Skip to main content

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் முத்திரைகள் - ‘சித்த முத்திரை’ மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
bpcontrol - dr salai jaya kalpana Mudra 

இரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கும், பிசிஓடி பிரச்சனைகளுக்கும் முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

எப்போதும் பரபரப்பான மனோபாவம் கொண்டவர்களும், அதிகம் உப்பு எடுத்துக் கொள்பவர்களும் வியான முத்திரை செய்து வரலாம். அல்லது சில சூழ்நிலையில் மட்டும் ரத்த அழுத்தம் திடீரென்று சில பேருக்கு அதிகரிக்கும். அதாவது சாதாரண நேரத்தில் 120 என்று இருப்பது திடீரென்று 200 என்று தாண்டி, படிப்படியாக இறங்கும். நடு விரல், மோதிர விரல் இரண்டையும் மடக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்தி, மீத விரல்களை நீட்டி வைக்க வேண்டும். இதை இரண்டு கையிலும் வைத்து ஆகாயம் பார்த்து கைகளை வைக்க வேண்டும். இப்படி செய்து வர கண்டிப்பாக பத்து நிமிடத்தில் ரத்த அழுத்தம் குறைவதை கண் கூடாக அப்பரேட்டஸ் வைத்து கண்காணிக்கலாம். குறிப்பாக அடிக்கடி கோபம் வருபவர்கள், அதிகப்படி டென்சனில் பின் மண்டை வலிப்பது போன்ற தொந்தரவு இருப்பவர்ளுக்கு கண்டிப்பாக பலன் தரும். இதை பி.பி முத்திரை என்றும் கூறுவது உண்டு.

இந்த முத்திரையில் சரி ஆகவில்லை என்பவர்கள், வியான முத்திரையும் செய்யலாம். ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலை மடக்கி அதன் நுனிகளை கட்டை விரலின் நுனிப்பகுதியில் வைத்து மத்த விரல்களை நீட்டித்து வைக்கவேண்டும். இதை செய்வதற்கு முன் பி.பி. அளவை பார்த்துக் கொண்டு, 20 நிமிடம் இந்த முத்திரையை செய்த பின் மீண்டும் ஒருமுறை பி.பி. அளவை பார்க்க வேண்டும். இந்த முத்திரையில் பி.பி அளவை குறைக்க முடிந்தது எனில், அவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி செய்து வரலாம். பி.பி. முத்திரை அல்லது ரத்தபித்த சமநிலை முத்திரையை மிகவும் ஸ்ட்ரெஸ், அதிகப்படி கோவம் உள்ள நேரத்தில் இதை ஒரு 5 நிமிடம் செய்யும்போது நன்றாக பி.பி. குறையும். ஒரு நாளைக்கு 4 முறை செய்யலாம் அல்லது 2 வேளை 10 நிமிடம். ஒரு மாதத்தில் பி.பி.க்கு டேப்லெட் தேவையின்றி சரி செய்யமுடியும்.

bpcontrol - dr salai jaya kalpana Mudra 

அடுத்ததாக டயாபடீஸ் போன்ற நோயாக பெண்களுக்கு தாக்கக் கூடியது பி.சி.ஓ.டி என்ற தொந்தரவு. இதற்கு மிக முக்கியமான காரணங்கள், உடல் அசையாமல் இருப்பது, தேவையில்லாத ஸ்ட்ரெஸ் சிந்தனை தான். நம் ஸ்ட்ரெஸ்ஸை கண்ட்ரோல் செய்வது தான் சுகர் தொந்தரவுக்கும் செயல்படுவது. எனவே மன அழுத்தம் குறைவாக இருக்கும்போது, இந்த இரண்டு தொந்தரவையும் சமாளிக்க முடியும். முத்திரைகளோடு, எண்ணெய் குளியலும் மிக அவசியம். அடுத்து முத்திரை என்று வரும்போது 48 நாட்கள் தொடர்ந்து கழிவு நீக்க முத்திரையை செய்து வர வேண்டும். ஐம்பூதங்களையும் சமப்படுத்திவிட்டு, அதன் பின்னே அபான முத்திரை செய்து, பிராண முத்திரை செய்யவேண்டும். பிராண முத்திரையை காலை மாலையில் செய்து வரலாம். அபான முத்திரை செய்து, பிராண முத்திரையை மட்டுமே 30 நாட்கள் செய்து வருகையில் பி.சி.ஓ.டி தொந்தரவு, மாதவிடாய் தள்ளி தள்ளி சரியில்லாமல் வருவது போன்ற உபாதைகளை நிச்சயமாக குறைக்க முடியும். 

சினை முட்டை ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சி அடைத்து கருப்பையை நோக்கி வரவேண்டும். கர்ப்பம் தரிக்கவில்லை எனில், அதுவே ரத்தத்தோடு சேர்ந்து மாதாமாதம் மாதவிடாயுடன் சேர்ந்து வந்து விடுகிறது. இதில் சினை முட்டை முதிர்ச்சி அடையாமல் அப்படியே கருப்பை குழாயில் தங்கி நாள் கணக்கில் இருப்பதே பி.சி.ஓ.டி என்று அறியப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, முகத்தில் முடி முளைத்தல்,  தூக்கமின்மை, மாதவிலக்கு முறையின்மை, உடல் சோர்வு, மனச் சோர்வு, தோல் வறட்சி, தலை முடி வறட்சியாக காணப்படுவது என்பது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்கள் அபான முத்திரையை வெறும் வயிற்றில் கட்டை விரல் நுனியுடன், சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வர நிச்சயமாக சரியான நிலைக்கு வந்து, பி.சி.ஓ.டி, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு  தீர்வு காணலாம்.

Next Story

சிறுதானியங்கள் தோல் பிரச்சனையை கொண்டு வருமா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Salai Jaya kalpana | Mudra | Food2 

வாதம், பித்தம், கபம் உடலமைப்பினர் எப்போது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

காற்று, வறட்சி, கடினம் போன்ற மூன்று குணங்களை கொண்டவர்கள் வாத உடலினர். எனவே அதற்கு எதிரான உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். வறட்சி இல்லாத கொழகொழப்பான, வெதுவெதுப்பான, இலகுவான பதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கொடுக்கும். எண்ணெய் குறைப்பது என்பது இவர்களுக்கு ஏற்காது. அதே போல இவர்கள் கடினமான பொறித்த வேகவைத்த உணவு வகைகளை எடுத்து கொள்ளக்கூடாது. 

நீர் டயட், பச்சை காய்கறி டயட் போன்ற உணவு முறை வாத தேகத்தினருக்கு ஒத்துவராது. பழுக்காத துவர்ப்பான காய் பழவகைகள் தவிர எல்லா பழங்களும் இவர்களுக்கு ஒத்து வரும். அப்படி பழுக்காத, துவர்ப்பான, பழத்தை எடுக்கும்போது உப்பு சேர்த்து சாப்பிடலாம். பொதுவாகவே அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எனவே அவர்கள் உணவில், உப்பு, புளிப்பு, இனிப்பு வகைகள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா வகை அரிசி உணவுகளும் ஏற்று கொள்ளும். குறிப்பாக  பச்சரிசி வெப்பத்தை சிறிது தரக்கூடியது என்பதால் பச்சரிசி கஞ்சி, பொங்கல் என வைத்து சாப்பிடுவது ஏற்று கொள்ளும். சிறுதானியத்தை பொறுத்தவரை தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை இவர்களுக்கு தோல் வியாதிகளை கொடுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

நீர் எடுத்துக்கொள்வதில் கூட ஒவ்வொரு தேகத்தினருக்கும் அளவு மாறுபடும். வெதுவெதுப்பான நீர் மட்டுமே வாத தேகத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்டெர்மிடியேட் பாஸ்டிங்  போன்ற ஒருவேளை உணவைத் தவிர்க்கும் டயட் வகை வாத தேகத்தினருக்கு மட்டுமே ஒத்து வரும். இவர்கள் இந்த டயட்டை ஒரு மூன்று மாத கால எடுக்கும்போது தானாகவே பசி ஏற்பட்டு பித்த உடலாக மாறும். அந்த சமயம் டயட்டை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். தமிழ் மருத்துவ முறையை பொறுத்தவரை வாத உடலினர் உணவுக்கு முன் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பித்த உடலினர் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். கப உடலினர் உணவுக்கு அரைமணி நேரம் பின் எடுக்க வேண்டும். அதே போல வாத உடலினர் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு நீர் குடித்து விட்டு , பின்னர் சாப்பிடவேண்டும். பசியை தூண்ட சூப் எடுத்துக்கொள்ளுதல் இவர்களுக்கு ஒத்து வரும். அதுவே பித்த உடலினருக்கு வயிற்று புண் வந்து அல்சரை ஏற்படுத்தும்.

