Skip to main content

கரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய மருத்துவ குறிப்புகள்...

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


உலக அளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கோவிட்- 19 கரோனா வைரஸ் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பறித்ததோடு, லட்சக்கணக்கானவர்களையும் பாதித்துள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் தாக்கதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து மருத்துவத்துறையைச் சேர்ந்த பலரும் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

 

ayurvedic remedies to contain corona vorus

 

 

அந்த வகையில் இந்தப் புதிய கரோனா வைரஸிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவும் செய்யவேண்டியவை குறித்து சென்னை ஆயுர்வேதா ஃபார்மஸியைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரசாத் மற்றும் தர்ஷனா திலிப் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதன்படி உலகம் முழுவதும் பரவிவரும் இந்த கரோனா வைரஸிலிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஆறு முக்கியமான இயற்கை மருத்துவ முன்னெச்சரிக்கை குறிப்புகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

அதன்படி, 

1) வெண்நொச்சி, வேம்பு, ஆமணக்கு, தைல இலை, பச்சை ஏலம், கிராம்பு, கற்பூரவள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி தினமும் இரண்டுமுறை ஆவி பிடித்தால் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2) உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளிப்பது.

3) சுவாசப்பாதையைச் சுத்தப்படுத்த தினமும் 'பிரதிமர்ஷா நஸ்யா' செய்யலாம்.

4)  தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் ஏதாவது ஒன்றினை நாசி மற்றும் வாய் பகுதியில் தினமும் இருமுறை தேய்க்கலாம். 

5) சுக்கு, மிளகு, துளசி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் ஆகியவற்றுடன் காபி தூள் சேர்த்து டிகாக்ஷன் செய்து அருந்தலாம். 

6) உப்புநீர் மற்றும் தேன் கொண்டு கபத்தை வெளியேற்றலாம். 

மேலும், இந்தச் சூழ்நிலையில், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வண்ணம் அவ்வப்போது சில ஆயுர்வேத மருந்துகளையும் உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் பிரசாத் மற்றும் தர்ஷனா திலிப் தெரிவிக்கின்றனர். 

அதன்படி, 

தசமூல கசாயம், தசமூல கடுத்ரய கசாயம், அமர்தோதரம் கசாயம்,இந்துகந்தம் கசாயம், தாளிசபத்திரி சூரணம், சுதர்சன சூரணம், வாஸரிஷ்டம், கனகாஸவம், குஷ்மந்த ரசாயனம், அகத்திய ரசாயனம் ஆகியவற்றையும் உடல்நலம் காக்க எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். 

மேலும், மக்கள் மருத்துவர்களிடம் தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 

 

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.