Skip to main content

கர்ப்பிணிகளுக்கு பேருதவி புரியும் குங்குமப் பூவின் நற்பலன்கள் பற்றி தெரியுமா..?

Published on 12/12/2019 | Edited on 12/12/2019


கர்ப்பம் தரித்துள்ள பெண்களுக்கு குழந்தை அழகாக பிறக்க வேண்டி நம்மூர்களில் குங்குமப்பூ-வை சாப்பிட கொடுப்பார்கள். குங்குமப் பூ இன்றைய வெங்காயத்தை போல வருடம் முழுவதும் விலையில் டாப்பாக இருக்கும் ஒரு பொருள். விலை அதிகம் என்றாலும் அதனால் கிடைக்கும் மருத்துவ பலன் என்பது மிக அதிகம். முக்கியமாக கர்ப்பம் தரித்த பெண்கள் 5வது மாதம் தாண்டிய பிறகு குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறப்பு எளிதாக இருக்கும். மேலும் பிரசவ வலி அதிகம் தெரியாது என்றும் சொல்லப்படுகிறது.
 

gh



மேலும், குங்குமப்பூவை பொடியாக்கி அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டு அதில் சில சொட்டுகள் பால் விட்டு 5 நாட்கள் முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கரு வளையம் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளும் நிவர்த்தி ஆகும். மேலும், குங்குமப்பூவை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெண்ணை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள  கரும்புள்ளிகளும் மறைந்து விடும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. மேலும் குழந்தை பிறப்புக்கு பிறகும் குங்குமப்பூவை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் தாய்மார்களுக்கு இரத்த விருத்தி அதிகம் கிடைக்கும். மேலும் பசியை தூண்டும் ஆற்றல் குங்குமப்பூவிற்கு அதிகம் உண்டு என்றால் அது மிகையல்ல.
 


 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை

Published on 20/12/2023 | Edited on 20/12/2023

 

 Woman rescued by helicopter has baby boy

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் நேற்று மாலை மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண்,  3  குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.