Skip to main content

மனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்?

Published on 12/11/2018 | Edited on 12/12/2018

இதுவரை மனித மூளையை வெல்லும் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. ஆனால், அதையும் செய்து மனிதன் சாதித்திருக்கிறான்.

 

ss

 

 

மனிதமூளை ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கோடி செயல்பாடுகளை இயக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கு இணையான ஸ்பின்னேக்கர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது. இந்த கம்ப்யூட்டரில் உள்ள சிப் ஒவ்வொன்றும் 10 கோடி டிரான்சிஸ்டர்கள் அல்லு கடத்திகளைக் கொண்டிருக்கின்றன.

 

ss

 

 

நமது மூளையில் உயிரியல் நியூரான்கள்தான் அடிப்படை அணுக்களாக இருக்கின்றன. நமது நரம்பு மண்டலத்தில் உள்ள இந்த அணுக்களில் இருந்து வெளிப்படும் சுத்தமான மின் வேதியியல் ஆற்றல்தான் தகவல்களை பரிமாற உதவுகிறது. இந்தச் சூப்பர் கம்ப்யூட்டர் கோடிக்கணக்கான சிறு தகவல்களை ஆயிரக்கணக்கான பகுதிகளுக்கு ஒரே சமயத்தில் அனுப்பக்கூடியவை என்று இந்த கம்ப்யூட்டரை வடிமைக்க காரணமான ஸ்டீவ்ஃபர்பெர் கூறியிருக்கிறார். பாக்கலாம், இதாவது மனித மூளையை வெல்லுமா என்று!

Next Story

மூளையில் நெளிந்த 8 சென்டிமீட்டர் புழு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 An 8 cm worm coiled in the brain

 

உலகிலேயே முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் நெளிந்து கொண்டிருந்த புழு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் மூன்று வாரங்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஜனவரி 2021ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வறட்டு இருமல் மற்றும் இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை இருந்தது. இரண்டு ஆண்டுகளாக நிமோனியா மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். 2022-ல் சுமார் மூன்று மாத காலம் அவர் மறதி மற்றும் மோசமான மன அழுத்தத்திற்கும் உள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் ஆய்வு அவருடைய மூளையில் காயம் இருப்பதைக் காட்டியது.

 

தொடர் சிகிச்சையின் மருத்துவ ஆய்வில் அவருடைய மூளையில் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற ஒரு வகையான புழு ஒன்று உயிருடன் நெளிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கீரை பறிக்கும் வேலை செய்து வந்த அந்த பெண்ணின் உடலுக்குள் இந்த ஒட்டுண்ணி புழுவின் முட்டைகள் நுழைந்து மூளைக்குச் சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது சுமார் 8 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த புழு பெண்ணின் மூளையில் இருந்து உயிருடன் அகற்றப்பட்டுள்ளது. 

 

 

Next Story

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை - மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

pig heart human

 

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மருத்துவர்கள், மருத்துவ வரலாற்றில் புதிய உச்சமாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

 

இதன்காரணமாக டேவிட் பென்னட்டை காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தியுள்ளனர்.

 

தற்போது டேவிட் பென்னட் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பின்னர் பன்றியின் இதயம் டேவிட் பென்னட்க்கு பொருத்தப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர். தற்போது அதேநாட்டை சேர்ந்த மருத்துவர்கள் சிலபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புகளுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.