Skip to main content

டிஜிட்டல் சமூகத்தின் புதிய ஆபத்து... வாட்ஸ்அப்பிடிஸ் பிரச்சனை குறித்து அறிவோம்...

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

basic things need to know about WhatsAppitis

 

இன்றைய நவீன உலகில் செல்ஃபோன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு. அதேபோன்று, செல்ஃபோன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்ஃபோன்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

 

’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி, நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்ஃபோன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல், தேவைற்ற செயல்களில் செல்ஃபோன்களைப் அதிகப்படியாகப் பயன்படுத்துவது, சில விசித்திரமான உடல் பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆம்! நீங்கள் நீண்ட நேரம் செல்ஃபோன் உபயோகப்படுத்தினால், வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் உபாதை உங்களுக்கு வரக்கூடும்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்றால் என்ன?

 

நம்முடைய இருதரப்பு மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கட்டைவிரல் இரண்டிலும் அதிகபடியான வலி ஏற்படுவது வாட்ஸ்அப்பிடிஸ் பிரச்சனை ஆகும். அதிகப்படியான செல்ஃபோன் பயன்பாட்டினால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) பிரச்சனை முதலில் எப்படி கண்டறியப்பட்டது?

 

வாட்ஸ்அப்பிடிஸ் பற்றி முதல் செய்தி, கடந்த 2014 ஆம் ஆண்டில் தி லான்செட் எனும் மருத்துவ இதழில், 34 வயதான மருத்துவர் மூலம் வெளியானது. அவர், திடீரென தனது மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கட்டைவிரல் இரண்டிலும் அதிகப்படியான வலி ஏற்பட்டதை உணர்ந்தார். அந்த வலியானது, மருத்துவருக்குத், தொடர்ச்சியாக 6 மணி நேரத்திற்கும் மேலாக செல்ஃபோன் உபயோகப்படுத்தியதால் ஏற்பட்டது என கண்டறிந்தார்.

 

எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதுகுறித்து கூறும்போது, பொதுவாக, நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்தும்போது, நம்முடைய தசைநார்களில் அலர்ஜி மற்றும் காயம் ஏற்படலாம். இதன் காரணமாக, கட்டைவிரலை நகர்த்துவதில் வலி மற்றும் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

செல்ஃபோன் பயன்பாட்டில் குழந்தைகளுக்குக் கட்டுபாடுகள் அவசியம்!

 

செல்ஃபோன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் செல்ஃபோன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம். ஏனெனில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட முறை தங்கள் செல்ஃபோன் திரைகளைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

அதிகப்படியான செல்ஃபோன் பயன்பாட்டினால் ஏற்படும் பிற உடல் உபாதைகள்:

 

அதிக நேரம் செல்ஃபோனில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச் சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றைப் பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும்.

 

பொதுவாக, செல்ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு கார்பல் டன்னல் (Carpal Tunnel) நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

 

நீண்ட நேரமாக செல்ஃபோனில் மெசேஜ் டைப் செய்பவர்களுக்கு, கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், சில சமயங்களில் விரல்களை அசைக்க முடியாத நிலையும் கூட ஏற்படலாம்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) பிரச்சனை வராமல் தடுப்பது அவசியம்!

 

உங்கள் செல்ஃபோனை 15-20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம். அதேபோன்று, செல்ஃபோனைப் பயன்படுத்தும்போது, கை வலியைத் தவிர்க்க உங்கள் செல்ஃபோனினை இரு கைகளிலும் பிடித்து, உங்கள் மணிகட்டை நேராக வைத்து பயன்படுத்த முயற்சிப்பது நல்லது.

 

செல்ஃபோன் பயன்படுத்தும்போது, மெசேஜ் செய்வதைக் காட்டிலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது உங்கள் கட்டைவிரலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், செல்ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் செல்ஃபோனை வைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே, செல்ஃபோனில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

 

குறிப்பாக, செல்ஃபோனை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றி தெரிந்துகொள்வதற்கு சில செயலிகள் (App) வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீங்கள் ஒருநாளில் எவ்வளவு நேரம் செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் என்பதனை எளிதாக அளவிட முடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்தி, உங்களது செல்ஃபோன் பயன்பாட்டின் அளவைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

 

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) சிகிச்சையானது மற்ற மருத்துவ சிகிக்சை போலவே உள்ளது. இருப்பினும், இதனைக் குணப்படுத்துவதை விட தடுப்பு முறையே (வரும் முன் காப்பதே) சிறந்த தீர்வாகும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

 

 

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.