கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (31.01.2026) காலை தொடங்கியது. அதாவது தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, சனிக்கிழமை காலை 07.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் கருங்குழி வள்ளலார் சன்னிதியிலும் , காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisment
இதனையடுத்து வள்ளலார் சத்ய ஞானசபையில் 155ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (01.02.2026) காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை (பிப்ரவரி 2) காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
Advertisment
Follow Us