Skip to main content

உடல் வெப்பம் கூட பாஸ்வேர்டு திருட்டுக்கு உதவும்?

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

உலகத்தையே சுருக்கி ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களுக்குள் வைத்துவிட்டோம். நமக்கு மட்டும் தெரிந்த அந்த உலகிற்குள் ஆயிரம் ரகசியங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அது யாராலும் கண்டுபிடிக்கப்படாது என்று நம்மால் உத்தரவாதமாக சொல்லமுடியுமா? உங்கள் உடல் வெப்பமே அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்று. 
 

password

 

 

 

ஆம்.. உலகிலேயே மிகக்கடினமான, எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத இந்த பாஸ்வேர்டுகளைக் கண்டுபிடிக்க, ஹேக்கர்கள் புதிய முறையைக் கையாள்கிறார்களாம். தெர்மல் இமேஜிங் முறைப்படி ஒருவர் தான் பயன்படுத்தும் சாதனத்தின் பாஸ்வேர்டை சில வழிமுறைகள் மூலம் கண்டுபிடிக்கிறார்களாம். இதற்கு ‘தெர்மனேட்டர்’ (Thermanator) என்ற பெயரும் வைத்திருக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அறிவியலாளர்கள்.
 

கலிஃபோர்னியாவில் உள்ள இர்வின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நான்கு விதமான கீபோர்டுகளை 31 வெவ்வேறு நபர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த கீபோர்டுகள் மிகத்தெளிவாக தெரியும் வண்ணம் ஒரு தெர்மல் கேமரா முன்கூட்டியே பொருத்தப்பட்டுள்ளது. இந்த 31 பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எண்டர் செய்த பின்னர், தொழில்நுட்ப அறிவு இல்லாத நான்கு பேர் தெர்மல் இமேஜிங் மூலம் அந்த பாஸ்வேர்டுகளை சரியாக கண்டுபிடிக்கின்றனர். தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களே கண்டுபிடித்தால், விவரம் தெரிந்த ஆட்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன?
 

தகவல் திருட்டைத் தடுக்க புதிய முறைகளைக் கையாளவேண்டும் என இந்த ஆய்வு முடிவு வலியுறுத்தியிருக்கிறது.  

 

Next Story

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வந்த குறுஞ்செய்தி; விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Center govt orders inquiry into warning text messages sent to opposition leaders

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கித் தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மேலும், அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எச்சரிக்கை குறுந்தகவல் வந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த எச்சரிக்கை குறுந்தகவல் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இது போன்ற குறுந்தகவல் வந்துள்ளதாகவும்” தெரிவித்தார்.  

 

 

Next Story

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.