எனவே வாத உணவின் சாப்பிடும் போது இடையில் நீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உணவுக்கு பின் சூடான பானங்கள் குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு ஒத்து வரும். வெறும் வயிற்றில் நெய், இஞ்சி சாறு, நீராகாரம் போன்றவை வாத உடலினருக்கு கண்டிப்பாக ஒத்து வரும். இஞ்சி சாறும் சரியான முறையில் எடுக்க வேண்டும். இஞ்சியை கட்டாயம் தோல் சீவி ஒரு துண்டு எடுத்து  நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து அதை  அப்படியே அரைமணி நேரம் தெளிய வைக்க அடியில் மாவு போல படியும், அதை தவிர்த்து மேலாக தெளிவு நீரை மட்டும் எடுக்கவேண்டும். கூட சேர்த்து கொள்ளலாம். துவர்ப்பான பானங்கள் குறிப்பாக டீ வகைகள் , க்ரீன் டீ , பிளாக் டீ போன்றவை வாத உடலினர்  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Next Story

வாதம், பித்தம், கபம் உடலமைப்புக்கான உணவுகள்  -  சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உணவு முறையை பின்பற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் உடம்பு என்பார்கள். அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

வாத உடலினைப் பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் தவிர்க்கவே கூடாது. ஏனெனில் அவர்கள் பொதுவாகவே வறட்சியான உடலமைப்பை கொண்டிருப்பர். அவர்கள் பால் உணவுகளான தயிர், நெய், வெண்ணை, தாளித்த மோர் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசான எண்ணெயில் பெருங்காயம், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவையே தாளித்து உப்பு கலந்து மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கப உடலினரைப் பொறுத்த வரை வெள்ளை உணவுகள் விஷம் போன்றது. கபம் என்றால் காற்றை குறிக்கும். இயல்பாகவே அவர்கள் எப்போதும் நிறைய சிந்தனை ஓட்டத்துடன் இருப்பர். எனவே இரவில் உறங்க சிரமப்படுவர். அவர்களெல்லாம் இரவில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு தூங்கலாம். சர்க்கரை சேர்க்காத அல்லது எலுமிச்சை கலந்த கார்பனேட்டட் பானங்களான சோடா போன்றவை மட்டுமே ஒத்து வரும். உணவுக்கு பின் எடுக்க கூடிய காபியோ, சூடான பானங்களும் அவர்களுக்கு ஒத்து வரும். பழங்களை பொறுத்தவரை எல்லா வகையும் அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். 

கீரை வகைகளை பச்சையாக ஸ்மூத்தி போன்றோ, வேக வைக்கமாலோ சாப்பிட கூடாது. கருணை கிழங்கு தவிர வேறு எந்த கிழங்கும் வாத தேகத்தினருக்கு ஒத்துக்கொள்ளாது. துவரம் பருப்பை வேகவைக்கும் போது பெருங்காயமும், விளக்கெண்ணெய் சேர்த்து  சாப்பிட்டால் அவர்களுக்கு வாயு தொந்தரவு எடுக்காது. அவர்களுக்கு பாசி பருப்பு, கொண்டைக் கடலை  மட்டுமே அஜீரண தொந்தரவு செய்யாது. கொண்டைக் கடலையையும் உப்பு காரம் சேர்த்து வேகவைத்த சாப்பிட வேண்டும். வாத தேகத்தினருக்கு  கை, கால் வலி ஏற்படும்போது கொஞ்ச நாளைக்கு நல்லெண்ணெய் தவிர்த்து விட்டு, நெய், கடலெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை வாதம், கபம் உடலமைப்பு கொண்டவர்களுக்கு வேகவைத்த கோழிக்கறி சூடு ஆனாலும் ஒத்துக்கொள்ளும். கடல் மீன்கள், சிறிய அளவில் ஆட்டுக்கறி போன்றவை சேர்த்து கொள்ளலாம். பித்த தேகத்தினரும் ஆட்டுக்கறி சேர்த்து கொள்ளலாம். வாத தேகத்தினர் முட்டை, கருவாடு வகைகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாயை பொறுத்தவரை நார்த்தங்காய், இஞ்சி வகைகள், மற்றும் அப்பளம் போன்ற உப்பு வகைகள் வாத தேகத்தினருக்கு ஒத்துக் கொள்ளும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிக நேரம் உடல் முழுக்க வைத்து வெயிலில் நின்று அதன் பின்னர் குளிக்க வேண்டும். அவர்கள் பொதுவாகவே மிதமான வெந்நீரில் குளிப்பது நன்று. அதே பித்த தேகத்தினர் வெயில் ஆரம்பிக்கும் முன்பு  குளித்து முடித்து விட வேண்டும். வாத தேகத்தினர் கால்களில் குளிர்ச்சியோடு இருக்கும். பித்த தேகத்தினருக்கு சூடு தலையில் தேங்கும். எனவே வாத உடலினர் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக தலை வரை வெந்நீர் ஊற்ற வேண்டும்.