Advertisment

இந்த விஷயத்துக்கு ஆப்பிள் சரிப்பட்டு வராது...?

ஆப்பிள் ஐ - ஃபோன் எப்போதுமே தனி அங்கீகாரத்தைக்கொண்டது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் அதன் மேல் ஒரு சிறிய சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ கருவியை பொருத்துவதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே சென்றவர்களின் ஆப்பிள் ஐ - ஃபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மொத்தமாக செயலிழந்துள்ளது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்னவென்று ஆராயிந்து பார்த்தபோது, சுமார் 120 லிட்டர் ஹீலியம் வாயு ஐந்து மணி நேரமாக ஐ - ஃபோன் மற்றும் அதன் சாதனங்களுக்குள் சென்றதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ipho

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு அனைத்து ஆப்பிள் ஃபோன்களுக்கும் இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் ஐ - ஃபோன் 6 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களில் மட்டும்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்தப் பிரச்சனை ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு எந்த வகையான பிரச்சனையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisment
apple iphone Iphone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe