ஸ் வொர்க் அவுட் செய்து அதன் பிறகு அவர் உடலிற்கு ஏற்ப ப்ரோட்டினை கொடுத்தோம். சிலருக்கு முளை கட்டிய பயிறுகள் கூட ஒத்துக் கொள்ளாது. அதனால் வேக வைத்த சிக்கன் பீஸ் கூட எடுக்கலாம். 

இப்படி டயட் மாற்றம் செய்து தூக்கத்தை முதலில் சரிப்படுத்தினோம். தூக்கத்தை நெறிப்படுத்த மொபைல் போனை குறைப்பது தான் முதற்கட்ட வழி. அதிலும் தூங்குவதற்கு முன்பு எந்த மறுநாள் குறித்த கவலை எதுவும் இல்லாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். சிலர் நடக்கப்போகும் விஷயத்தை யோசித்து யோசித்து தூங்காமல் இருப்பர். ஆனால் நன்றாக தூங்கினாலே மூளை நன்றாக வேலை செய்து அந்த பிரச்சனைக்கு தீர்வை தானாக கொடுக்க முடியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வரும்போது கொடுக்க கூடாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இதுவே பெரியவர்களுக்கு வரும்போது முழுமையாக சாப்பிடக்கூடாததை தவிர்த்து விட்டு புது உணவுகளை அப்பொழுதே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அந்த கிளைண்டுக்கு நிறைய வாழ்வியல் மாற்றத்தை கொடுக்க ஒரு 60லிருந்து 70% ஓரளவுக்கு சரியாகி வந்தார். மோசமான தொந்தரவு இல்லாமல் ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிகிறது.